August 31, 2010

யப்பா..சாமி..போதுமடா..சாமி..


இப்படி குடும்பமே அலறின விஷயம் கேள்வி பட்டிருக்கிங்களா?? நாங்க அலறிருக்கோம்..இதோ ஸ்டார்ட் மியூசிக்..

எங்க வீட்டு பொடியன் ஆங்கில திறனாய்வு தேர்வில் மதுரையில் இருந்து கலந்து கிட்டான் ஜூனியர் கேட்டகிரி இல் ..சும்மா இல்லாமல் தேசிய அளவில் ஜெயிச்சுட்டு வந்துட்டான் ..ஜெயிச்ச சந்தோசம் கொஞ்ச நேரம் கூட தாங்க முடியலை..ஆமாங்க..என் கணவர் ஆபீஸ் இல் பையனுக்கு பரிசு தரோம் னு மூணு டிக்கெட் குடுத்தாங்க..சோதனைக்குன்னு அவங்களும் சேர்ந்து வந்தாங்க..அப்போ தான் சுறா ரிலீஸ் டைம்..என் பையன் சரியான விஜய் விசிறி..போனோமா...போனோமா....போனோமா...அட என்னங்க டைப் அடிக்கவே வரமாட்டேன்கு...இம்..அப்புறம் கேளுங்க...


போயி உட்கார்ந்தோம் தியேடேர் இல் படம் ஆரம்பிச்சது..ஒபேனிங் சாங் ம் வந்தது...நிமிந்து உட்கார்ந்தோம்..அப்புறம்..விஜய் அண்ணன் ஆரம்பிச்சார் வசனம் பேச...லேசா என் பையன் என்னை பார்த்தான்..நான் ஒரு முறை முறைச்சேன்..

அப்புறம்...யாரோ வந்தாங்க..பேசினாங்க..போனாங்க..சண்டை போட்டாங்க...பக்கத்து சீட் இல் ஒரே நாய்ஸ்..படத்துக்கு இந்த சத்தமாவது நல்லா இருக்கேன்னு..திரும்பி பார்த்தால் அங்கே ஒரு ஆளு செம தூக்கம்...கொர்று..கொர்று..ற்று...விட்டுட்டு இருந்தார்..அட டா...நாமளும் செட்டில் ஆய்டலாம் போலவே னு யோசிச்சுட்டே இருந்தேன்..என் பையன் விவரமா என் மன ஓட்டம் புரிஞ்சமாதிரி என்கிட்டே இருந்து விலகி அவன் அப்பா கிட்டே போயி எஸ்கேப்..ஐயோ..எப்படா வெளிய போவோம்னு வாட்ச் பார்க்கிறேன்..அந்த ஆளு தூங்கிட்டு இருந்ததை பொறாமையா பார்க்கிறேன்..ஓ..கடவுளே..ப்ளீஸ்...காப்பாத்து..காப்பாத்து னு கதறுகிறேன்...என் பையன் விவரமா பாத்ரூம் வருதுன்னு அவன் அப்பாவை கூப்பிட்டு கொஞ்ச நேரம் படம் பார்க்காமல் மீண்டும் எஸ்கேப்..என் கணவர் அதுக்கு மேலே விவரம்..தியேடேர் கான்டீன் ல யே செட்டில் ஆய்ட்டார் உள்ளே வராமல்..வீட்டுக்கு ஓடி போயடலம்னால் கூட வந்த கும்பல் தப்பா நினைசுருவாங்கனு வேற உறுத்தல்..படமும் புரில..ஒரு எழவும் புரில..இடையில் தோழியின் குறுஞ்செய்தி.."da..where r u now??" நான் வெறுப்புடன் "shit!..in hell nowdi வெளக்கென்ன ."..னு அனுப்ப..பொறுத்து பொறுத்து பார்த்தேன்..என் கணவர் வந்தவுடனே,அப்படிக்கா தோளில் சாஞ்சு தூங்க ஆரம்பிச்சுட்டேன்..படம் முடிஞ்சுருச்சு போலே..என்னை தட்டி எழுப்பி விட..அவரின் உன்னொரு பக்கம் விஜய் ரசிகன் செம தூக்கத்தில்(அதாங்க என் பையன்)..ஒரு வழியா எல்லாரும் வெளிய வந்தோம்...பொய்யா(மனசுக்குள் "அடுத்த விஜய் படத்துக்கு உங்களை தியேட்டர் குள்ளே அனுப்பிட்டு..வெளி கதவை பூட்டி வச்சுட்டு வரல னு எல்லாம் சபதம் போட்டுகிட்டு)நன்றி..எல்லாம் சொல்லிட்டு..வீட்டுக்குள் வந்துட்டு நாங்க எல்லாரும் சொன்ன வார்த்தை தாங்க இந்த புலம்பலின் தலைப்பு...அதே தான்...அதே தான்.."யப்பா..சாமி..போதுமடா..சாமி.."

10 comments:

ஆனந்தி.. said...

கவி..நம்ம வூட்டு பக்கம் வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் பா..நீங்க சொன்ன டிப்ஸ் உடனே follow பண்ணிட்டேன் பா..உங்க வூட்டு பக்கமும் அப்போ அப்போ வந்துட்டு போயிட்டு தான் இருக்கேன்..

ஆனந்தி.. said...

மாமி..விட்டு கலக்கிட்டு இருக்கீங்க போங்க...

ஆனந்தி.. said...

ஆஷிக்..தேங்க்ஸ் பா..

ஆனந்தி.. said...

ஆமினா..தேங்க்ஸ் பா..

mohana ravi said...



ஆனு! நீங்க ஒரு மானு!

பாத்தேளா சுறா!
ஆனேளோ புறா!

ஓசில கெடச்சுதேன்னு ஓடி வந்து பாத்தேளோ!
காசிக்கு போலம்னு பாத்தவுடன் தோணினதா!

குடும்பதுடன் பார்பதற்கே குரும்படமோ அதுவேதான்!

ஆனந்தி.. said...

அட நீங்க வேற மாமி...கூட்டி போனவங்க இவரோட அலுவலக டீம் மெம்பெர்ஸ்..இவர் தான் பாஸ்..ஒரு வேலை ஏதாவது உள்குத்து வச்சு பாஸ் ஐ பழி வாங்கிட்டாங்கலன்னு தெரியலே..வீ ஆர் பாவம் மாமி..

ராசராசசோழன் said...

same blood...

ஆனந்தி.. said...

அட..உங்களுக்கும் சுறா அனுபவம் இருக்கும்போலே..சூப்பர்ரூபா...

cheena (சீனா) said...

அன்பின் ஆனந்தி

வேணும் நல்லா வேணும் - இது மாதிரி தண்டனை வேணும்

ஆமா 4 மறுமிழ்ய காணோம் - அதுக்கு பதில் மட்டும் இருக்கு - எப்பூடி ....

தேசிய அளவில் வெற்றி பெற்ற பொடியன் விஜய் இரசிகனுக்கு பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Jerry Eshananda said...

lol.