October 17, 2010

மதுரை மக்காஸ் எங்கே இருந்தாலும் உடனே ஓடி வரவும்...!!



"பெண் மகாத்மா நாளை மதுரை வருகிறார்..காந்தி எப்படி வெள்ளையர்களை விரட்ட போராட்டம் நடத்தினாரோ,தமிழகத்தை ஆளும் வெள்ளையர்(?!)களை விரட்ட நம் புரட்சி தலைவி பெண் மகாத்மா நம் அம்மா வருகிறார்...உணர்ச்சி போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் வரவும்.."


கடவுளே..கருப்பசாமி சத்தியமா எனக்கும்,இந்த வரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..! இல்லவே இல்லை !


இது மதுரை மாணவர் அணி அ.தி.மு.க செயலாளர் உணர்ச்சி வசப்பட்டு உளறினது...




அப்புறம் மதுரை மக்காஸ் எங்கிருந்தாலும் வந்துருங்க மதுரைக்கு...


2 காரணம் இருக்கு ...






1 . நாளை நம் பெண் மகாத்மா வருகையை ஒட்டி தி,மு.க க்கு டப் கொடுக்கும் வேலை நடந்துட்டு இருக்கு...அமெரிக்க,ஐரோப்பா,ரஷ்யா போன்ற தம்மாந்துண்டு இடங்களில் இருந்து கூட லாரி மூலம் தொண்டர்கள் அழைத்து வர ஏற்பாடு நடக்கிறது.. சிக்கன் பிரியாணி,குத்தாட்டம்,500 ரூபா...மற்றும் பல..பல...(புரிஞ்சுடால் சரி..இல்லாட்டி சுட்டி டிவி மட்டும் பார்க்க ஓடலாம்..)தயார் நிலையில் இருக்கிறது...சோ..வரவும் உடனே..






2 . அடுத்து வரும் ராஜ்யசபா தேர்தலுக்கு பட்டதாரிகள் வோட்டு வேட்டை நடக்கிறது..ஒரு பட்டதாரி வோட்டுக்கு குறைஞ்சது 5000 ரூபா என்று அஞ்சா நெஞ்சன் அண்ணன் தரப்பு பேசிக்குது...மதுரை பட்டதாரிகளே...உடனே வரவும்...






அப்புறம் ஒரு சுவாரஸ்யம்...எங்க ஏரியா ஆளு நாளைக்கு நம் "பெண் மகாத்மா" முன்னாடி அ.தி.மு.க வில் இணைகிறார்...


(ஹலோ..இதுல என்னை சுவாரஸ்யம்...?)






சேரும் ஆளு பேரு "உதய சூரியன்"...






(டிஸ்கி-ஹீ..ஹீ...அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...)






13 comments:

வார்த்தை said...

மருதகாரம்மா... நடத்துங்க... ந‌டத்துங்க‌

கோலா பூரி. said...

மதுரை மக்காஸ் மட்டுமே ஓடிவரனுமா//?????!!!!!!!

AshIQ said...

நான் எப்பவுமே கட்சி கட்சி தாவுவதை விரும்பாதவன், இதைதான் நான் காங்கிரஸில் இருக்கும்போதும் சொன்னேன், அதிமுக வில் இருக்கும் போதும் சொன்னேன், இப்ப திமுகவில் இருக்கும்போதும் சொல்கிறேன்.ஏன்னா நான் எப்பவுமே வாக்கு தவறாதாவன். எனவே உங்கள் வாக்கு எனக்கே.
--ஆஷிக்--

kavisiva said...

//மதுரை மக்காஸ் மட்டுமே ஓடிவரனுமா//?????!!!!!!!//

ரிப்பீட்டேய் :)

ஆனந்தி.. said...

@வார்த்தை
வாங்க வார்த்தை!..என்னத்தை நாங்க நடத்த போறோம்..எங்க ஊரையே அஞ்சா நெஞ்சன் தானே நடத்துறார்..:-))

ஆனந்தி.. said...

@komu

வெல்கம் கோம்ஸ்! மத்த ஊரு ஆளுங்கலும் வரலாம்...ஆனால் உங்க கெட்டிக்காரதனத்தை பொறுத்து இருக்கு...:-))

ஆனந்தி.. said...

@AshIQ
சரி சரி..போதும்..மாமி க்கும் மைக் வேணுமாம்...:-))

ஆனந்தி.. said...

@kavisiva
மதுரையும் உங்க ஊரு தானே...உங்களுக்கு இல்லாததா கவிதாயினி?

சங்கரியின் செய்திகள்.. said...

நல்ல காமெடிங்க..........

ஆனந்தி.. said...

@நித்திலம் - சிப்பிக்குள் முத்து.

:)))

சி.பி.செந்தில்குமார் said...

அசத்தல் சிரிப்பு

சி.பி.செந்தில்குமார் said...

மக்கு ஆத்மாக்கள் இருக்கும் வரை மஹாத்மா பேர் ரிப்பேர் தான் ஆகும்

ஆனந்தி.. said...

@சி.பி.செந்தில்குமார்

:)))