August 23, 2010

வேறொன்றும் தேவை இல்லை!!

"கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்!!

என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்
!!"

"ஏய் என்னானதோ, ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணமல் நான் இல்லை!!
என்மீதிலே உன் வாசனை எப்போதும் வீச பார்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை!!!
நீ என்னை காண்பதே, வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே
!!"

இந்த வரிகள் இப்போ சமீபமாய் வந்த "நான் மகான் அல்ல" படத்தில் வரும் பாடல் வரிகள்..என்னவோ இந்த வரிகள்,பாட்டின் மெட்டு எல்லாமே ரொம்பவே பிடிச்சு இருந்தது..FM இல் அதிகமாய் இந்த பாட்டு கேட்டு பிடிச்சு போய்டுச்சு..காட்சி அமைப்பு எப்படி எடுத்துருக்காங்க னு தெரியல..சில பாட்டுக்கள் கேட்க ரொம்பவே பிடிக்கும்..ஆனால் பார்க்கும்போது வெறுப்பாய் இருக்கும்..எந்திரனில் அவ்வளவாய் எந்த பாட்டும் கேட்கும்போது எனக்கு கவரலை..trailer இல் அந்த பாட்டுகள் காட்சி அமைப்பு பார்த்துட்டு அசந்துட்டேன்..உல்டாவா இப்படி மாறியும் கவரப்பட்டு இருக்கேன்..



7 comments:

mohana ravi said...



ஆஹா! இன்னா படம் மச்சினி!(மச்சிக்கு பெண்பால். ஹிஹிஹி)

சூப்பர்! கார்த்தியின் இன்னொசெண்ட்

நடிப்பு யாருக்கு வரும்!

Anonymous said...

Super Anandhi

ஆனந்தி.. said...

நன்றி எழினி..

cheena (சீனா) said...

அன்பின் ஆனந்தி

நேத்துதான் படம் பாத்தேன் - ம்ம்ம் - ஒன்னும் சொல்றதுக்கில்ல

நல்வாழ்த்துகள் ஆனந்தி
நட்புடன் சீனா

Avargal Unmaigal said...

ஆனந்தி நீங்க எழுதின கவிதை என்று நினைச்சு மனதை ஒரு கணம் உங்களிடம் பறி கொடுத்துவிட்டேன்..கடைசியில்தான் தெரிந்தது ஏதோ ஒரு சினிமாவின் பாடல் வரிகள் என்று. மதுரைக்காரிக்கு அருவாளும் அம்மிக் குழவியும் தானே தெரியும் ஆனால் இப்படியெல்லாம் எழுத தெரியுதே என்று உடம்பு எல்லாம் ஒரு கணம் புல்லரித்து போய்விட்டது.( உங்களுக்கு நல்ல ரசனையுள்ளது)

Avargal Unmaigal said...

"கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்!! "


இப்படியெல்லாம் எழுதி எழுதிதான் காதலித்தவர்கள் எல்லாம் கண்ணிரிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

ஆனந்தி.. said...

@Avargal Unmaigal
ஏலே..மாயாண்டி!! அந்த அருவாளை எடு..!!இங்க ஒரு பையனை போட்டு தள்ளனும்!! :-))