தீபாவளி வரபோகுது..என்ன நீங்க எல்லாருக்கும் தீபாவளி இனாம் கொடுத்தாச்சா? தலைய சொரிஞ்சுட்டு நிக்கும் கீழ் மட்ட பிரதிநிதி முதல் மேல்மட்ட பிரதிநிதி வரை காசு கொடுத்து முடிச்சாச்சா? :))))
(போஸ்ட் மேன் க்கு 100 ரூபா கொடுத்தேன்..ஹீ..ஹீ..இனாம் இல்லையா? னு திருப்பி கேக்குறார்..அட கொடுமையே...இது என்ன பொரி சாப்பிடவா? இது தான் பா இனாம் னு சொன்னால்..இது பிசுகோத்து காசு...பிஜிலி வெடி வாங்க கூட பத்தாதுன்னு பேச்சு வேற...)
(அரசாங்க ஊழியர்களுக்கு எல்லாம் நம்ம முதல்வர் இலவச வெடி தரமாட்டாரா..??:))) )
(ஹீ..ஹீ..மே மாசம் நம்ம மக்கள் வோட்டு டப்பாசு "அவிய்ங்களுக்கு" நிறைய கொடுக்கபோறாங்களே...:)) )
ஒரு வாரமா இனாம் கொடுத்து நொந்து போயிருந்த நேரத்தில்,நேத்து ரெண்டு பேரு வந்தாங்க...அவங்க மாற்று திறனாளிகள்(ரெண்டுபேருக்குமே கண் பார்வை இல்லை)..கையில் ஊதுபத்தி,ப்ளீசிங் பவுடர் ருடன் என்னை கூப்பிட்டாங்க...அவங்களை பார்த்து கஷ்டம் ஆகி..."அண்ணன்..பொருளாய் எதுவும் உங்க கிட்டே நான் வாங்கலை..இந்த பணம் மட்டும் வச்சு கோங்கன்னு சொன்னேன் "...அவங்க அடுத்து சொன்னது தான் என் கன்னத்தில் அடிச்ச மாதிரி இருந்தது...
"ம்மா...நாங்க பார்வை இல்லாதவங்க தான்..ஆனால் பிச்சை எடுக்க வரலை...இதெல்லாம் நாங்க தயாரிச்சது...முடிஞ்சால் இதை வாங்கிட்டு இதுக்கு உரிய பணத்தை கொடுங்க...இல்லாட்டி உங்க இலவச பணம் எதுவும் வேண்டாம்..."
கொஞ்சம் வெல வெலத்துட்டேன்...மாற்று திறனாளியாக அந்த மனிதர்கள் இருந்தாலும்...அவர்கள் செயல்,பேச்சில் தெரிந்த சுயமரியாதை ரொம்பவே பிடிச்சு இருந்தது...
(அதற்கு முதல் நாள் மண்ட சொரிஞ்சுட்டு அசட்டு சிரிப்பில் இனாம் வாங்கி போன சில 'மனிதருள் மாணிக்கங்களும்" நினைவுக்கு வந்துட்டு போனாங்க...)
சில ஆதங்கங்களும் எனக்கு இருக்கு...
பழனி மலைக்கு மேலே ஏறும்போது வழி எங்கும் மொய்க்கும் மாற்று திறனாளிகள் போர்வையில் சுத்தும் போலி மனிதர்களை கண்டு ஆத்திரம் பயங்கரமாய் வரும்...(எல்லாமே டூப்பு...செயற்கையாய் எதையாவது மாட்டி..ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கும் ரேஞ் இல் இருக்கும் அவர்கள் நடிப்பு ரொம்பவே சூப்பர்...)
(அப்போ தமிழ்நாட்டில் ஏகப்பட்ட "உலகநாயகர்கள்" சுத்திட்டு இருக்காங்க போலே)
சமீபத்தில் திருச்சி வயலூர் போயிருந்தோம்..அங்கேயே அன்னதானமும் எங்கள் குடும்பத்தார் செஞ்சாங்க...கொடுத்த உணவுகளுக்கு பெருசாய் மதிப்பில்லை..எல்லாம் சிதறி கிடந்தன..கேட்டால் கோவிலையே அன்னதானம் செய்றாங்களே னு ஒரு நக்கல் பேச்சு வேற...நல்லது தான்..அங்கே சாப்பிட காத்திருந்தவங்களில் பலரை பார்த்தால் ஏகப்பட்ட எரிச்சல்...பீடி அடிச்சுட்டு...வெட்டியா பேசிட்டு சாப்பாடு நேரத்துக்கு ஆஜர்...சில நேரங்களில் இந்த நலத்திட்டங்களில் மேலே ஒரு மதிப்பே இல்லாமல் கூட போயிருது...
(அஞ்சா நெஞ்சன் அண்ணாகிட்டே சொன்னால் இவங்களுக்கு ஹார்லிக்ஸ் அனுப்புவாங்களோ:)) )
என்னுடன் வந்த பேராசிரியை சொன்னாங்க...உழைச்சு சாப்பிடும் அருமை நிறைய பேருக்கு தெரியாமல் போக போகுது...சாப்பாடு ஓசியா கொடுத்தால் சில சோம்பேறிகளை ஊக்குவிக்கவும் சந்தர்ப்பம் இருக்குன்னாங்க..நான் கேட்டேன்..அப்போ வயசான, முடியாதவங்களுக்கு இது நல்ல திட்டம் தானே னு ...
அவங்க சிரிச்சுட்டே சொன்னாங்க..."தானம்,தரங்கெட்ட மனிதர்களை மட்டுமே ஊக்குவிக்க கூடாது "
அதுபோலே வடலூர் சத்திய சன்மார்க்க சபை போயிருந்தபோதும் இந்த அனுபவம் இருக்கு...
அங்கேயும் மூணு வேளையும் இலவச அன்னதானம்...சாப்பிட்டு முடிச்ச ஒரு ஆள் எங்ககிட்டே வந்து காசு கொடுங்கன்னு அனத்தல்..சாப்ட முடிச்சுட்டதானே அப்புறம் என்ன காசு னு கேட்டால்..தலைய சொரியிறான்...
(பீடி,சிகரட்டுக்கு பணம் பத்தலை போலே..)
ரெண்டுநாளைக்கு முன்னாடி செய்தி தாளில் பார்த்தேன்...மதுரையில் மாற்று திறனாளி மனிதர் ஒரு திருடனை விரட்டி பிடிச்சு போலீஸ் இல் ஒப்படைச்சுருக்கார் னு...இதெல்லாம் படிக்கும்போது ரொம்ப பெருமையா கூட இருக்கு...
அப்புறம் இன்னொரு விஷயம்...
குடும்ப நண்பர் குழந்தைக்கு பிறந்தநாள்...அவங்க எங்களை வரசொன்னது "மதுரை பறவை பார்வையற்றோர் பள்ளி "..அந்த சின்னஞ்சிறு பார்வை இழந்த குழந்தைகளை பார்த்தால் கல் நெஞ்சமும் கரையும்..எல்லாரும் சாப்பாடு பரிமாறினோம்...சில குழந்தைகளுக்கு எங்கே சாப்பாடு இருக்குனு கூட சரியா கணிக்க முடியாமல் திணறினாங்க..ரொம்ப வேதனையாகி நான் ஊட்டி விட முயற்சி பண்ணும்போது...வேண்டாம்...கொஞ்
எல்லா உறுப்புகளும் கடவுள் சரியா கொடுத்தும் கூட உருபடாத மனிதர்(?)கள் மத்தியில் இவர்கள் சுயமரியாதை பார்க்க சந்தோஷமா கூட இருக்கு..!!