நாகரிகம்..!!ம்ம்..நான் சொல்வது உடை சம்பந்தப்பட்டது இல்லை..உணர்வு சம்பந்தப்பட்டது..!! நாகரிகமற்ற,லஜ்ஜையில்லாத சில மொழி அசைவுகள் ஏனோ எனக்கு பிடிப்பதில்லை...
பள்ளி முடிந்து காரில் ஏறும் ஒரு 10 வயசு பொடியன்,வயதான கார் டிரைவர் ஐ பார்த்து அதட்டும், " ஏய்..தொரசாமி! காரை எடு.."
தன் வயிற்று பிழைப்புக்காய் வீட்டு வேலை செய்யும் ,நன்றாய் வாழ்ந்து கெட்ட வயதான அம்மாவை பார்த்து அதட்டும் சிறு வயது எஜமானியின் "ஏண்டி...!ஒனக்கு அறிவில்ல "
இது மாதிரி கூனி குறுகி போகும் தோட்டகார அந்தோணி தாத்தா,கழிவுகளை அகற்றும் பள்ளிகூட மரகதம் அம்மா,கார் துடைக்கும் வேலு அண்ணன்.....இப்படி நிறையவே நம்மை சுற்றி....!!
நம்ம ஊரில் உயர் நிலை,தாழ் நிலை ன்னு தகுதி வாரியாய் தரப்படும் மதிப்பு,நாகரிகம்(?) எல்லாம் இன்னும் நம்மை "குரங்கு" மனிதர்களாகவே தொடரச் செய்யுதான்னு தெரியல...
அழகான சில விஷயங்கள் பார்க்கும்போது, மொழி எதுவும் தேவைபடாமல் அதை உணரும்போது நாகரிகம் இன்னும் கொஞ்சம் உயிரோட இருக்குனு நினைச்சிருக்கேன்...பார்த்த பல சம்பவங்களில் வெளிநாட்டு காரர்களாய் இருப்பது என் துரதிர்ஷ்டம்..:(
பள்ளி முடிந்து காரில் ஏறும் ஒரு 10 வயசு பொடியன்,வயதான கார் டிரைவர் ஐ பார்த்து அதட்டும், " ஏய்..தொரசாமி! காரை எடு.."
தன் வயிற்று பிழைப்புக்காய் வீட்டு வேலை செய்யும் ,நன்றாய் வாழ்ந்து கெட்ட வயதான அம்மாவை பார்த்து அதட்டும் சிறு வயது எஜமானியின் "ஏண்டி...!ஒனக்கு அறிவில்ல "
இது மாதிரி கூனி குறுகி போகும் தோட்டகார அந்தோணி தாத்தா,கழிவுகளை அகற்றும் பள்ளிகூட மரகதம் அம்மா,கார் துடைக்கும் வேலு அண்ணன்.....இப்படி நிறையவே நம்மை சுற்றி....!!
நம்ம ஊரில் உயர் நிலை,தாழ் நிலை ன்னு தகுதி வாரியாய் தரப்படும் மதிப்பு,நாகரிகம்(?) எல்லாம் இன்னும் நம்மை "குரங்கு" மனிதர்களாகவே தொடரச் செய்யுதான்னு தெரியல...
அழகான சில விஷயங்கள் பார்க்கும்போது, மொழி எதுவும் தேவைபடாமல் அதை உணரும்போது நாகரிகம் இன்னும் கொஞ்சம் உயிரோட இருக்குனு நினைச்சிருக்கேன்...பார்த்த பல சம்பவங்களில் வெளிநாட்டு காரர்களாய் இருப்பது என் துரதிர்ஷ்டம்..:(
ஒரு முறை..
ஆட்டோக்கள் பெருகி விட்ட இந்த காலத்தில் என்னவோ இப்போ எல்லாம் சைக்கிள் ரிக்ஷாக்களை அவ்வளவாய் பார்ப்பதே இல்லை...அரிதாய் அன்று மதுரை தெற்கு மாசி வீதியில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் செம வேர்வையோடு ஒரு 50 வயசு மதிக்க தக்க நம்ம ஊருக்காரர் ரிக்ஸா மிதிக்க மூணு வெளிநாட்டு காரர்கள் உட்கார்ந்து போய்கிட்டு இருந்தாங்க...கொஞ்ச நேரத்தில் சரியான வெயில். பழச்சாறு குடிக்க ஒரு கடையில் காத்திருந்தோம்..மீண்டும் அதே ரிக்ஸா..இந்த முறை ரிக்ஸா மிதித்தது அந்த மூணு பேரில் உள்ள ஒரு வெள்ளைக்காரர்..மீதி ரெண்டு வெளிநாட்டு காரர்கள் நம்ம ஊரு மனிதர் மேலே தோளில் கைபோட்டு வர கொஞ்சம் நெர்வசாய் நடுவில் உட்கார்ந்து இருந்தார் நம்ம ஊரு காரர்..
பார்த்தவுடனே சட்டுன்னு சந்தோஷமாய்..பரவசமாய் இருந்தது.
"ரிக்ஸா மிதித்து மிதித்து
காச்சு போன -அம்மனிதன்
கரும்பாதம்
அன்று ஒரு நாள் மட்டும்
மென்மையானது -
அந்த வெள்ளைக்காரன்
மனசுப்போலே...!! "
நம்மில் எத்தனை பேரு ஒரு ரிக்ஸா ஊழியருக்கு இந்த அளவுக்கு பரிவு காட்டி இருப்போம்னு தெரியலை..???
இன்னொரு சம்பவம்....
ஓசூர் நோக்கிய எங்கள் அதிகாலை பயணத்தில்,சரியான பசியில் சேலம் பை பாஸில்,ஒரு ஹோட்டல் லில் காலை உணவுக்காக எங்களுடன்,சில ஐயப்ப சாமி, முருக பக்தர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு காரரும் வெயிட்டிங்..அதிகாலையில் குறைவான ஊழியர்களே அங்கே இருந்ததால் ஆர்டர் பண்ணிய ஐட்டங்கள் ஒவ்வென்றும் வர தாமதம்..எங்கள் முகச்சுழிப்புகளை மிக அழகாய், தன் புன்சிரிப்பாலும், மன்னிப்பாலும் எங்களை சரி செய்த அந்த ஹோட்டல் சர்வர் பார்த்து ஒரு புறம் எனக்கு ஆச்சர்யம் என்றால், என்னை போலவே கவனித்து...சாப்பிட்டு விட்டு கிளம்ப தயாரான போது, தான் அன்பாய் கொடுத்த பணத்தை மறுத்த அந்த புன் சிரிப்பு சர்வருக்கு கை கொடுத்து,லேசாய் கட்டி பிடித்து பாராட்டிய வெளிநாட்டு காரரின் செய்கை பார்த்து எனக்கு பல மடங்கு ஆச்சர்யம்...
"அந்த சின்ன புன்முறுவலில் -என்
சினம் யாவும் போயாச்சு!!"
ஆட்டோக்கள் பெருகி விட்ட இந்த காலத்தில் என்னவோ இப்போ எல்லாம் சைக்கிள் ரிக்ஷாக்களை அவ்வளவாய் பார்ப்பதே இல்லை...அரிதாய் அன்று மதுரை தெற்கு மாசி வீதியில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் செம வேர்வையோடு ஒரு 50 வயசு மதிக்க தக்க நம்ம ஊருக்காரர் ரிக்ஸா மிதிக்க மூணு வெளிநாட்டு காரர்கள் உட்கார்ந்து போய்கிட்டு இருந்தாங்க...கொஞ்ச நேரத்தில் சரியான வெயில். பழச்சாறு குடிக்க ஒரு கடையில் காத்திருந்தோம்..மீண்டும் அதே ரிக்ஸா..இந்த முறை ரிக்ஸா மிதித்தது அந்த மூணு பேரில் உள்ள ஒரு வெள்ளைக்காரர்..மீதி ரெண்டு வெளிநாட்டு காரர்கள் நம்ம ஊரு மனிதர் மேலே தோளில் கைபோட்டு வர கொஞ்சம் நெர்வசாய் நடுவில் உட்கார்ந்து இருந்தார் நம்ம ஊரு காரர்..
பார்த்தவுடனே சட்டுன்னு சந்தோஷமாய்..பரவசமாய் இருந்தது.
"ரிக்ஸா மிதித்து மிதித்து
காச்சு போன -அம்மனிதன்
கரும்பாதம்
அன்று ஒரு நாள் மட்டும்
மென்மையானது -
அந்த வெள்ளைக்காரன்
மனசுப்போலே...!! "
நம்மில் எத்தனை பேரு ஒரு ரிக்ஸா ஊழியருக்கு இந்த அளவுக்கு பரிவு காட்டி இருப்போம்னு தெரியலை..???
இன்னொரு சம்பவம்....
ஓசூர் நோக்கிய எங்கள் அதிகாலை பயணத்தில்,சரியான பசியில் சேலம் பை பாஸில்,ஒரு ஹோட்டல் லில் காலை உணவுக்காக எங்களுடன்,சில ஐயப்ப சாமி, முருக பக்தர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு காரரும் வெயிட்டிங்..அதிகாலையில் குறைவான ஊழியர்களே அங்கே இருந்ததால் ஆர்டர் பண்ணிய ஐட்டங்கள் ஒவ்வென்றும் வர தாமதம்..எங்கள் முகச்சுழிப்புகளை மிக அழகாய், தன் புன்சிரிப்பாலும், மன்னிப்பாலும் எங்களை சரி செய்த அந்த ஹோட்டல் சர்வர் பார்த்து ஒரு புறம் எனக்கு ஆச்சர்யம் என்றால், என்னை போலவே கவனித்து...சாப்பிட்டு விட்டு கிளம்ப தயாரான போது, தான் அன்பாய் கொடுத்த பணத்தை மறுத்த அந்த புன் சிரிப்பு சர்வருக்கு கை கொடுத்து,லேசாய் கட்டி பிடித்து பாராட்டிய வெளிநாட்டு காரரின் செய்கை பார்த்து எனக்கு பல மடங்கு ஆச்சர்யம்...
"அந்த சின்ன புன்முறுவலில் -என்
சினம் யாவும் போயாச்சு!!"
நம்மில் பலர் பல நேரத்தில் புன்சிரிப்பு,நாகரிக உரையாடல், பாராட்டுதலை மறந்து விடுகிறோம்...ஆமாம் தான் இல்லையா?:))
நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ??!!!!