February 22, 2011

இவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...??!!!


அவ்வை ஷண்முகி படத்தில் மார்க்கெட் காட்சியில் மணிவண்ணன் டீம் டெல்லி கணேஷ் ஐ "தெளிய வச்சு தெளிய வச்சு "அடிப்பாங்க...அது காமடி க்கு தான் என்றாலும்...காட்சியமைப்பில் சொல்ல வருவது சம்பந்தப்பட்ட ஆளு அந்த "வலியை" தெளிவா உணரனும்னு...


நேத்து எனக்கு வந்த ஒரு நியூஸ் எஸ்.எம்.எஸ்..."kasab smiled as court upheld death sentence"

உண்மைய சொல்ல போனால் இந்த பதிவு போடுவதே இந்த எஸ் எம் எஸ் படிச்சு கடுப்பானத்தில் தான்...



கசாப்...
  அஜ்மல்
கசாப்...

இவன் பேரை சொன்னாலே....ஒவ்வொரு ஈவு இரக்கமுள்ள இந்தியனுக்கும் நெஞ்சு கொதிக்கும்,பதறும்..

 

நாட்டையே உலுக்கின ஒரு ஈவு இரக்கமற்ற ஒரு பயங்கரவாதி...கொஞ்சம் கூட மனுஷதனமே இல்லாமல் மும்பையில் நடந்த திடீர் தாக்குதலில் தாஜ் ஹோட்டல்...ரயில்வே ஸ்டேஷன் உள்பட பல இடங்களில் கும்பலுடன் பொதுமக்கள்,போலீசார் உள்பட 160 பேரை போட்டு தள்ளிய கும்பலில் இருந்த ஒரு கொலைகார குரூபி..



இவன் கும்பலில்,மற்றவர்கள் பரலோகம் போக..இவன் மட்டும் மாட்டினான்....மும்பை சம்பவம் முடிஞ்சு (26 /11 /2008 ) ...இன்னும் ....வருஷங்கள் ஓடிட்டு இருக்கு...




வாய்தா...மேல்முறையீடு...ன்னு வழக்கு ஒரு நீண்ட பயணம் போலே ஓடிட்டு தான் இருக்கு...நவம்பர் 2008 இல் பிடிபட்ட அவன்..இப்போ மார்ச் 2011 ....இப்ப வரை சிரிச்சுட்டே...பாதுகாப்போடு...
வாரம் ஒரு முறை சிக்கன் பிரியாணி சாப்டுட்டு வாழும்...சக மனிதனாய்(கைதியாய்(??), நடமாட விடும் அவலம் நம் நாட்டில் மட்டும் தான் நடக்குமோ...


கண்காணிப்பு காமெரா மூலம் சட்டத்திற்கு தேவையான அத்தனை ஆதாரம் சிக்கிய  பிறகும்...நம் இந்திய சட்டத்தில் உடனே தண்டனை வழங்க அப்படி என்ன விதிமுறைகள்..லொட்டு லொசுக்ஸ்..????????????!!!!!



என்கவுன்ட்டர் இல் போடுறவனை இன்னும் பொத்தி பொத்தி வச்சிட்டு இருக்கும் ஒரு எரிச்சல் தனமான விஷயம் சத்தியமா நம்ம நாட்டில் தான் நடக்கும்....


பின்ன...அரபு நாடுகளில் கொடுங்கோல் தண்டனை செய்பவர்களுக்கு எல்லாம் அவர்கள் கொடுக்கும் தண்டனை பார்த்து என்னடா இவனுங்க இப்படி பண்றாங்கன்னு கொஞ்சம் மிரண்டுருக்கேன் ...ஆனால் நேற்று என் முடிவை மாத்திகிட்டேன்...நம்ம நாட்டிலும் ஏன் இந்த தண்டனை நடைமுறை படுத்தகூடாது...???

ஒரு கொடூரமான கொலையாளி,விவரிக்கவே முடியாத ஒரு மகாபாவிக்கு.. இன்னும் பாதுகாப்பு கொடுத்து கிட்டத்தட்ட 16 கோடி ரூபா (அவன் பாதுக்காப்புக்காம்) ம்ம வரிப்பணத்தில் இருந்து செலவழிச்சு...(நேத்து கூட வீடியோ கான்பிரன்சிங் இல் தான் அவனுக்கு விசாரணை.).காரணம் பாதுகாப்பு...


இவனுக்காய் ஒரு இந்திய வக்கீலும் அவனுக்கு ஆதரவா ஆஜராகி...(வக்கீல் சங்கத்தில் சும்மா விட்டாங்களா அந்த வக்கீலை ???!!! )...நேத்து ஹை கோர்ட் மரண தண்டணைய ஊர்ஜிதம் பண்ணுச்சாம்...ஆனால் இன்னும் கூட அவனுக்கு சான்ஸ் கொடுத்திருக்காம்...நீ மேல் முறையீடு செஞ்சாலும் செய்யலாம் பா கண்ணு ...னு....(அடுத்து ஜனாதிபதி கருணை மனு னு ஒரு பிட் ட்டு இருக்கு...)


அதான் சொல்றேன்..லூசு தனமான சட்டங்கள் நம்ம நாட்டில் இன்னும் ஏன் வச்சிட்டு இருக்காங்க...அரபு நாட்டில் இப்படி ஒருவன் செஞ்சால் இவ்வளவு நாள் அவனை ஓவியமா வச்சிட்டு இருப்பாங்களா என்ன???


பக்கத்து நாடுகளின் தாக்குதல் தொடர்ந்து நம்ம நாட்டுக்கு அச்சுறுத்தல் வந்துட்டே இருந்தாலும்...எல்லா விஷயத்திலும் "சத்திய மேவ ஜெயதே" னு கடை பிடிச்சால் ...இது மாதிரி இளிச்ச வாயனுங்களா ஆகி  ..நமக்கு  ஓராயிரம் பாதிப்பு வருவது நிச்சயம்..உறுதி...



கசாபை  எல்லாம் நடுரோட்டில் வச்சு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட்டு கல் எரிஞ்சே கொல்ல பட வேண்டிய ஆள்..இவனுக்கு என்கவுன்ட்டர் இல் கூட  சீக்கிரமா அந்த மரணம் முடிய கூடாது....


நான் முதலில் சொன்னது போலே..தெளிய வச்சு..தெளிய வச்சு மரணம் உணர பட வேண்டும்...அப்போ சிரிக்க மாட்டான் கசாப்...எத்தனை குடும்பங்கள் இவனால் நாசமாய் போயிருக்கும்...


தீர்ப்பு ஹை கோர்ட் இல் வாசிச்சு முடிச்சதும்..கசாபால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மனைவி கதறி அழுதுட்டே சொல்லிருக்காங்க.."சீக்கிரம் இவனை இந்த வாட்டியாவது தூக்கில் போட்ருங்கன்னு"


போட்ருவாங்காலா ...??? ம்ம்...அதையும் பார்க்க தானே போறோம்....

February 18, 2011

சிலநேரம்..சில எரிச்சல்..சில பெண்கள்..:))



இந்த பதிவை படிச்சிட்டு பெண்ணுரிமை(?!) கழகங்கள் யாரும் சண்டைக்கு வராமல் இருந்தாலே "யாம் பெற்ற பேறு" :))

(இங்கே "சில பெண்களை" பற்றி மட்டுமே சொல்ல போறேன் ..."சில ஆண்கள்" பற்றி மற்றொரு பதிவில் சொன்னால் போச்சு...:)) )

சில சமயங்களில், சில பெண்களின்,சில செயல்களை பார்த்தால்.. சில எரிச்சல்கள், சில கோவங்கள், சில வருத்தங்கள் உங்களுக்கு  வரலாம்..(ஹேய்...எத்தினி  'சில" ):)


எனக்கும் அப்படி வந்திருக்கு...:(

ஒருநாள்....

(என் தோழியிடமிருந்து போன்...
)

தோழி: ஆனந்தி..பாப்பாக்கு ஸ்கூல்ல ப்ராஜெக்ட் கொடுத்து இருக்காங்க..எனக்கு ஒண்ணும சரியா தெரில..நீ ஹெல்ப் பண்றியா..??

நான்: "சொல்லு என்னனு"...

தோழி: *மதுரை கலெக்டர் பெயர்?
                *இந்தியாவில் சமீபத்தில் பிரித்த புது மாநிலங்கள்...?
                * நம் துணை  ஜனாதிபதி பெயர்?
                * MLA - விரிவாக்கம் ?
                *பட்ஜெட் எதற்கு??

இந்த அரிய(?) கேள்விகளுக்கு பதில் தெரியாத தோழியை நினைத்து ஆச்சர்யபட்டு,அவளின் பாப்பாக்கு பதில் சொல்லி விட்டு தோழியிடம் பொதுஅறிவை வளர்த்து கொள்ளுமாறு அறிவுரை கூறினேன். இடைமறித்த அவள் "அஜீத்துக்கு அதுக்குள்ளே இப்படி நரைச்சிடுச்சேனு" வருத்தப்பட்டாள் :))..சரி..யக்காவ்...நீ சீரியல் பாரு..அதுக்கு தான் நீ சரியான ஆள்..னு சொல்லிட்டு போன் ஐ வச்சுட்டேன்...இத்தனைக்கும் தோழி B.com. & P.G.D.C.A  படித்தவள் ..

ம்ம்..என்னவோ நம்மில் பலருக்கு சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் காட்டும் ஆர்வம் மற்ற பொது விஷயங்களை தெரிஞ்சுப்பதில் ஆர்வம் கம்மியாய்டுது தான் இல்லையா??


இன்னொரு எரிச்சல்...

ஒரு நடுத்தர வயது அம்மா பாதி நாள் கோவில் சர்வீஸ்(??!!) பண்றதிலே தான் கழிப்பாங்க...இல்லாட்டி அந்த அம்மா கோவிலில் "ஒரு கும்பல் ஆப் பெண்களிடம் "பொறணி ஸ்பீகிங் இல் இருப்பாங்க...


அன்னைக்கு பிரதோஷம்...அதிசியமாய் நானும் கோவிலுக்கு ஆஜர்..ஒரு 7 அல்லது 8 வயசு பாப்பா முடியை விரிச்சு போட்டுட்டு(நீண்ட முடி) ரிப்பன்,சீப்பு எல்லாம் கையில் வச்சுட்டு அந்த அம்மாவை இப்படி கெஞ்சிட்டு இருந்தது.."அம்மா ஸ்கூல் ல இருந்து அப்பவே வந்துட்டேன்...காப்பி போட்டு தாம்மா..ப்ளீஸ்..டியூஷன் போவனும் மா..நேரம் ஆகுதும்மா...ப்ளீஸ் தலையாவது பின்னி விடும்மா...வீட்டுக்கு வந்துட்டு போம்மா..ப்ளீஸ் ம்மா..." அந்த அம்மா என்னவோ திட்டி அந்த குட்டியை விரட்டி விட்ருச்சு...

விரட்டி விட்ட பிறகு அந்த அம்மா கூட இருந்த பொறணீஸ் கும்பல்ஸ் கிட்டே சொல்றாங்க இப்படி "நமக்குன்னு ஒரு சுதந்திரம் இல்லை...ஒரு கோவில்ல கூட நிம்மதியா சாமி கும்பிட (?) முடியல..எப்ப பார்த்தாலும் புள்ள..புருஷன்னு பாக்க வேண்டிருக்கு..ஆணாதிக்க உலகம்..."ன்னு இன்னும் என்ன என்னவோ சொல்லுச்சு...


என்னவோ அந்த அம்மா குறிப்பிட்ட "அந்த ஆதங்கம்" என்னாலே ஏத்துக்க முடியலே..உரிமை வேற...கடமை வேற.....அந்த அம்மா ரெண்டுக்கும் கொழப்புதுன்னு மட்டும் தோணிச்சு...


கடைசி எரிச்சல் ...

சில வீடுகளில் வயசான கணவனை/மனைவியை தனியா விட்டுட்டு பக்தி,விரதம் அப்டிங்கிற பெயரால் கோவில் குளம் டேரா அடிக்கும் பெண்கள்/ஆண்கள் மேலே எப்பவும் எனக்கு வருத்தம் உண்டு...

எங்கள் வீட்டுக்கருகில் இப்படி சஷ்டி விரதத்துக்காக அந்த ஆன்ட்டி திருசெந்தூர் போயி மித மிஞ்சிய பக்தியில் அங்கேயே இருந்து விட, தனியாய் இருந்த அவங்க வயதான கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு எங்கள் ஏரியா வாசிகள் மருத்துவமனையில் சேர்ப்பித்தாங்க..


விரதம் எல்லாம் முடிஞ்சு நிதானமா வந்த அந்த அம்மா கிட்டே விஷயத்தை நாங்கள் பதட்டமாய் சொல்ல..கொஞ்சமும் சலனப்படாமல் அந்த அம்மா இப்படி சொன்னாங்க.." நான் எங்கே போனாலும்,எம்பெருமான் முருகன் பார்த்துகிட்டான் தானே ...." என்னவோ இதை கேட்டு..பக்தியை மீறி எரிச்சல் தான் வந்தது எனக்கு..

ம்ம்..சில நேரங்களில் ...சில எரிச்சல்கள் ...அதில் சில பெண்களும்...!!!!!



 

February 11, 2011

கள்ளக்காதல் சில!! நொறுங்கும் இதயம் பல.!!

"காதலில் ஏது நல்ல காதல்..கள்ளக் காதல்?"
அட ...அதானே..என்ன ஒரு அற்புதமான தத்துவம்...:))
 நம்ம புர(ச்சீ ..) இயக்குனர் சாமி சொன்னது தான் இது :))

காதலை உண்மையில் தரம் பிரிக்க தான் முடியுமா? வடிவேலு காமடி ஒன்றில் தற்கொலைக்கு முயலும் 'அல்வா வாசு" சொல்லும் வசனம் "காதல்னு வந்துட்டா..இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தா என்ன, &%$@*!#@*&^ இருந்தா என்ன "? :))


கிழபோல்டு சல்மான் ருஷ்டிக்கு இளசுகள் மேலே வரும் காதலும்(?!),அமரத்துவம் வாய்ந்த அமராவதி,அம்பிகாவதி காதலும் ஒரே அலைவரிசையில் தான் பொருத்தி பார்த்து காதல்னு (?!) முடிவு பண்ணனுமா?


மதுரை லாட்ஜுகளில் மட்டும் கடந்த ரெண்டு மாதங்களில் மூணு பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்காங்க.நகைக்காகவோ ,பணத்துக்காகவோ....ன்னால் அது தான் இல்லை. தன் புருஷன்,குழந்தைகளை விட்டுட்டு கள்ளகாதலனுடன் ஓடி வந்த அபலை(?!)கள்!!  இருப்பதை விட்டுட்டு,பறப்பதற்கு  ஆசைப்பட்டு வந்த இந்த காதல் தேவதைகள்
,அதே கள்ள உறவாலேயே கொல்லப்படுவதும் இன்னொரு வேதனை...

நல்லக்காதல் ....ன்னால் ...ன்னால்...னால் ...ல்.....

அட! அது பற்றி தான்  ஷேக்ஸ்பியர் ல இருந்து கவிஞர் தாமரை வரை புட்டு புட்டு வச்சுட்டாங்களே! நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை...

ஆனால் கள்ளக்காதல் பற்றி ,பத்தி பத்தியா சொல்ல சில விஷயங்கள் இருக்கு...

என் சித்தப்பா வீட்டின் எதிர்வீட்டில் எப்போ பார்த்தாலும் அந்த வீட்டம்மாக்கும்,அவங்க கணவருக்கும் சண்டை நடந்துட்டே இருக்கும். அவங்களுக்கு ஒரே பையன். அவனும் காதல் திருமணம் முடிச்சிட்டு வந்து அவன் புது மனைவியை அடிச்சு,தொவச்சிட்டு இருப்பான். அந்த குடும்பமே பல நேரங்களில் அப்நார்மலாவே என் கண்ணுக்கு தெரியும். சித்தி தான் ஒரு முறை சொன்னாங்க.. அந்த வீட்டம்மா தன் வயசுக்கு வந்த ரெண்டு பொண்ணுங்களையும்,கணவனையும் விட்டுட்டு இந்த ஆளு கூட ஓடி வந்து,இந்த பையனை பெத்துகிட்டதாக. 


அவங்க வீட்டில் எல்லாருமே இன்னும் ஏதோ ஒரு உறுத்தலோடவும்,அந்த பையன் ஏதோ ஒரு விதத்தில் தன் ஆத்திரத்தை தன் மனைவி மேலே காமிக்கிரதாகவும், ஒருவருக்கொருவர் ஒட்டாமலே வாழ்ராங்கலன்னு கூட பலமுறை எனக்கு தோணிருக்கு. எதுக்கு இந்த செயற்கையான பந்தம்...இந்த வாழ்க்கைக்கு தான் அந்த அம்மா ஆசைபட்டங்கலானு தெரியல..அந்த அம்மா மன அமைதிக்கு மதம் மாறி, சதா ஜெபத்தில் இப்போ எல்லாம்...!
 
(ம்ம்...கடவுள் மன்னிப்பது இருக்கட்டும். அவங்களோட ரெண்டு பொண்ணுங்களும்,கணவரும் மன்னிப்பாங்கலா னு தெரியல..)

மற்றொரு விஷயம்...

கிட்டத்தட்ட ஆறு ,ஏழு மாசம் முன்னாடி தென் தமிழகத்தில் ஒரு ஊரில் தாலுக்கா ஆபிஸ் முன்னாடி மூணு குழந்தைங்க நிக்கிறாங்க. 7 வயசு பையன் கையில் கடிதம்,அவன் அருகில் 5 வயசு தங்கச்சி பாப்பா, அவள் இடுப்பில் 1.5 வயசு இன்னொரு தங்கச்சி பாப்பா..

எதுக்கு வந்திருக்காங்க??? என்ன கடுதாசி??

கொஞ்சம் நாமும் அந்த கடிதத்தை படிக்கலாம்..

மதிப்பிற்குரிய ஐயா ,
                                     

                                         என் பெயர் அருண்குமார்(7 ),எனக்கு 2 தங்கச்சிங்க இருக்காங்க. அப்பா கூலி வேலை பார்க்கிறாங்க. ஒரு வாரமா நாங்க சரியா சாப்பிடலை. .சரியா தூங்கலை.. தங்கச்சி பாப்பா சதா அழுதுட்டே இருக்கா..அப்பாவும் அழுதுட்டே கஞ்சி காச்சி கொடுக்கிறார். அப்பா வேலைக்கு போனபிறகு நான் தான் பாப்பாவை பார்த்துக்குறேன்...பள்ளியில் நல்லா படிப்பேன்..ஆனால் இப்ப போவல...அம்மாவை ஒரு வாரமா காணோம் வீட்டில்..அம்மா பக்கத்து வீட்டு மாமா கூட போய்ட்டாங்கன்னு  அம்மாச்சி சொல்லி அழுதுச்சு.. எங்க அம்மா எங்களுக்கு வேணும்...எப்பிடியாவது அம்மாவை கண்டுபிடிச்சு கொடுங்க ஐயா "

வணக்கத்துடன்,
அருண்குமார்..

இந்த கடிதம் உடனே பரிசீலனை பண்ணப்பட்டு, தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்பார்வையில் ,மேற்கொண்டு விசாரிக்க சிறுவன் அருண்குமார் வீட்டிற்கு சென்றது...அங்கே..அங்கே..அங்கே.............................................

"பிணக்கோலத்தில்  மூன்று குழந்தைகளும், அவர்கள் தந்தையும்..."

குழந்தையின் தைரியம் தந்தையிடம் இல்லைன்னு ஊரே அழுதிருக்கு (அந்த புகைப்படம் விகடனில் வந்து இருந்தது...என்னடா மனுஷ உணர்ச்சி இது னு ரொம்ப விரக்தியா இருந்தது எனக்கு...)

என் அழகு அம்மா!!
என்னுயிர்  அம்மா!!

அப்பாக்கு தோள் சாய -
நீ அருகில் இல்லை!!

என் கன்னம் தட்டி
மிருதுவாய் கொஞ்ச-
நீ அருகில் இல்லை!!

பெரிய தங்கைக்கு
கதை சொல்லி உணவூட்ட-
நீ அருகில் இல்லை!!

சின்ன தங்கைக்கு
தாய்பால் புகட்ட-
நீ அருகில் இல்லை!!
 

என் அழகு அம்மா!
என்னுயிர் அம்மா..!!!

மகிழ்ச்சியாய்  இனியாவது இரு !!
நாங்களும் இவ்வுலகில் இல்லை.!!!!


February 1, 2011

இளையராஜா- சில சுவாரஸ்யங்கள்..!!!


என்னை பொறுத்தவரை, மொழியே தேவைப்படாத அழகான ரெண்டே விஷயங்கள்....காதலும்,இசையும் தான்..:)))
இந்த மாசம் காதல் மாசம்:) அத்தோடு இசையும் சேர்ந்தால் பொருத்தமாக தான் இருக்கும் இல்லையா?

இளையராஜா எவ்வளவு எனக்கு பிடிக்கும்னு ஏற்கனவே இதில் சொல்லிட்டேன்...:))


இசை ஞானியின் இசையில் நான் ரசித்த சில சின்ன சின்ன சுவாரஸ்யங்கள்.................


1.இசைமேதை பீத்தோவனின்  "fur elise " ட்யூன் கேட்ருக்கீங்களா?? கேட்காட்டி இப்ப கேளுங்க..time 1.13 to 1.27 இல் பியானோ கட்டைகள் வேகம் எடுத்து புகுந்து விளையாடி 1.42 இல் அப்படியே டெம்போ குறைந்து முடியும் ஆர்ப்பரிப்பு இருக்கே....இந்த ட்யூனின் ஹார்மனியில் என் ஓராயிரம் மன அலைகள் அப்படியே அடங்கி விடும் சுகானுபவத்தில் பலமுறை லயிச்சிருக்கேன்...


அப்டியே இளையராஜா இசைக்கு வருவோம்...ஏற்கனவே நான் இளையராஜா சார் இன் இசையில் மந்திரிச்சு விட்ட பொண்ணு :) அதுவும் மௌனராகம் தீம் மியூசிக் எல்லாம்............சான்ஸ் ஏ இல்ல..வயலினின் அதி அற்புத ரீங்காரம் அப்படியே இசையை தெறிச்சு நம் இமை ஓரமாய் வந்து விழும் மேஜிக் தருணம் அது.... கேட்க ஆயிரம் காதுகள் இருந்தாலும் பத்தாது....


பீத்தோவனின் "fur elise " & இளையராஜாவின்  மௌனராகம் "தீம் மியூசிக்" -ஐயும் சேர்த்து fusion போலே பரிமளிக்கும் இந்த இசை கோப்பை கேளுங்க..... யாரு ட்யூன் பெஸ்ட்...?????????? :))







2.இசைஞானியின் அதி தீவிர ரசிகர்களால் (என்னை மாதிரி :) ) இந்த பாட்டு தான் ரொம்பவே அதிகமாய் விரும்பப்பட்டு இருக்கும் னு நினைக்கிறேன்..." தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது ??!! "  (ஆட்டோ ராஜா) ."

இது கன்னடம்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி னு பலமொழிகளில் மட்டும் அதே ட்யூன் மாறாமல் வந்தாலும்..கேட்க என்னைக்குமே திகட்டாத அக்மார்க் இசை தேன்...

எந்த மொழியும்,வரிகளும் தேவைப்படாத,ஜஸ்ட் இந்த பாடலின் ட்யூன் மட்டும் இதோ...எனக்கு ரொம்ப ப ப பிடிச்ச flute டில் நிகழும் இசை சுவாரஸ்யத்தை கேளுங்களேன்...முக்கியமாய் அந்த interlude ..ம்ம்...வார்த்தைகளே இல்லை ராஜா சார்...








3.அப்புறம் ராஜா சார் பாடி தமிழ் இல் கேட்டு இருப்போம் நிறைய..வேறு மொழியில் ராஜா சார் இன் குரலில் கேட்கும்போது தன்னிச்சையா ஒரு சுவாரஸ்யம் வந்திருது...

இந்த "கன்னடா" பாட்டில் ராஜாவின் குரலை கேட்டு பலமுறை அசந்திருக்கேன். சமஸ்கிருதத்தில் தெள்ள தெளிவாய் அப்படிங்கிறதை  " ஸ்பஷ்டமாய் " னு சொல்லுவாங்க..ராஜா சார் இன் ஸ்பஷ்டமான கன்னடா சாங் இதோ..அவரின் ட்ரேட் மார்க் "ந..நா.."ஹம்மிங்கோடு ..:))