October 16, 2010

ஒரு விஷயம் சொல்லிட்டு ஓடி போய்டுறேனே..!!






ஹலோ! எப்புடி இருக்கீங்க??


(என்னனு சொல்லிட்டு சீக்கிரம் ஓடி போய்டு..)






அது எப்படி உடனே சொல்றதாம்?


ஆங்! சின்னதா புலம்பிட்டு சொன்னால் போச்சு...


(சரி!சரி! ப்ளேடு போடாமல் டெல் மீ....)




அதாகப்பட்டது என்னவென்றால்....


(யக்கா..பில்ட் அப் ஸ்டாப்...முடில..அழுதுருவேன்..!!)




ஓகே!ஓகே! வேற ஒன்னும் இல்லைங்க..இந்த 'எந்திரன்' பீவர் கடந்த பத்து நாளா என்னை பாடா படுத்துது..!!




கோலம் போடும்போது பக்கத்து வீட்டு அக்கா ஐஸ்வர்யா ராய் பத்தி அரைமணி நேராம் அறுக்குறாங்க. பேந்த,பேந்த முழிச்ச என்னை படம் இன்னும் பார்கலயானு கேவலமா பாக்குறாங்க..


(அடி ஆத்தி..!)




கார் கிளீனர் பையன்ட ஏண்டா லேட்டுனு கேட்டால்...தலைய சொரிஞ்ச்ட்டே "செகண்ட் ஷோ எந்திரன்க்கா" ங்கிறான்..


அதுக்கு இவ்வளவு லேட் டான்னு நான் மொறச்சால்..."நீ என் தலைவன் படம் பார்க்காம பேசாதன்னு" சண்டைக்கு வரான்...


(அடடே..!)




கடைக்கு போனால், கடைக்கார ஆளு, " சீக்கிரம் நவுரு..நவுரு..எந்திரன் போகனுங்குறார்..."


(ஹீ,,,ஹி.. நல்லா வேணும்..)






ஐயயோனு கோவிலுக்கு போனால்...


ஐயருமாமா "எந்திரன் பார்துட்டியானோ கொழந்தே..!" ன்னு கேள்வி கேட்டே வெரட்டி விடுறார்..


(ஹீ..ஹீ..நீ கொழந்தையா..அப்போ ஐயரு மாமாக்கு 100 வயசு இருக்குமா?)




என்னங்கடா வம்பா போச்சுன்னு...


வெறுத்துபோய்..நொந்து போய்..கொதித்து போய்..






நானும்...நானும்...


"எந்திரன் பார்த்துட்டேன்..பார்த்துட்டேன்..பார்த்துட்டேன்.."






(டிஸ்கி...அட சை..இது தான் அந்த ஒரே வரியா...??


ஆமாம்..படம் எப்புடி??)




ஹீ..ஹீ...ஆள விடு..!! பை..!!

1 comments:

Chitra said...

so, நீங்களும் ஜோதியில ஐக்கியம் ஆகிட்டீங்களா?