November 29, 2010

உன்னை பிடிக்காதபோதும் பிடிக்கும்..ரொம்ப பிடிக்கும்..!!!



 கரைபுரண்ட ஆற்று வெள்ளத்தை எல்லாராலும் சந்தோஷமா பார்க்க முடியுமான்னு தெரில..ஆனால்,எங்க ஊரு வைகையில் எப்பவாது நடக்கும் இந்த அதிசயத்தை கொஞ்சம் மிரட்சியுடன்,நிறையவே லயிச்சு பார்க்கத்தான் எனக்கு ஆசை...இப்போ அந்த அதிசயம் தான் நடக்குது இங்கே...

 
நான் சிறுவயதில் பார்த்த வைகை ஆறே வேறு.....
குட்டி குட்டி நீர் சுனைகள்,கரையோர அரசமர பிள்ளையார்,அதிகாலை ஆற்றங்கரையில் சலவை தொழிலாளர்களின் வேலை சுறுசுறுப்பு,நீர் குடித்து போகும் நாரை கூட்டங்கள்,பொதி சுமக்கும் கழுதைகளின் அணிவகுப்பு,ஆற்று மணலில் சிறுமிகளின் கிச்சு கிச்சு தாம்பாள விளையாட்டு, சிறுவர்களின் உற்சாக கம்மாய் மீன் வேட்டை....இப்படி பல..பல... :-)))

இப்போது ,,,என் அழகு வைகை உருக்குலைந்து...மணல் திருட்டு,சமூக விரோத செயல்களில் சிக்குண்டு ரொம்பவே பரிதாபமாய் வாடி தான் இருக்கு..:-(((


 
வைகை கரையோரம் அம்மா வீடு..என் சிறுவயது நிகழ்வுகளில் பெரும்பாலும் வைகையும் என்னுடன் கூடவே இருந்தது. சில அனுபவங்களை இப்ப நினைச்சால் கூட ரொம்பவே சிரிப்பு வரும். :-)))
 
என் ஆறு வயதில் பாட்டியுடன் நானும் தினம் தோறும் விடிகாலையில் வைகை கரையோர பிள்ளையார் கோவில் போறது வழக்கம். பாட்டி ஒரு குடத்தில் ஆற்று நீரை மோந்துட்டு வந்து பிள்ளையாரை குளிப்பாட்டி தீபம் ஏற்றி கும்பிடுவாங்க..பின்னாடியே நானும் ஒரு சின்ன டம்ளரில் ஆற்றில் நீர் எடுத்துட்டு வந்து பிள்ளையார் மேலே மெது மெதுவாய் ஊத்துவேன்...என்னவோ நானே சாமியை குளிப்பாட்டி விடும் சந்தோஷம்...அப்போ வைகையே உன்னை  ,பிள்ளையார்,அந்த குளிர் ,அந்த அரசமரம்,என் பாட்டி எல்லாமே ரொம்ப பிடிக்கும்...பிடிக்கும்..பிடி க்கும்...:))))
                                                             
"பாட்டியின்
குட நீரை விட-என்
பிடி நீர்
தந்ததாம்!!
கொள்ளை அழகு!!
என் பார்வையில்
கரையோரப்
பிள்ளையார்!!! :)))"
 

அப்புறம்,என்  8 வயதில் தெருவில் கிடந்த அழுக்கு குட்டி நாயை வீட்டில் எடுத்து வந்து சீராட்டி(?) பாராட்டி(?!#@) வளர்த்த என்னிடம் இருந்து பிரித்து வைகை ஆற்றில் கொண்டு விட்ட என் குட்டி தம்பியையும்,வைகையே உன்னையும் அப்போது ஏனோ பிடிக்க வில்லை...பிடிக்க வில்லை...பிடிக்கவில்லை...:-(((


"ஆற்றின்

சுடுமணலில்
அழுதுகொண்டே
நான்!-என்
நாய்க்குட்டி
தேடி.......!

என் விழிநீர் பட்டு

உன்
சலசலக்கும்
நீரோடை கூட
அமைதியானது!-நீயோ
என் புன்னகை
தேடி..........!"


வைகை மணலில் விளையாட செல்லும்போது  நான் மண்ணில் கைகளால் குவித்த மண் கோவில்களும்(?!),வீடுகளும்(@#?!) மறுநாள் வந்து பார்த்தும்,கலையாமல் இருந்த போதும்....


மாலை நேரத்தில், தாத்தாவுடன் கைகோர்த்து வைகை மணலில் காலாற நடக்கும்போது தட்டுப்படும் சிப்பிகளை கைநிறைய சேர்க்கும்போதும்....


வைகையே...உன்னை..ரொம்ப பிடிக்கும்..பிடிக்கும்...பிடிக்கும்....:-))))))


வைகையே..!!இப்போ எல்லாம் உனக்கு என்ன ஆச்சு? முழுக்க நீர் எல்லாம் வற்றி போயி ஏன் உருமாறி திரிகிறாய்..??சித்திரை திருவிழாவுக்கு மட்டுமே பொலிவுருகிறாய்..அப்புறம் மீண்டும் ஓட்டுக்குள் பதுங்கி கொள்கிறாய்...என்னை கொல்கிராய்??!!
 


"வைகையே!!

அந்தி சாயும்
அழகான தருணத்தில்
என் குழந்தையுடன்
உனைதேடி வருவேன்
!!

அவனிடம்

சிறிது காண்பித்து விடு-நீ
பூட்டி வைத்த

என் சின்னஞ்சிறு
காலடித்  தடங்களை...!!!!!! "











                                    

November 15, 2010

அட!! என்னைச் சுற்றி இத்தனை அழகா??




அட நெசமாலுமே நாகரிகம் டெவலப் ஆய்ட்டு வருது தான்...தாவணி கலாச்சாரம் எல்லாம் போன தலைமுறை உடை ஆய்டுச்சு.. மசக்கலி,ரசக்கலி..காலத்தில் இருக்கிறோம் )) .ஜீன்ஸ் கூட அநேகமா ஓல்ட் பேஷன் ஆய்ட்டு வருதுன்னு நினைக்கிறேன்...ஓகே..ஓகே..எதுக்கு இதை சொல்றேன்னால்....

சமீபத்தில்,ஓர் அதிகாலையில் என் சென்னை நோக்கிய பயணத்தில்...மாமண்டூரில் இருந்து ஒரு 30 கி.மீ க்கு முன்னாடி ஓர் அழகான வயல்வெளி.....அப்போ தான் ஒரு சுவாரஸ்யம்...அங்கே காதில் தண்டட்டி போட்ட அப்பத்தாக்கள் அழகான  நைட்டி உடையில் வயக்காட்டில் களை பிடிங்கிட்டு இருந்தாங்க...பார்த்துட்டு சட்டுன்னு சிரிச்சுட்டேன்..
)))


"கோடாலி கொண்ட போட்ட..
கண்டாங்கி சேல பாட்டி!!
எவ்வுடை தரித்தாலும்
நீ அழகு சீமாட்டி!!
உனக்கு ரொம்ப
அழகா இருக்கே நைட்டி!!"))


 போகும் வழியில் செம மழை..கொஞ்சம் ஒதுங்கி தேநீர் குடித்தோம்..அப்போது ஒரு குட்டிப்பையன் அங்கே நிறுத்தபட்டிருந்த பைக் கின் முன் சக்கரத்து டயர் மேலே ரொம்ப சீரியஸ்ஸாய் சிறுநீர் போய்கிட்டு இருந்தான்..ஏன் டயர் மேலே இருந்தன்னு அவனை கூப்பிட்டு கேட்டேன்..

அவன் சீரியஸ் ஆ இப்படி பதில் சொன்னான் "டயர் மேலே ரொம்ப சகதி..அதை கழுவினேன்க்கா.."
 

"நான் குடித்த

தேநீர் ருசியை விட
உன்
சிறுநீர்
சீர்திருத்தம்
அருமை!!" )))



தீபாவளி முடிஞ்சபிறகு பட்டாசு வெடித்த வெறும் காகித குவியல்களை பார்த்தால்,மனசில் ஒரு நொடி இதெல்லாம் பணம் தானே ன்னு தோணி மறையும்...

இந்த வாட்டி எங்க பக்கத்து ஏரியா வில் ஆந்திராவில் இருந்து கட்டிட தொழிலாளர்கள் குடும்பத்தோட வந்து டென்ட் போட்டு வேலை செஞ்சுட்டு இருக்காங்க தனியார்  காண்ட்ராக்ட் தினக்கூலி ஆட்களாய்!! 


ஏக்கமாய் வந்து பார்த்து போகும் அந்த சிறுவர்கள் உடை,இனிப்பு எதையும் விரும்பவில்லை..கொஞ்சம் பட்டாசு கொடுத்தோம். அவ்வளவு சந்தோஷம் அவங்களுக்கு..

அவங்க இருந்த டென்ட் பக்கம் நாங்க கொடுத்த பட்டாசு போட்டுகிட்டு இருந்ததை பார்க்கும்பொழுது...ம்ம்...என்
னவோ அந்த காகித குவியல்கள் பணமாய் தெரியவில்லை...


"வெடித்துச் சிதறிய
ஒவ்வொரு காகிதத்திலும்-உன்
பட்டாசு சிரிப்பு!
அழகே! உன்னைச் சுற்றி நான்!!"

November 9, 2010

கல்லறையை தோண்டும் மந்திரவாதி மீடியாக்கள் !!!



தீபாவளி நல்லபடியா முடிஞ்சதா?...தீபாவளி முதல் நாள் நான் பார்த்த அடைமழை&பேய் மழை இரவில் ,  ஓலைக்குடிசை மறைவில் சோகமாய் மாவு வித்துகிட்டு  இருந்த பாட்டிக்கும்,புதுசெருப்பை மழை தண்ணியில் தவற விட்டுட்டு , புலம்பிகிட்டே  தேங்கி கிடந்த தண்ணிக்குள் கை விட்டு தேடி கொண்டு இருந்த நடுத்தர ஏழை மனிதருக்கும்,ஒரே ஒரு பழைய தையல் மெஷினை ரோட்டு ஓரமாய் போட்டு ஏக பிசி யாய் தச்சிட்டு இருந்த வயசான டைலர் தாத்தாவுக்கும் கூட நல்லபடியா தீபாவளி முடிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்...

அது போகட்டும்...

உண்மையை மறைக்கிறதும்,பொய் சொல்றதும் ரெண்டும் ஒண்ணா??

(... Hypothetical
கொஸ்டின்..:(ஹீ...ஹீ)))    )

ம்ம்...ரெண்டும் வேற வேற பிரிக்க முடியும் அதன் சூழ்நிலையை   பொறுத்து இல்லையா??
 
(ஆமாம்...நம்மூரு அரசியல் வாதி சரியா இந்த ரெண்டையும் யூஸ் பண்ணமுடியும்...:))   )




இப்போ ஒரு பத்து நாளைக்கு முன்னாடி கோவையில் நடந்த குழந்தைகள் கடத்தல் கொலை நம்ம எல்லாருக்கும் தெரியும்...நிச்சயம் எல்லாருக்கும் ஏக வருத்தம் தான்...ஊடகம் தான் தகவலை ஒன்னு விடாமல் சொன்னது...அதெல்லாம் சரிதான்...ஆனால் .......

ம்...சில நேரங்களில் சில உண்மைகள் மறைக்கறது தப்பு இல்லைன்னு நினைக்கிறேன்...நல்லா கவனிக்கணும்..மறைக்க்கலாம்
னு தான் சொன்னேன்..பொய் சொல்லலாம்னு சொல்லலை...


இன்வெஸ்டிகேசன் பண்ண பண்ண ஒரு மனித மிருகம் அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் பண்ணி கொலைபண்ணி இருக்குனு ஊடகம் வெளியிட்டது...ம்ம்...அதை படிச்சபிறகு நமக்கு அந்த மனித மிருகங்கள் மேலே ஆத்திரம் வருவது ஒரு புறம் இருக்கட்டும்...ஆனால் அந்த குழந்தையின் பெற்றோர் க்கு...ம்ம்...இது ரொம்ப உணர்வுபூர்வமான மெல்லிய விஷயம் இல்லையா...தன்குழந்தை இப்படி தான் கொலை செய்யப்பட்டு இருக்காங்கிற அதீத வேதனை உலகம் பூராவும் இந்த விஷயம் பறைசாற்ற படுறதும் கூடுதல் வேதனை தான்  தந்திருக்குங்க்றது என் தனிப்பட்ட கருத்து...

(ம்ம்...எரியிற கொள்ளியில் இன்னும் எண்ணெய் விடுற மாதிரி தான்...)

NEWS- Anything NEW, that is NEWS  

இப்படி தான் ஊடகம் தன் சோலி பார்க்குது..மதுரையில் ஒரு ஆறு மாசம் முன்னாடி ஒரு பெண் கொலை செய்யபட்டாங்க...கணவர் வெளிநாட்டில் வேலை பார்கிறாங்க...இந்த பெண் கொலை செய்யப்பட்டவுடன் ஏகப்பட்ட விஷம கணிப்பு ஊடகத்திற்கு...தனியா இருந்த பெண் இறந்ததால் இஷ்டத்துக்கு அந்த பெண்ணை பத்திய தவறான கருத்துக்கள் சூடான செய்திகளாக  தினம் தோறும் பத்திரிகையில் வெளியிட்டது ...உண்மை ,பொய் அது எதுன்னு பிரச்சனை இல்லை...ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஊரை விட்டே போய்ட்டாங்க ..காரணம் மீடியா பண்ண அசிங்கமான கணிப்புகள் தான்..

(சர்க்குலேசன்...)


இதேமாதிரி சென்னையில் எங்கள் குடும்ப நண்பரின் நண்பருக்கும் இந்த கசப்பான அனுபவம் நடந்துருக்கு...நகைக்காக அவர் மனைவி கொல்லப்பட,வழக்கம்போலே அசிங்கமான கணிப்புகள்...இப்போ அவர் தன் வயதுக்கு வந்த மகள்,மகனுடன் வெளி மாநிலம் போயிட்டதா குடும்ப நண்பர் வருத்தமாய் சொன்னார்...

அதனாலே உண்மைகள் பொய்களா திரிக்கபடனும் சொல்ல வரல ...ஆனால் சில உண்மைகள் மறைக்கபடனும் இல்லாட்டி அதை மேற்கொண்டு பப்ளிசிட்டி க்காக திரிச்சு சம்பந்த பட்ட குடும்பங்களின் மனசை நொறுக்கிற மாதிரி இல்லாமல் இருந்தாலே நல்லது தான்...


(நயன்தாரா விஷயம் பரபரப்பா வந்துசுனால் அந்த நடிகைக்கு மார்கெட் வால்யு கூடும்..ஆனால் சராசரி மனிதர்கள் ன்னால்  வாழ்க்கையின் நடைமுறையே  கேள்வி குறியாக்கவும் செய்யுது)

 
இன்னைக்கு  நான் முதலில் சொன்ன மனித மிருகத்தில் ஒன்னு என்கவுண்டரில் கொல்லப்பட்டு இருக்கு...ரொம்ப நல்லவிஷயம்தான்  ...ஆனால் இங்கே நிச்சயம் உண்மை மறைக்கப்பட்டு இருக்கும்...என்கவுன்ட்டர்ங்க்றது உட்டாலக்கடி நாடகம்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்...ஆனால் ஊடகம் மறந்தும் இதுபத்தி கதை திரிக்காது....




(..சரி..சரி ரிலாக்ஸ்...)