April 18, 2011

சொர்க்கம் போகணுமா?...மதுரைக்கு வாங்க...:))))))))

  
(முஸ்கி : இந்த தலைப்பை படிச்சுட்டு குண்டக்க மண்டக்க யோசிச்சவங்களுக்கு  கம்பெனி பொறுப்பல்ல..:)) )

மதுரைன்னால் ....................மல்லிகைப்பூ !!
மதுரைன்னால் .....................சுவையான இட்லி..உணவுகள்..!!
மதுரைன்னால் .....................மீனாட்சி
யம்மன் !!
மதுரைன்னால் .....................தமிழ்சங்
கம்!!
மதுரைன்னால் .....................சினிமா !!
மதுரைன்னால் .....................நல்ல செண்டிமெண்ட்!!
மதுரைன்னால் .....................வீரம் !!
மதுரைன்னால் .....................வெள்ளந்தி மக்கள்!!
மதுரைன்னால் .....................விருந்தோ
ம்பல்!!
மதுரைன்னால் .....................ஜிகர்தண்டா
மதுரைன்னால் .....................கோவில்நகரம்
மதுரைன்னால் .....................தூங்காநகரம் 
மதுரைன்னால் .....................வைகை
 
அப்புறம் ..ஹீ..ஹீ..
.....................................................................
மதுரைன்னால் .....................ஆனந்தி...
:))
..............................
........................................
..............................
........................................
 
மிக மிக முக்கியமாய் ....

மதுரைன்னால் .....................சித்திரை திருவிழா...!!!


மதுரைக்காரியா இருந்தாலும்...இந்த சித்திரை திருவிழா கூட்டத்தில் மைக்ரோஸ்கோப் வச்சு கூட என்னைத் தேட முடியாது...ஏன் ன்னால், நான் அங்கே இருக்க வாய்ப்பே இல்லை...:))))

அடித்து.நெரித்து  செல்ல/செலுத்தப்படும்  படுபயங்கரமான கூட்டத்தில் மிதமிஞ்சிய வேர்வை குளியலில், மைக்ரோ/மேக்ரோ செகண்டில் எனக்கு காண்பிக்கப்படும் கடவுள் சிலையை,நான் பார்த்தும்/பார்க்காமலும் செல்லும் அந்த நொடிகளுக்காக என்னை நான்  பெரிதாய் நிர்பந்திப்பதில்லை...:))


                                                                        மதுரை சித்திரை திருவிழாவில் மக்கள் வெள்ளம் 


ஏனோ கடவுளை பக்தியாய் நோக்குவதை விட ,தனிமை பொழுதுகளில்,சலசலப்பில்லாத,மௌனமான நேரங்களில் பரவசமாய் பார்ப்பதே என் விருப்பமாகிறது...

 நாகரிகம்,தோற்றம்,பழக்க வழக்கங்கள் மாறினாலும் என் மண்ணில் கிராமத்து வாசனை இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது...

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் திருக்கல்யாண நாளில்,மங்கள கோலங்களால் ஊரையே அழகு படுத்தி,பட்டு சேலை சரசரக்க,கழுத்தில் புதுத்தாலி கயிறுடன்..அன்று எங்கள் ஊர் பெண்களை பார்க்க உங்களுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...(ஹீ..ஹீ..என்னையும் தான்....:))))))) )
 
என்ன தான் தனிமை பொழுதுகள் எனக்கு இஷ்டம் என்றாலும்...
 
வெகு அதிகாலை எழுந்து...மஞ்சள் பூசி குளித்து...ஈர தலைமுடியில் ஓரமாய் சிறிது பூ வைத்து...ஒன்று சேர்ந்து அமர்க்களமாய் சாமி பார்க்க புறப்படும் வெகு மலர்ச்சியான பக்கத்து வீட்டு அக்காக்களை ..அம்மாக்களை..அத்தைகளை பார்க்கும்போதும்........................

 திருவிழாவில்..வெயில் களைப்பில் இருக்கும் பக்தர்களுக்கு...அன்பர்கள் தரும் மண்பானை ஐஸ் மோர்,சுக்கு...திப்பிலி,வெல்லம் எல்லாம் போட்ட பானாக்கம், அங்கங்கே தள்ளுவண்டியில் ஆசை காட்டும் கீத்து மாங்காய் பத்தைகள்....எல்லாம் பார்க்கும் போதும்................


                                                               திருவிழாவில் தள்ளுவண்டி மாங்காபத்தைகள்



திருவிழா முடிந்து,அங்கங்கே சந்தனம் தடவிய மொட்டை தலை குட்டிப்பாப்பாக்களின் வாயில் இருக்கும் பீபீ க்களும்...கையில் இருக்கும் கலர் கலர் விசிறிகளும்...பலூன்களும்...இதை எல்லாம் பார்க்கும்போதும்.............. ............


 பெரிய பெரிய  ரோல்லர் கோஸ்டரில் எல்லாம் சுத்தி சுத்தி சலிச்சு போனாலும்...அந்த குட்டியூண்டு தரையை தொட்டு விட்டு போகும் சின்ன சின்ன ராட்டினங்களும் ...கலர் கலர் வளையல்கள் குலுங்கும் குட்டி சிறுமிகளை அதில் பார்க்கும்போதும்.............. .........


                                                     குட்டி ராட்டினத்தில் குட்டி ராட்சசிகள் 
  
தூரத்தில் தெரியும் திருவிழா சாமியை காட்ட தோள் மேலே குழந்தைகளை சுமந்து போகும் பாசக்கார உறவுகளை ...பார்க்கும்போதும்....


                                                    தோளில் சுமக்கும் பாசக்கார  மதுரக்காரய்ங்க 


சிறியவர்...பெரியவர் வயது பேதம் இல்லாமல்...சோப்பு தண்ணி டப்பியில் சிறு கம்பி வைத்து ஊதிவிட்டு , மிதக்கும்   சிறு சிறு காற்று முட்டைகளை பார்க்கும்போதும்..............

                                             திருவிழாவில் சோப்பு  முட்டவிடும் மதுர இளந்தாரி 
                                     
ம்ம்....!! சில அழகான விஷயங்களை இழக்கிறேனோ ன்னு...உள்மனசு சொல்லுது...:(((

( எங்கள் மதுரையில் இன்னைக்கு கள்ளழகர் திருவிழா  ) :))

டிஸ்கி: ஹலோ மக்காஸ்..!! இன்று முதல்  வரும்  ஞாயிறு  வரை சரியாய் ஒரு வாரம் வலைச்சரத்தில் எழுதுறேன்..(18/4/2011 to 24/4/2011)..வழக்கம்போலே உங்கள் ஆதரவை அங்கும் எதிர்நோக்குகிறேன்...!! இதை படிச்சுட்டு அப்படியே அங்கிட்டு போங்க...(வராட்டி பிச்சு..பிச்சு..கொன்னு..கொன்னு :)) )

இன்று வலைச்சரத்தில் :-அதகளப்படுத்தும்" அரசியல் அதிரடி  பதிவுகள்/பதிவர்கள் 
Wow..செம....பதிவுகள் ! /Interesting Posts
 பல்சுவை "பதிவர்"களும்..பின்னூட்ட புலிகளும்...
அழகான வலைப்பூக்கள்/Beautiful blogs
வலைச்சரத்தில் இசைக்கான பதிவு...
 புதுமுகம்...அவள் அறிமுகம்...

April 4, 2011

சத்தியமாய் வோட்டு போடுவேன் மக்களே!!ஆனால்...!!


ஹாய் மக்காஸ்!! வோட்டு போட ரெடி ஆகிட்டிங்களா? எனக்கு  இன்னும் பூத் ஸ்லிப் வரல :( ஆனால்,வோட்டர் ஐ.டி கார்டை கண்ணில் படுற மாதிரி எடுத்து வச்சிருக்கேன்.:) என்ன,என் சின்ஸியர் பார்த்து புல்லரிக்குமே??:)) எனக்கு வோட்டு போடுவதில் (ப்லாக் பதிவுகளுக்கும் சேர்த்து தான்:)) ) மிகுந்த ஆர்வம் உண்டு...:)))

சின்னஞ்சிறு சிறுமியாய் , பசை மாதிரி என் தாத்தா கூடவே ஒட்டிக்கொண்டு, கைபிடித்து நான் சென்ற இடங்களில் வாக்கு சாவடியும் ஒன்று. தேர்தல் நாள் அன்று, தாத்தா காலையில் நீராகரம் குடித்து விட்டு, அநேகமாய் முதல் ஆளாய் (பூத் வீட்டிக்கு மிக அருகில்) ஓட்டு போட போகும்போது, கூடவே நானும்,நானும்..:)) எனக்கும் விரலில் மை வைக்கனும்னு அழுது அடம்பிடிச்ச நேரங்களில், தாத்தா எனக்கு இட்டு விடும் bril கருப்பு ink மட்டுமே அந்த நொடி சந்தோஷ நிறைவு...:))))


தாத்தா வீட்டு முன் அறையில், ஓரமாய் ஒரு ஸ்டீல் ஸ்டூலில் ஆச்சி(பாட்டி) கொண்டு வந்து வைத்து விட்டு போகும் இஞ்சி,மிளகாய்,மாங்காய் கலந்த பிரெஷ் வாசனை மோர் வீற்றிருக்க :)) அந்த அறையை சுற்றி, என் தாத்தா மற்றும்,என் தாத்தா வயதை ஒட்டிய இன்னும் நிறைய தாத்தாக்களின் மடியில் குட்டி பாப்பாவாய் உட்கார்ந்து,உட்கார்ந்து, புரியாமல் நான் கேட்ட டாஸ் கேபிடல்,ரஷ்ய புரட்சி,லெனின் மார்க்சிசம்,திராவிட கழங்களின் பாரம்பர்யம் :)) பற்றிய விவாதங்கள் னு எல்லாமே அப்பவும்,இப்பவும்..இந்த நொடியிலும் எனக்கு சிறிதும் புரியாத வெறும் சத்தங்கள் தான் :))) 



ஓட்டு போடும் வயது எனக்கு வந்து,தேர்தலில் வோட்டு போட முதல் ஆளாய் செல்ல எத்தனித்தபோது,செல்ல பேத்தியாய் ,கை தாங்கலாய் வோட்டு சாவடிக்கு நான் அழைத்து கூட்டி  போக, அப்போது என் அருமை தாத்தா உயிருடன் இல்லை...



வாக்கு பதியும் ஆர்வம் மிகுதியாக இருந்தாலும்,எந்த சரியான வேட்பாளருக்கு போட வேண்டும் என்பதில் குழப்பம் தான் எனக்கு ஆரம்ப நாட்களில். குடும்ப உறுப்பினர்கள்  பெரும்பாலும் வித விதமான அரசியல் எண்ணங்களை கொண்டு இருந்தாலும்,இவங்களுக்கு மட்டுமே வாக்கிடு-ன்னு எந்த அறிவுறுத்தலும்,திணிப்புகளும் எனக்கு வழங்கபடாமல்..முழுக்க முழுக்க என் சுய எண்ணங்களுக்கு கொடுத்த சுதந்திரம் இன்னும் குழப்பத்தை கூட்டியது என்பதும் உண்மை...:))))))



பிறிது வந்த நாட்களில், அரசியலை பற்றிய கண்ணோட்டங்களை சிறிது கூர்ந்து கவனிக்க(?!)..எல்லாருமே அயோக்கியர்கள்,எதுக்கு இவங்களுக்கு வோட்டு போடணும் ங்கிற குழப்பம் வேற வந்து  வேற  மாதிரியாய் திசை திரும்பியது...:))



இப்ப ஒரு மாதிரி குழப்பம் போயிருச்சு...நான் தீர்மானிச்சுட்டேன்..யாருக்கு என் வாக்குன்னு...எப்படி ன்னு இந்த உரையாடலை படிச்சால் தெரிஞ்சுப்பீங்க...:)))



(மொட்டை மாடியில் உலா போன மாலை நேரத்தில்,எதிர் வீட்டு மாடி ஆன்ட்டியுடன் சிறிது உரையாடல் ..)


ஆன்ட்டி :  ஆனந்தி! எலெக்சன் ஜுரம் வந்திருச்சா?

நான் : கட்சிக்காரங்க கிட்டே கேக்குற கொஸ்டின என்கிட்டே மாத்தி கேட்டிங்களே ஆன்ட்டி....! :))

ஆன்ட்டி : சரி!சரி! கவர் பணம் டிஸ்ட்ரீபூட் பண்றாங்களா என்ன....எனி தகவல் ???


நான் : என் கைக்கு பணம் வரல...ஸோ, தெரியல....:))

ஆன்ட்டி : அச்சோ...அப்போ கொடுத்தால் வாங்கிப்பியா ?

நான் : எஸ்...:))

ஆன்ட்டி : ஆனந்தி..!! ஆர் யூ எஜுகேடட்? நீயே இப்படி பண்ணலாமா?

நான் : ஹீ..ஹீ...! எஜுகேடட் இல்ல...எச்சிக்கல னு வச்சுக்கோங்க...:))) !! ஆன்ட்டி...அது போகட்டும்! அப்போ பணம் கொடுத்தால் நீங்க வாங்க மாட்டேங்களா ? உங்க வீட்ல ஆறு வோட்டு ஆச்சே......3,000 ரூபா ல...அப்போ வேணாமா....?
 
ஆன்ட்டி (பதறி போய்) : எதுக்கு,எதுக்குங்குறேன்...அவங்

க சொந்த பணத்தையா பிச்ச போடுறாங்க...நம்ம வரிப்பணம் தானே...வாங்கினால் என்ன தப்பு..ம்ம்...வாங்கிக்கணும் ஒருவேளை கொடுத்தால்....!!!

நான் : ஹ...ஹ...ஹா.....

ஆன்ட்டி : யாருக்கு வோட்டு போட போற?

நான்: நான் எலியா இருக்கிறத விட புலியா இருக்க ஆசை ....:))

ஆன்ட்டி(புரியாமல்) : .....?!!!

நான்(நக்கலாய் ): எப்படியும் பிரபல கட்சி வேட்பாளர்களுக்கு லட்சகணக்கில் வோட்டு விழுகும். அதோடு நான் போடும் அந்த ஒரு வோட்டு பெருசாய் தெரியாமல் போய்டும்...ஸோ அப்போ நான் எலியா தானே தெரிவேன்...

ஆன்ட்டி(கடுப்பாகி): ஆமாம்..அதுக்கு என்ன இப்போ....

நான்: ஸோ,பிரபலமில்லாத அப்பிராணி சுயேட்சைகள் வாங்கும் அந்த அரிய(??!!) 40,50 வோட்டுகளில் என் ஒரு வோட்டு பெருசாய் தெரியும் போது நான் புலி தானே...:)))

ஆன்ட்டி : ம்ம்..

நான் : ஸோ, எனது வாக்கு பானை அல்லது குடை அல்லது எவர்சில்வர் குடம் அல்லது ராக்கெட் ..இந்த மாதிரி சின்னங்கள் இருந்தால் தான் ஒரே குத்து...:))))

ஆன்ட்டி(தலையில் அடித்து கொண்டு) : அடி பாவி...பாவி...ஜனநாயக துரோகி...

நான்: இட் ஸ் மீ?? ஓகே...தேங்க்ஸ் ஆன்ட்டி...:)))



(டிஸ்கி : சிறிது நேரம் முன்னர்  எங்கள் ஊரின் பிரபலமான ரவுடி அவர்கள்,  ('அட்டாக்'
என்று முதலில் தொடங்கும் அவர் பெயர்(முழு பேரை சொல்லிட்டு வீட்டுக்கு ஆட்டோ வரவா என்ன ..அஸ்க்கு புஸ்க்கு ..:)) ) சுயேட்சையாக போட்டி இடுவதால்...மீண்டும் யாருக்கு வோட்டு என்ற விஷயத்தில் எனக்கு  குழப்பம் ஏற்பட்டு...குழப்பத்தோடு முடிக்கிறேன்...:))))))



March 14, 2011

A Short Commercial Break...:))


(முஸ்கி :என்னை தேடும் அன்பு உள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு...:) தேடாத அன்பு உள்ளங்கள் படிக்க வேண்டாம்...:))

அன்பு மக்காஸ்....:))

ஒரே அன்பு மகன் முழு ஆண்டு தேர்வு ஆயத்தம் ஆவதற்கு ,கூடஇருந்து
உதவி புரிதல் னு:) கடந்த சில நாட்களாய் நானு ஒரே ஒலக பிஸி..:)) இடையில் சிறிது சிறிது இணையம் எட்டி பார்த்தாலும் அதுக்கும் ஆப்பு...நேற்று விருந்தினர்கள் ஆஜர் ...:) ஸோ, அடுப்படி...மற்றும் மகனுடன் நானும் சேர்ந்து படிப்பு( ஹீ...ஹீ...அதானே இந்த கால பெற்றோர் நிலைமை...) ன்னு சுனாமி வேக பிஸி இல் இருக்கிறேன்...(நூலத்தில் அருமையான புத்தங்கள் வாங்கி இன்னும் தொட்டு பார்க்க கூட நேரம் கிடைக்கலை...மாலை நேர மொட்டை மாடி காற்றினை மிஸ் பண்றேன் கொஞ்ச நாளாய் :) ஸோ  ரொம்ப பிடிச்ச விஷயங்களை கொஞ்ச நாளா கோட்டை விடுறேன்..:(( )

அவனுக்கு படிப்பில் உதவி புரிகிறேனோ இல்லையோ..ஆனால் அவன் தேர்வுக்கு படிக்கும்போது நான் கணினியில் கவனத்தை செலுத்த வேணாம்னு பார்க்கிறேன்...:)

so....

மக்காஸ்...என் கடமைகளை:)) சரிவர முடிச்சுட்டு இணையம் பக்கம் விரைவில் வருகிறேன்...

இந்த அறிவிப்பு கூட போடுவதற்கு முன் கண்ணா பின்னான்னு :)) யோசிச்சேன்..ஆனால் போன பதிவுக்கு முன்னாடி பதிவர் ரமணி அண்ணா "ஏன்மா ..புது பதிவு எதுவும் போடலை" னு அன்பாய் கேட்டு இருந்தாங்க..." அட நம்மையும் தேட கூட உடன்பிறப்புகள் இருக்காங்களேன்னு கொஞ்சம் சந்தோஷம்...ஸோ...என்னை தேடும் அன்புள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு...:))


மக்காஸ்...விரைவில்
சந்திப்போம்...

Takecare and Njoy..:)))


அன்புடன் ..

ஆனந்தி...:)

March 7, 2011

(சில) ஆண்களே! (சீக்கிரம்) திருந்துங்கப்பா!! :))



சில நேரம்....சில எரிச்சல்...சில பெண்கள்... இந்த பதிவிலேயே , சில ஆண்களின் மேலயும்  கடும் எரிச்சல் இருக்குனு குறிப்பிட்டு இருந்தேன். ஓகே..அதுக்கான சுபமுஹூர்த்தநாள் டுடே ஒன்லி..:-)


ஆண் உரிமை பாதுகாப்பு (?):) காவலர்கள் யாராவது இருந்தால்...:) நோ...நோ...அருவாளை கீழே போடுங்க...கூல்..கூல்...!! :))


சிறப்பு குணாதிசியங்களை கொண்ட கடுப்படிக்கும் (சில)ஆண்கள் பற்றிய புல்லரிக்கும்:) சம்பவங்களே இந்த பதிவு...:))


கடுப்பு :1
(இந்த வகை ஆண்கள், தன் துணை மேல் அதீத பிரியம்/அவ நம்பிக்கையில் எல்லா வேலைகளையும் தன் தலையில் ஏற்றி கொள்ளும் பக்கா  perfectionist :)) )


என் திருமணத்திற்கு முன் நடந்த சம்பவம் இது..
எங்கம்மா வீட்டருகில் இருந்த ஒரு மாமியை விடிகாலையில் கோலம் போடும்போது மட்டுமே பார்க்க முடியும். அதுக்குபிறகு அவங்க வீட்டுக்குள்ளே போயிட்டால், வெளியே வரவே மாட்டாங்க..அவங்க கணவர் அந்த மாமா கிட்டே கேட்டால்.."மாமி அசடு, ஒண்ணுமே தெரியாதுன்னு " சொல்வார். காய்கறி வாங்குவது முதல் இஸ்திரி போட்டு வாங்கிட்டு வருவது வரை எல்லாமே "ஆல் இன் ஆல் அழகு ராஜா " நம்ம மாம்ஸ் தான்...வங்கி பணியாளரான மாமாக்கு திடீர் என்று ப்ரோமோஷன் கிடைக்க திருவனந்தபுரத்திற்கு  மாற்றலாகி  கிளம்பி விட, அவர்கள் குழந்தைகளின் கல்வி சிக்கல்களுக்காக மாமி மட்டும் மதுரையில்.


அதற்கு பிறகு தான் ட்விஸ்ட். வாசல்படி தாண்டி பழகாத மாமிக்கு காய்கறி வாங்குவது முதல் வங்கி கணக்குகள், வெளி இடங்களுக்கு சென்று சில அவசிய விஷயங்களை செய்தல்,EB யில் பில் கட்டி வருதல்...இப்படி அன்றாட அத்யாவாசிய விஷயங்கள் எதுவும் செய்ய அவ்வளவு சிரமப்பட்டு மூச்சு திணறித்தான் போனாங்க..காரணம் மாமா,மாமியை  அப்பாவியாகவே ஒரு ஓரத்தில் உட்கார வச்சது தான்..


இப்படிப்பட்ட க்வாலிடி உடைய ஆண்கள், ஏதோ ஒரு கட்டத்தில் பயங்கரமாய் அவங்க துணை கஷ்டபடுவாங்கனு யோசிக்க மறந்துடுறாங்க....(எனக்கு இன்னும் அந்த மாம்ஸ் மேலே எரிச்சல் இருக்கு...)


கடுப்பு-2
(இந்த வகை ஆண்கள், ஆளை விட்டால் போதும் சாமி என எந்த வீட்டு பொறுப்புகளையும் தட்டி கழிக்கும் எந்த சிறு  வேலையையும்,சிறிதும் தன் தலையில் ஏத்திக்காத செம அசால்ட் ஜாலி பேர்வழிகள் :) )


ஒருமுறை, என் பையனுக்கு கடுமையான ஜலதோஷம். மருத்துவர் ரத்த,மல பரிசோதனை செய்ய சொன்னவுடன், பரிசோதனைக்கு கொடுத்து விட்டு ,நாங்கள் லேப் பில் வெயிட்டிங் .அப்போ ஒரு பொண்ணு ரெண்டு சின்ன குழந்தைகளை கூட்டிகிட்டு தன் கணவரோட வந்தாங்க. அதுக்கு பிறகு அவங்களுக்குள் நடந்த உரையாடல் பின்வருமாறு..


பெண்ணின் கணவர்: "கிளம்புறேண்டி. நீ டெஸ்ட் பார்த்து முடிச்சுட்டு போன் பண்ணு. பிக் அப் பண்ண வரேன்.."


 பெண் : "கொஞ்சநேரம் தான் இருங்களேன். பெரியவன் பாடா படுத்துவாங்க "


பெ.கணவர்: "அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது...அது உன் வேல ...எனக்கு ஏகப்பட்ட வேல இருக்கு நான் கெளம்புறேன்..."


பெண் : "ம்ம்...சரிங்க...வீட்டுக்கு போயி எதுவும் தூங்கிராதிங்க...அப்புறம் போன் பண்ணினால் முழிக்க மாட்டிங்க "


பெ.கணவர்: "இல்ல..இல்ல...! போயி டிவி தான் பார்க்க போறேன்..."


அப்புறம் கிளம்பிட்டார் அந்த தியாக வள்ளல்..அதுக்கு பிறகு அந்த குட்டீஸை சமாளிக்க முடியாமல் அந்த பொண்ணு பட்ட பாடு இருக்கே...அவங்களோட பெரிய வாண்டு @ இன்டர்நேஷனல் வாலு , இரத்த பரிசோதனை எடுத்த நர்ஸ் கையை கோவத்தில் நல்லா கடிச்சு வைக்க :) அந்த பொண்ணு கையில் வச்சிருக்கும் குட்டி பாப்பாவும் பசிக்கு அழுக ...ஐயோ..பரிதாபமாய் இருந்தது...அந்த இடமே ரணகளமாய் இருந்தது கொஞ்சநேரம்...அவங்க பையனை யாராலும் சமாளிக்க முடியலை.


அவங்க கணவர் கூட இருந்து உதவி செஞ்சு இருந்தால் எவ்வளவு நல்லா இருந்து இருக்கும் அந்த பெண்ணுக்கு...அந்த பெண்ணின் கணவரை நினைச்சாலே செம எரிச்சலா இருந்தது அப்போ ...




கடுப்பு-3
(இந்த வகை ஆண்கள், தன் துணையிடம் நல்லது/கெட்டது எதையுமே பகிர்ந்து கொள்வதோ, உரையாடுவதோ பெரிய பாவம்னு யோசிக்கும் ஈகோ மக்காஸ்...)


இதை எரிச்சல் னு சொல்வதா,வருத்தம்னு சொல்லவான்னு தெரியலை...


தற்போது, என் தந்தை ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்.அவர் பணியில் இருந்தபோது நடந்த ஒரு வருத்தமான விஷயம் இது..


அப்பாவுடன் வேலை பார்த்த ஒரு ஆசிரியர்,  இலட்சக்கணக்கில் பட்டுவாடா செய்யும் "ஏலச்சீட்டு " தொழிலையும் சைடு பிசினெஸாக செய்து வந்தார்.புல்லட் வண்டியில் சட சட்னு வரும் துறு துறு ஆசிரியர், ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைய...அதற்கு பிறகு தான் பெரிய பிரச்சனைகள்.


அவர் தன் தொழில் சார்ந்த எந்த விஷயங்களையும், தன் மனைவியிடம் சின்ன அளவில் கூட சொன்னதில்லை போலே. பாவம்! அந்த அம்மாவிடம் ,சீட்டு போட்ட மக்கள் டிமாண்ட் பண்ண, அடுத்து யாரு, யாருக்கு பண பட்டுவாடா பண்ணனும், வாங்கணும் னு எதுவும் தெரியாமல் அந்த அம்மா நிலை குழைஞ்சு போக...


அப்புறம் அப்பாவோடு,  சில ஆசிரியைகள், சில ஆசிரியர்கள்  சேர்ந்து,காப்பீடு பத்திரங்கள் எல்லாம் வீட்டில் தேடி(அதுவும் அந்தம்மாக்கு தெரியலை ) பணம் பெற்று தந்து சுமாராய் பிரச்சனைகளை முடிச்சாங்க....


ஒரு பக்கம் அந்த ஆசிரியர் மறைவு பெரிய வருத்தம் என்றாலும்...அவர் இப்படி அவர் மனைவியை பற்றி யோசிக்காமல் இருந்த (ஆசிரியராய் இருந்தும் கூட) க்வாலிட்டி கொஞ்சம் வருத்தத்தை மீறி எரிச்சலும் எட்டி பார்த்தது எனக்கு என்பது உண்மை...


அந்த அனுபவம் எங்கள் அனைவருக்கும் பெரிய பாடமாவே தான் நினைச்சுகிட்டோம்...சாவு என்னைக்கு வந்து நமக்கு கை காட்டும்னு தெரியாது...ஆனால் நம் இறுதி பயணத்திற்கு  பின்பு நம்மை மட்டுமே நம்பி இருந்த உறவுகளை திக்கு தெரியாமல் அலைய விடுவது துயரத்திலும் துயரம்...கஷ்டமோ/நஷ்டமோ, துக்கமோ/மகிழ்ச்சியோ துணையிடம் ஷேர் பண்ணினால் என்ன குறைஞ்சுட போகுது???


என் அப்பா, என் அம்மாவிடம் அவர் காலத்திற்கு பின்பு அம்மாவுக்கு கிடைக்கும் பாதுகாப்பு தகவல்களை (பென்ஷன் விவரம் உள்பட) மிகவும் ப்ராக்டிக்களாய் விளக்கியும்,அறிவிருத்தியும் இருக்கிறார்( பிள்ளைகள் நாங்கள் இருந்தும் கூட) கொஞ்சம் நாங்கள் சென்டிமென்டலாய் பீல் பண்ணினாலும், எங்கள் தந்தை சொன்னது..."இதெல்லாம் சுடும் நிஜங்கள் தான்" !!


ஓகே...மக்காஸ்...நீங்க யாராவ்து இருக்கிங்களா அந்த கடுப்படிக்கும் க்வாலிட்டியில் ??:)))

February 22, 2011

இவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...??!!!


அவ்வை ஷண்முகி படத்தில் மார்க்கெட் காட்சியில் மணிவண்ணன் டீம் டெல்லி கணேஷ் ஐ "தெளிய வச்சு தெளிய வச்சு "அடிப்பாங்க...அது காமடி க்கு தான் என்றாலும்...காட்சியமைப்பில் சொல்ல வருவது சம்பந்தப்பட்ட ஆளு அந்த "வலியை" தெளிவா உணரனும்னு...


நேத்து எனக்கு வந்த ஒரு நியூஸ் எஸ்.எம்.எஸ்..."kasab smiled as court upheld death sentence"

உண்மைய சொல்ல போனால் இந்த பதிவு போடுவதே இந்த எஸ் எம் எஸ் படிச்சு கடுப்பானத்தில் தான்...



கசாப்...
  அஜ்மல்
கசாப்...

இவன் பேரை சொன்னாலே....ஒவ்வொரு ஈவு இரக்கமுள்ள இந்தியனுக்கும் நெஞ்சு கொதிக்கும்,பதறும்..

 

நாட்டையே உலுக்கின ஒரு ஈவு இரக்கமற்ற ஒரு பயங்கரவாதி...கொஞ்சம் கூட மனுஷதனமே இல்லாமல் மும்பையில் நடந்த திடீர் தாக்குதலில் தாஜ் ஹோட்டல்...ரயில்வே ஸ்டேஷன் உள்பட பல இடங்களில் கும்பலுடன் பொதுமக்கள்,போலீசார் உள்பட 160 பேரை போட்டு தள்ளிய கும்பலில் இருந்த ஒரு கொலைகார குரூபி..



இவன் கும்பலில்,மற்றவர்கள் பரலோகம் போக..இவன் மட்டும் மாட்டினான்....மும்பை சம்பவம் முடிஞ்சு (26 /11 /2008 ) ...இன்னும் ....வருஷங்கள் ஓடிட்டு இருக்கு...




வாய்தா...மேல்முறையீடு...ன்னு வழக்கு ஒரு நீண்ட பயணம் போலே ஓடிட்டு தான் இருக்கு...நவம்பர் 2008 இல் பிடிபட்ட அவன்..இப்போ மார்ச் 2011 ....இப்ப வரை சிரிச்சுட்டே...பாதுகாப்போடு...
வாரம் ஒரு முறை சிக்கன் பிரியாணி சாப்டுட்டு வாழும்...சக மனிதனாய்(கைதியாய்(??), நடமாட விடும் அவலம் நம் நாட்டில் மட்டும் தான் நடக்குமோ...


கண்காணிப்பு காமெரா மூலம் சட்டத்திற்கு தேவையான அத்தனை ஆதாரம் சிக்கிய  பிறகும்...நம் இந்திய சட்டத்தில் உடனே தண்டனை வழங்க அப்படி என்ன விதிமுறைகள்..லொட்டு லொசுக்ஸ்..????????????!!!!!



என்கவுன்ட்டர் இல் போடுறவனை இன்னும் பொத்தி பொத்தி வச்சிட்டு இருக்கும் ஒரு எரிச்சல் தனமான விஷயம் சத்தியமா நம்ம நாட்டில் தான் நடக்கும்....


பின்ன...அரபு நாடுகளில் கொடுங்கோல் தண்டனை செய்பவர்களுக்கு எல்லாம் அவர்கள் கொடுக்கும் தண்டனை பார்த்து என்னடா இவனுங்க இப்படி பண்றாங்கன்னு கொஞ்சம் மிரண்டுருக்கேன் ...ஆனால் நேற்று என் முடிவை மாத்திகிட்டேன்...நம்ம நாட்டிலும் ஏன் இந்த தண்டனை நடைமுறை படுத்தகூடாது...???

ஒரு கொடூரமான கொலையாளி,விவரிக்கவே முடியாத ஒரு மகாபாவிக்கு.. இன்னும் பாதுகாப்பு கொடுத்து கிட்டத்தட்ட 16 கோடி ரூபா (அவன் பாதுக்காப்புக்காம்) ம்ம வரிப்பணத்தில் இருந்து செலவழிச்சு...(நேத்து கூட வீடியோ கான்பிரன்சிங் இல் தான் அவனுக்கு விசாரணை.).காரணம் பாதுகாப்பு...


இவனுக்காய் ஒரு இந்திய வக்கீலும் அவனுக்கு ஆதரவா ஆஜராகி...(வக்கீல் சங்கத்தில் சும்மா விட்டாங்களா அந்த வக்கீலை ???!!! )...நேத்து ஹை கோர்ட் மரண தண்டணைய ஊர்ஜிதம் பண்ணுச்சாம்...ஆனால் இன்னும் கூட அவனுக்கு சான்ஸ் கொடுத்திருக்காம்...நீ மேல் முறையீடு செஞ்சாலும் செய்யலாம் பா கண்ணு ...னு....(அடுத்து ஜனாதிபதி கருணை மனு னு ஒரு பிட் ட்டு இருக்கு...)


அதான் சொல்றேன்..லூசு தனமான சட்டங்கள் நம்ம நாட்டில் இன்னும் ஏன் வச்சிட்டு இருக்காங்க...அரபு நாட்டில் இப்படி ஒருவன் செஞ்சால் இவ்வளவு நாள் அவனை ஓவியமா வச்சிட்டு இருப்பாங்களா என்ன???


பக்கத்து நாடுகளின் தாக்குதல் தொடர்ந்து நம்ம நாட்டுக்கு அச்சுறுத்தல் வந்துட்டே இருந்தாலும்...எல்லா விஷயத்திலும் "சத்திய மேவ ஜெயதே" னு கடை பிடிச்சால் ...இது மாதிரி இளிச்ச வாயனுங்களா ஆகி  ..நமக்கு  ஓராயிரம் பாதிப்பு வருவது நிச்சயம்..உறுதி...



கசாபை  எல்லாம் நடுரோட்டில் வச்சு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட்டு கல் எரிஞ்சே கொல்ல பட வேண்டிய ஆள்..இவனுக்கு என்கவுன்ட்டர் இல் கூட  சீக்கிரமா அந்த மரணம் முடிய கூடாது....


நான் முதலில் சொன்னது போலே..தெளிய வச்சு..தெளிய வச்சு மரணம் உணர பட வேண்டும்...அப்போ சிரிக்க மாட்டான் கசாப்...எத்தனை குடும்பங்கள் இவனால் நாசமாய் போயிருக்கும்...


தீர்ப்பு ஹை கோர்ட் இல் வாசிச்சு முடிச்சதும்..கசாபால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மனைவி கதறி அழுதுட்டே சொல்லிருக்காங்க.."சீக்கிரம் இவனை இந்த வாட்டியாவது தூக்கில் போட்ருங்கன்னு"


போட்ருவாங்காலா ...??? ம்ம்...அதையும் பார்க்க தானே போறோம்....