December 28, 2010

என் கண்ணில் உன் இமைகள் பொருந்திவிட கூடாதா??:)


அடடா! செம அழகான கண்கள் னு நிறைய பேரை  பார்த்து நான் வியந்தாலும் சட்டுன்னு என்னை மயக்கும் ...பரவசமாக்கும்..மெய்சிலிர்க்க வைக்கும்,நெகிழ வைக்கும்  கண்களும் உண்டு...


மை இடாத,காண்டாக்ட் லென்ஸ் எதுவும் போடாத,மொத்தத்தில் மேக் அப் இல்லாத கண்கள் தான் என் சாய்ஸ் :)))

இந்த வரிசையில் சுவாமி விவேகானந்தர் கண்களை குறிப்பிட விரும்புறேன்...செம பவர்புல் ஸ்பிரிச்சுவல் கண்கள்..யப்பா..!! எங்க வீட்டின் நுழைவாயிலை அலங்கரிப்பது இவரின் கண்கள் தான்..:))


ஓகே..அடுத்து...


அன்னைக்கு என் வண்டியை எடுக்கும்போது என் பாதத்தை ஏதோ தொட்ட உணர்வு...குனிஞ்சு பார்த்தால் அழகான வெள்ளை கலர் குட்டியூண்டு பூனை குட்டி..குட்டியூண்டுன்னால்  அவ்வளவு குட்டி..  குட்டியூண்டு:))))) பயங்கர சந்தோஷமாகி தூக்க முற்படும் போது ,தரையில் படர்ந்த என் துப்பட்டாவின் ஓரமாய் ஒளிஞ்சு அழகாய் அது கண்களை உருட்டி உருட்டி  "மியாவ் "சொன்னதில் ..பரவசமானேன்..என்ன அற்புதமான அழகு அதன் கண்கள்!...அனேகமா விலங்குகளிலேயே பூனைக்கு தான் அழகான கண்களா இருக்குமோ? 


அப்புறம்..


ஒரு லெதர் பேக் தைக்க நான் சென்றபோது .........



இரவு -8 மணி,

தைத்தவர்-72 வயது தாத்தா, 

 
இடத்தின் சூழ்நிலை-40 வாட்ஸ் குண்டு பல்பின் மங்கிய வெளிச்சம்.

 
ஆனால் அவர் பார்வை வெகு கச்சிதம்..
பவர் கண்ணாடி எதுவும் அணியவில்லை..

 

எதுக்கு இந்த கண்கள் புராணம்னு யோசிக்கிறதுக்கு முன்னாடி.....



இந்த தலைமுறை குழந்தைகளின் சின்ன பய(யோ) டேட்டா :-

*******************************************************************
பிடித்த உணவுகள் :சாக்லேட்,நூடில்ஸ்,பீஸா,பர்கர்,

சிப்ஸ்,ஐஸ் கிரீம்,கோக்,பெப்சி..
 
பிடித்த பொழுது போக்கு:- ஆல் டைம் டிவி பார்த்தல்,வீடியோ கேம்,கம்ப்யூட்டர் கேம்..பிளே ஸ்டேஷன்..
********************************************************************

போன வாரம்,என் பையனை ஸ்கூல் இல் இருந்து கூப்பிட போனபோது,அவன் பள்ளியில் காத்திருந்த தருணங்களில் ... நான் கண்டு வருத்தப்பட்டது தான்...மேற்சொன்ன எல்லா வரிகளின் தொடர்பும்...


பள்ளிவிட்டு வந்த குட்டிஸ்களில் பெரும்பாலும் கண்ணாடி அணிந்தவர்கள். அதிலும் 3 வயது குட்டிஸ் கூட பவர் கிளாஸ் போட்டு இருந்தது பார்க்க ரொம்ப வருத்தமா இருந்துச்சு..:((



 

என்னவோ என் ஜெனரேஷனை விட என் பையன் ஜெனரேஷனில் இந்த எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாய் தான் படுது..

பெற்றோர்களின் மரபு வழி பிரச்சனைகளால் குழந்தைகளுக்கும் அந்த குறைபாடு வந்து கண்ணாடி அணிந்தால் அது தவிர்க்கவே முடியாத விஷயம்..அது ஓகே..


ஆனால்..நான் மேற்சொன்ன அந்த பய டேட்டாவும் இந்த குறைபாடுகளுக்கு ஒரு காரணம், என் பையன் கூட படிக்கும் குட்டிஸ் இல்  பாதிக்கும் மேலே லஞ்ச்க்கு கொண்டு வரும் உணவு பெரும்பாலும் அந்த காஞ்சு போன நூடில்ஸ் தான்...

 


நம்மில் பெரும்பாலும் பாஸ்ட் புட் (fast food) உணவுகளை  குழந்தைகளுக்கு  பழக்கி,சரிவிகித உணவு(balanced diet) அப்டிங்கிற கான்செப்ட் இல் இருந்து விலகி போறது தான் இந்த குறைபாட்டின் அதிகரிப்பா....ம்ம்...வருமுன் காப்பது நல்லது!!!!!


ஓகே..ஓகே...வருஷ கடைசியில் ஒரு மெசேஜ் சொல்லிபுட்டோம்ல :))))...அப்படியே ரெண்டு விஷயம் மட்டும் சொல்லிட்டு போய்டுறேன் டிஸ்கி யில்..


டிஸ்கி 1 : அந்த குட்டியூண்டு பூனை குட்டி பேரு - "சிட்டி"  :)))

 

டிஸ்கி 2 : இந்த ஆண்டில் ,எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்கள்..என் பாலோவேர்ஸ்,என்னை ஊக்கு வித்த:)) ..சை..ஊக்கப்படுத்திய   தோழர்/தோழிகள் மற்றும் திரட்டி நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி!நன்றி!  உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!




December 14, 2010

இது போதும் கண்மணி...வேறென்ன நானும் கேட்பேன்..


சின்ன வயசில், நீங்க உங்க வீட்டு மொட்டை மாடி மதில் சுவரில் ஏறி உட்கார்ந்து நிலாவை ரொம்ப நேரம் பார்த்து இருக்கிங்களா?:)) 

மாலை நேர தென்றல் காற்றில்,வானத்தில் கொத்து கொத்தாய் பறக்கும் புறாக்கூட்டங்களை பார்த்து,உங்க ரெண்டு கையவும் விரிச்சு வச்சுட்டு "வெள்ளப்புறாவே...பூ போடு " னு கத்தி இருக்கிங்களா? :))

                                                  

                                                   
நான் பார்த்திருக்கேன் :))

                                                   நான் கத்தியிருக்கேன்.
....:))
 

 

எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னால்..சில நாட்களாக மகா கவி பாரதி அதிகமாய் என் நினைவில்..( நன்றி :  (என் இனிய நண்பர் "அவர்கள் உண்மைகள்" பதிவாளர்(தேங்க்ஸ் பாஸ்) , என் பிரிய சகோ ,பிரபு.எம்.   ,என் இனிய தோழி "கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ரா, என் வழிகாட்டி& நண்பர்(ன்) ராசுகுட்டி@ரமேஷ்)
 

தொடர்கிறேன்....

 

(மதுரை-குமுளி வழி) தேனி,சின்னமனூர்,கம்பம்,சுருளி வழியா போகும்போது ஒவ்வொரு தடவையும் மனசில் ஒரு சின்ன ஏக்கம் தோணி மறையும்...


மிதமான குளிர் கிளைமேட்,வழியெங்கும் திராட்சை தோட்டங்கள்,தோட்டத்தின் நடுவே அங்கங்கே ஆர்ப்பாட்டமில்லாத சில காரைவீடுகள்,சில ஓட்டு வீடுகள்,சில குடிசை வீடுகள்....எப்படியும் தோட்டத்தில் அங்கேயும் இங்கேயுமா சில தென்னை மரங்கள்,வேப்ப மரங்கள்..தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச ஒதுக்குபுறமாய் கேணி,பம்பு செட்....அப்புறம்...வேப்பமரத்தில் தொங்கும் குழந்தையின் தூளி, ஓட்டு வீட்டின் முன் போடப்பட்ட கயித்து கட்டில், சில மண்பானைகள்,மண் குவளைகள்....



ஓ!! அழகோ அழகு!!!



சுருளி போகும்போதெல்லாம் எப்படியாவது முரண்டு பிடிச்சு கொஞ்சநேரமாவது நின்னு பார்த்துடுவேன் நான் மேலே சொன்ன அட்மாஸ்பியர் ஐ ......என் நகர்புற வாழ்க்கையில் கொஞ்சம் கூட கிடைக்காத இந்த கிராமிய மணம் என்னவோ ரொம்பவே இஷ்டம் எனக்கு..என்ன தான் பஞ்சு மெத்தையில்.ஏசி காற்றில் படுத்தாலும்...அந்த தோட்டத்து எளிமையான வீட்டில் நிலா பார்த்துட்டே படுக்கும் சுகம் என்னவோ எனக்கு கற்பனை பண்ணவே  ரொம்ப புடிச்சிருக்கு.:))



என் கற்பனை இந்த அளவுக்கு எனக்கு ருசிக்குதுனால் கட்டாயம் பாரதி யும் காரணம்...பாரதியின் எத்தனயோ பாட்டுக்கள் பிடிக்கும்..ஆனால்...மனசுக்கு ரொம்ப நெருக்கமாய்...ரொம்பவே அழகியல் உணர்ச்சியோடு..என் மனசில் சின்ன வயசிலேயே பச்சக்குன்னு ஒட்டிகிட்டது பாரதியின் இந்த பாட்டின் வரிகள்...கற்பனையை எவ்வளவு தூரம் வேணும்னாலும் பறக்க விட்டு..கண்களை அகல விரிச்சு யோசிச்சு பார்க்க வைக்கும்  அற்புதமான வரிகள்...



பாருங்க...நான் சுருளி வழியில் பார்த்த காட்சிகளுக்கும்...இந்த வரிகளுக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கும் ...





காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
  கட்டி தர வேண்டும்-அங்கு
கேணியருகினிலே-தென்னை மரம்
   கீற்று மிள நீரும்.....

......

.....
முத்து சுடர் போலே-நிலா வொளி
   முன்பு வர வேணும்-அங்கு 

கத்துங்குயிலோசை-சற்றே வந்து
  காதில்  படவேணும்....""

இதோட முடியாது...தொடரும் பாரதியின் அற்புதமான அழகியல் வெளிப்பாடு சொல்லும் இந்த வரிகள்..



பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
  பத்தினி பெண் வேணும்-எங்கள்
கூட்டு களியினிலே-கவிதைகள்
   கொண்டு தரவேணும்....



எனக்கு சில தீராத சில கனவுகள் உண்டு...அதில்  ஒண்ணு ,என் வாழ்வின் இறுதி காலங்களை இந்த மாதிரி ரம்மியமான சூழ்நிலையில் கழிக்கணும்னுங்கிறதும் .....
 


என் மகன் இப்ப குட்டி பையன்...அவன் வளர்ந்து,என் கனவுகள் புரியும் வயதில் என் தீராத ஆசைகளை சொல்ல காத்திருக்கிறேன்...அவன் மறுக்கும் முன்,இதையும் கூறுவேன் ...

 


"இது போதும் கண்மணி...வேறன்ன நானும் கேட்பேன்..! "

















December 7, 2010

இளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..!!!


பொதுவா, புதுப்பேனா வாங்கும்போது ஏதாவது கிறுக்கி பார்த்தோ, நம்ம பேரை எழுதிபார்த்தோ செக் பண்ணிப்போம்.. ஆனால், நான் "இளையராஜா "பெயரை எழுதி பார்த்து என் அப்பாகிட்டே தலையில் செம "குட்டு" வாங்கி இருக்கேன்...:((

இளையராஜா பேரை சொல்லும்போதே..உடம்புல வயலின் prelude ஆரம்பிச்சிருச்சு எனக்கு...ரொம்பவே அழகான பாட்டை கேட்கும்போதெல்லாம் சட்டுன்னு சில நேரம் யோசிக்காமல் கூட சொல்வேன்...இது இளையராஜா மியூசிக் னு...உடனே இல்ல..இல்ல...இது வேற னு..பதில் வரும்..உண்மையில் அது "வேற" யா தான் இருக்கும்..:)) ஆனாலும்,திரும்பியும் கேசுவல் ஆ சொல்வேன்..."ஓ!வேறயா..அதானே இளையராஜான்னால் இன்னும் நல்லா இருக்கும்....":))

வயலின்,ப்ளூட்,தபேலா வை அதிகமாய் பயன்படுத்தியது மாஸ்ட்ரோவாய் மட்டுமே இருக்கும்ங்கிறது என் பார்வையில்...அதுவும்...அவர் இசையில் சேர்க்கும் கோரஸ்கள்,தந்தனா தானாக்கள்...ர ரா க்கள்...ரப் ரபாக்கள்...இதுக்கெலாம் நான் வெறிபிடிச்ச ரசிகை...:))

ஒரு சிங்கிள் கார்டு(chord ) இல் கூட சுகந்தமாய் விழும் ராஜாவின் முத்து இசை...சில நேரம் ரெஸ்ட் நோட்(rest note) விட்டு கொடுக்கும் சரணங்களில் மூச்சு விட மறந்திருக்கேன்...(eg :மடை திறந்து பாடும் ..frm நிழல்கள் )

இளையராஜா இசையில் இளையராஜாவே பாடினால்...சான்சே இல்ல......

மேஸ்ட்ரோ இசை ரொம்ப ப ப ப ப ப ப ...எனக்கு இம்ப்ரெஸ் ஆன "மந்திர தருணங்கள் "எப்போன்னு இன்னும் சரியா தெரியல...

ம்ம்..யோசிச்சு தான் பார்க்கிறேன்...

ஒருவேளை...
ஏதோ ஒரு அதிகாலை மார்கழி குளிரில் கோவில் போகும்போது எங்கிருந்தோ வந்து காதில் விழுந்த இந்த வரிகளை கேட்ட நொடியிலா...??

"ப்ரேம ப்ரேமாதி ப்ரேமப் ப்ரியம்
ப்ரேம வஸ்யப் ப்ரேமம் ,
ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம்
ப்ரியம் ப்ரியமாதி ப்ரீதிதம் ..............................
.
மங்கள நம ஜீவிதம்...........
ஓம்...சாந்தி...சாந்தி...சாந்தி
!"

ராஜாவின் குரலில் இந்த காந்த கீர்த்தனை..உடம்பின் ஒவ்வொரு செல் லிலும்  போயி உட்காரும்...


அப்படியே ராஜாவின் இந்த கலக்கல் கீர்த்தனை ஆரம்பிச்சு...மெல்லிய டெம்போவில் சித்ராவின்..
"தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தேவனே !
இன்று என் ஜீவன் தேடுதே
என் மனம் ஏனோ வாடுதே !" (அறுவடை நாள்) 
எதுக்கு சொர்க்கம் எல்லாம் தேடி போகணும்...இந்த பாட்டு போதும்னு எல்லாம் எமோசன் ஆ யோசிச்சிருக்கேன்..:)

ஒருவேளை...
மழையில் சொட்ட சொட்ட நனைஞ்ச நான் குளிர் தாங்காமல் ஒதுங்கியபோது இந்த வரிகளை கேட்ட நொடியிலா...??

 
"எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்!!
எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்!!

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே"

(அலைகள் ஓய்வதில்லை..)
 
 
ஒருவேளை..
மனபாரத்தில் நான் இருந்த ஒரு அமைதியான  தருணத்தில்  இந்த வரிகளை கேட்ட நொடியிலா..??

"முதல் முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே... அன்பே...

பறவையே எங்கு இருக்கிறாய்?
பறக்கவே என்னை அழைக்கிறாய்!!
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே..."   (தமிழ் MA)

 

 
ஒருவேளை..
செம குஷியான மூடில் அழகர் கோவில் பக்கம் ரிலாக்ஸ் டிரைவிங் பண்ணும்போது FM இல் இந்த வரிகளை கேட்ட நொடியிலா...??

 
"அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா...... "

ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது ?
நாளைக்கே ஆனந்த  விடுதலை
காணட்டும் காணாத உறவில் ....
''''''''
''''''''

தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்

அங்கத்தில் யார் தந்தது ??!! "  (ஆட்டோ ராஜா)

ஹையோ..செமத்தியான என்ன ரிதம்..!! அதுவும் ராஜாவின் தமிழ் உச்சரிப்பு செம க்ளாஸ்..இந்த ல.ள,ழ எல்லாம் உச்சரிக்கும் அழகில் அந்த பாட்டு வரிகள் இன்னும் அழகாகும் கேட்கும்போது...!


ஒருவேளை..
சாலையை கடக்கும்போது என்னை கடந்து சென்ற ஒரு வெளியூர் பஸ்ஸில் இருந்து தற்செயலாய் இந்த வரிகளை கேட்ட நொடியிலா...??

 
"பறந்து செல்ல வழி இல்லையோ… 
பருவக் குயில் தவிக்கிறதே…

கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்?
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது"! (தர்ம பத்தினி)

இதில் எனக்கு அந்த " பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…"அந்த வரி கேட்க கேட்க ரொம்ப பிடிக்கும்...உச்சரிப்பு செமத்தியா இருக்கும். இதுல எந்த எந்த இன்ஸ்ட்ருமென்ட் யூஸ் பண்ணிருக்காங்கனு,எண்ணி கூட பார்க்க முயற்சி எல்லாம் பண்ணுவேன்...:)) 


நான் மயங்கிய பாட்டுகள் லிஸ்ட் ரொம்ப பெருசு..இது சும்மா சாம்பிள் தான்...பிறிதொரு சந்தர்ப்பத்தில் முடியும்போது இன்னும் பகிர்வேன்...:)))


அப்புறம்..கடைசியில்  ஒன்னு சொல்லணும் நான்..அதாவது..எனக்கு ...இளையராஜா பிடிக்கும்...அப்புறம் இளையராஜா பிடிக்கும் .....மேலும் இளையராஜா பிடிக்கும் ...மற்றும் இளையராஜா பிடிக்கும்...:))))))))