April 18, 2011

சொர்க்கம் போகணுமா?...மதுரைக்கு வாங்க...:))))))))

  
(முஸ்கி : இந்த தலைப்பை படிச்சுட்டு குண்டக்க மண்டக்க யோசிச்சவங்களுக்கு  கம்பெனி பொறுப்பல்ல..:)) )

மதுரைன்னால் ....................மல்லிகைப்பூ !!
மதுரைன்னால் .....................சுவையான இட்லி..உணவுகள்..!!
மதுரைன்னால் .....................மீனாட்சி
யம்மன் !!
மதுரைன்னால் .....................தமிழ்சங்
கம்!!
மதுரைன்னால் .....................சினிமா !!
மதுரைன்னால் .....................நல்ல செண்டிமெண்ட்!!
மதுரைன்னால் .....................வீரம் !!
மதுரைன்னால் .....................வெள்ளந்தி மக்கள்!!
மதுரைன்னால் .....................விருந்தோ
ம்பல்!!
மதுரைன்னால் .....................ஜிகர்தண்டா
மதுரைன்னால் .....................கோவில்நகரம்
மதுரைன்னால் .....................தூங்காநகரம் 
மதுரைன்னால் .....................வைகை
 
அப்புறம் ..ஹீ..ஹீ..
.....................................................................
மதுரைன்னால் .....................ஆனந்தி...
:))
..............................
........................................
..............................
........................................
 
மிக மிக முக்கியமாய் ....

மதுரைன்னால் .....................சித்திரை திருவிழா...!!!


மதுரைக்காரியா இருந்தாலும்...இந்த சித்திரை திருவிழா கூட்டத்தில் மைக்ரோஸ்கோப் வச்சு கூட என்னைத் தேட முடியாது...ஏன் ன்னால், நான் அங்கே இருக்க வாய்ப்பே இல்லை...:))))

அடித்து.நெரித்து  செல்ல/செலுத்தப்படும்  படுபயங்கரமான கூட்டத்தில் மிதமிஞ்சிய வேர்வை குளியலில், மைக்ரோ/மேக்ரோ செகண்டில் எனக்கு காண்பிக்கப்படும் கடவுள் சிலையை,நான் பார்த்தும்/பார்க்காமலும் செல்லும் அந்த நொடிகளுக்காக என்னை நான்  பெரிதாய் நிர்பந்திப்பதில்லை...:))


                                                                        மதுரை சித்திரை திருவிழாவில் மக்கள் வெள்ளம் 


ஏனோ கடவுளை பக்தியாய் நோக்குவதை விட ,தனிமை பொழுதுகளில்,சலசலப்பில்லாத,மௌனமான நேரங்களில் பரவசமாய் பார்ப்பதே என் விருப்பமாகிறது...

 நாகரிகம்,தோற்றம்,பழக்க வழக்கங்கள் மாறினாலும் என் மண்ணில் கிராமத்து வாசனை இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது...

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் திருக்கல்யாண நாளில்,மங்கள கோலங்களால் ஊரையே அழகு படுத்தி,பட்டு சேலை சரசரக்க,கழுத்தில் புதுத்தாலி கயிறுடன்..அன்று எங்கள் ஊர் பெண்களை பார்க்க உங்களுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...(ஹீ..ஹீ..என்னையும் தான்....:))))))) )
 
என்ன தான் தனிமை பொழுதுகள் எனக்கு இஷ்டம் என்றாலும்...
 
வெகு அதிகாலை எழுந்து...மஞ்சள் பூசி குளித்து...ஈர தலைமுடியில் ஓரமாய் சிறிது பூ வைத்து...ஒன்று சேர்ந்து அமர்க்களமாய் சாமி பார்க்க புறப்படும் வெகு மலர்ச்சியான பக்கத்து வீட்டு அக்காக்களை ..அம்மாக்களை..அத்தைகளை பார்க்கும்போதும்........................

 திருவிழாவில்..வெயில் களைப்பில் இருக்கும் பக்தர்களுக்கு...அன்பர்கள் தரும் மண்பானை ஐஸ் மோர்,சுக்கு...திப்பிலி,வெல்லம் எல்லாம் போட்ட பானாக்கம், அங்கங்கே தள்ளுவண்டியில் ஆசை காட்டும் கீத்து மாங்காய் பத்தைகள்....எல்லாம் பார்க்கும் போதும்................


                                                               திருவிழாவில் தள்ளுவண்டி மாங்காபத்தைகள்



திருவிழா முடிந்து,அங்கங்கே சந்தனம் தடவிய மொட்டை தலை குட்டிப்பாப்பாக்களின் வாயில் இருக்கும் பீபீ க்களும்...கையில் இருக்கும் கலர் கலர் விசிறிகளும்...பலூன்களும்...இதை எல்லாம் பார்க்கும்போதும்.............. ............


 பெரிய பெரிய  ரோல்லர் கோஸ்டரில் எல்லாம் சுத்தி சுத்தி சலிச்சு போனாலும்...அந்த குட்டியூண்டு தரையை தொட்டு விட்டு போகும் சின்ன சின்ன ராட்டினங்களும் ...கலர் கலர் வளையல்கள் குலுங்கும் குட்டி சிறுமிகளை அதில் பார்க்கும்போதும்.............. .........


                                                     குட்டி ராட்டினத்தில் குட்டி ராட்சசிகள் 
  
தூரத்தில் தெரியும் திருவிழா சாமியை காட்ட தோள் மேலே குழந்தைகளை சுமந்து போகும் பாசக்கார உறவுகளை ...பார்க்கும்போதும்....


                                                    தோளில் சுமக்கும் பாசக்கார  மதுரக்காரய்ங்க 


சிறியவர்...பெரியவர் வயது பேதம் இல்லாமல்...சோப்பு தண்ணி டப்பியில் சிறு கம்பி வைத்து ஊதிவிட்டு , மிதக்கும்   சிறு சிறு காற்று முட்டைகளை பார்க்கும்போதும்..............

                                             திருவிழாவில் சோப்பு  முட்டவிடும் மதுர இளந்தாரி 
                                     
ம்ம்....!! சில அழகான விஷயங்களை இழக்கிறேனோ ன்னு...உள்மனசு சொல்லுது...:(((

( எங்கள் மதுரையில் இன்னைக்கு கள்ளழகர் திருவிழா  ) :))

டிஸ்கி: ஹலோ மக்காஸ்..!! இன்று முதல்  வரும்  ஞாயிறு  வரை சரியாய் ஒரு வாரம் வலைச்சரத்தில் எழுதுறேன்..(18/4/2011 to 24/4/2011)..வழக்கம்போலே உங்கள் ஆதரவை அங்கும் எதிர்நோக்குகிறேன்...!! இதை படிச்சுட்டு அப்படியே அங்கிட்டு போங்க...(வராட்டி பிச்சு..பிச்சு..கொன்னு..கொன்னு :)) )

இன்று வலைச்சரத்தில் :-அதகளப்படுத்தும்" அரசியல் அதிரடி  பதிவுகள்/பதிவர்கள் 
Wow..செம....பதிவுகள் ! /Interesting Posts
 பல்சுவை "பதிவர்"களும்..பின்னூட்ட புலிகளும்...
அழகான வலைப்பூக்கள்/Beautiful blogs
வலைச்சரத்தில் இசைக்கான பதிவு...
 புதுமுகம்...அவள் அறிமுகம்...

April 4, 2011

சத்தியமாய் வோட்டு போடுவேன் மக்களே!!ஆனால்...!!


ஹாய் மக்காஸ்!! வோட்டு போட ரெடி ஆகிட்டிங்களா? எனக்கு  இன்னும் பூத் ஸ்லிப் வரல :( ஆனால்,வோட்டர் ஐ.டி கார்டை கண்ணில் படுற மாதிரி எடுத்து வச்சிருக்கேன்.:) என்ன,என் சின்ஸியர் பார்த்து புல்லரிக்குமே??:)) எனக்கு வோட்டு போடுவதில் (ப்லாக் பதிவுகளுக்கும் சேர்த்து தான்:)) ) மிகுந்த ஆர்வம் உண்டு...:)))

சின்னஞ்சிறு சிறுமியாய் , பசை மாதிரி என் தாத்தா கூடவே ஒட்டிக்கொண்டு, கைபிடித்து நான் சென்ற இடங்களில் வாக்கு சாவடியும் ஒன்று. தேர்தல் நாள் அன்று, தாத்தா காலையில் நீராகரம் குடித்து விட்டு, அநேகமாய் முதல் ஆளாய் (பூத் வீட்டிக்கு மிக அருகில்) ஓட்டு போட போகும்போது, கூடவே நானும்,நானும்..:)) எனக்கும் விரலில் மை வைக்கனும்னு அழுது அடம்பிடிச்ச நேரங்களில், தாத்தா எனக்கு இட்டு விடும் bril கருப்பு ink மட்டுமே அந்த நொடி சந்தோஷ நிறைவு...:))))


தாத்தா வீட்டு முன் அறையில், ஓரமாய் ஒரு ஸ்டீல் ஸ்டூலில் ஆச்சி(பாட்டி) கொண்டு வந்து வைத்து விட்டு போகும் இஞ்சி,மிளகாய்,மாங்காய் கலந்த பிரெஷ் வாசனை மோர் வீற்றிருக்க :)) அந்த அறையை சுற்றி, என் தாத்தா மற்றும்,என் தாத்தா வயதை ஒட்டிய இன்னும் நிறைய தாத்தாக்களின் மடியில் குட்டி பாப்பாவாய் உட்கார்ந்து,உட்கார்ந்து, புரியாமல் நான் கேட்ட டாஸ் கேபிடல்,ரஷ்ய புரட்சி,லெனின் மார்க்சிசம்,திராவிட கழங்களின் பாரம்பர்யம் :)) பற்றிய விவாதங்கள் னு எல்லாமே அப்பவும்,இப்பவும்..இந்த நொடியிலும் எனக்கு சிறிதும் புரியாத வெறும் சத்தங்கள் தான் :))) 



ஓட்டு போடும் வயது எனக்கு வந்து,தேர்தலில் வோட்டு போட முதல் ஆளாய் செல்ல எத்தனித்தபோது,செல்ல பேத்தியாய் ,கை தாங்கலாய் வோட்டு சாவடிக்கு நான் அழைத்து கூட்டி  போக, அப்போது என் அருமை தாத்தா உயிருடன் இல்லை...



வாக்கு பதியும் ஆர்வம் மிகுதியாக இருந்தாலும்,எந்த சரியான வேட்பாளருக்கு போட வேண்டும் என்பதில் குழப்பம் தான் எனக்கு ஆரம்ப நாட்களில். குடும்ப உறுப்பினர்கள்  பெரும்பாலும் வித விதமான அரசியல் எண்ணங்களை கொண்டு இருந்தாலும்,இவங்களுக்கு மட்டுமே வாக்கிடு-ன்னு எந்த அறிவுறுத்தலும்,திணிப்புகளும் எனக்கு வழங்கபடாமல்..முழுக்க முழுக்க என் சுய எண்ணங்களுக்கு கொடுத்த சுதந்திரம் இன்னும் குழப்பத்தை கூட்டியது என்பதும் உண்மை...:))))))



பிறிது வந்த நாட்களில், அரசியலை பற்றிய கண்ணோட்டங்களை சிறிது கூர்ந்து கவனிக்க(?!)..எல்லாருமே அயோக்கியர்கள்,எதுக்கு இவங்களுக்கு வோட்டு போடணும் ங்கிற குழப்பம் வேற வந்து  வேற  மாதிரியாய் திசை திரும்பியது...:))



இப்ப ஒரு மாதிரி குழப்பம் போயிருச்சு...நான் தீர்மானிச்சுட்டேன்..யாருக்கு என் வாக்குன்னு...எப்படி ன்னு இந்த உரையாடலை படிச்சால் தெரிஞ்சுப்பீங்க...:)))



(மொட்டை மாடியில் உலா போன மாலை நேரத்தில்,எதிர் வீட்டு மாடி ஆன்ட்டியுடன் சிறிது உரையாடல் ..)


ஆன்ட்டி :  ஆனந்தி! எலெக்சன் ஜுரம் வந்திருச்சா?

நான் : கட்சிக்காரங்க கிட்டே கேக்குற கொஸ்டின என்கிட்டே மாத்தி கேட்டிங்களே ஆன்ட்டி....! :))

ஆன்ட்டி : சரி!சரி! கவர் பணம் டிஸ்ட்ரீபூட் பண்றாங்களா என்ன....எனி தகவல் ???


நான் : என் கைக்கு பணம் வரல...ஸோ, தெரியல....:))

ஆன்ட்டி : அச்சோ...அப்போ கொடுத்தால் வாங்கிப்பியா ?

நான் : எஸ்...:))

ஆன்ட்டி : ஆனந்தி..!! ஆர் யூ எஜுகேடட்? நீயே இப்படி பண்ணலாமா?

நான் : ஹீ..ஹீ...! எஜுகேடட் இல்ல...எச்சிக்கல னு வச்சுக்கோங்க...:))) !! ஆன்ட்டி...அது போகட்டும்! அப்போ பணம் கொடுத்தால் நீங்க வாங்க மாட்டேங்களா ? உங்க வீட்ல ஆறு வோட்டு ஆச்சே......3,000 ரூபா ல...அப்போ வேணாமா....?
 
ஆன்ட்டி (பதறி போய்) : எதுக்கு,எதுக்குங்குறேன்...அவங்

க சொந்த பணத்தையா பிச்ச போடுறாங்க...நம்ம வரிப்பணம் தானே...வாங்கினால் என்ன தப்பு..ம்ம்...வாங்கிக்கணும் ஒருவேளை கொடுத்தால்....!!!

நான் : ஹ...ஹ...ஹா.....

ஆன்ட்டி : யாருக்கு வோட்டு போட போற?

நான்: நான் எலியா இருக்கிறத விட புலியா இருக்க ஆசை ....:))

ஆன்ட்டி(புரியாமல்) : .....?!!!

நான்(நக்கலாய் ): எப்படியும் பிரபல கட்சி வேட்பாளர்களுக்கு லட்சகணக்கில் வோட்டு விழுகும். அதோடு நான் போடும் அந்த ஒரு வோட்டு பெருசாய் தெரியாமல் போய்டும்...ஸோ அப்போ நான் எலியா தானே தெரிவேன்...

ஆன்ட்டி(கடுப்பாகி): ஆமாம்..அதுக்கு என்ன இப்போ....

நான்: ஸோ,பிரபலமில்லாத அப்பிராணி சுயேட்சைகள் வாங்கும் அந்த அரிய(??!!) 40,50 வோட்டுகளில் என் ஒரு வோட்டு பெருசாய் தெரியும் போது நான் புலி தானே...:)))

ஆன்ட்டி : ம்ம்..

நான் : ஸோ, எனது வாக்கு பானை அல்லது குடை அல்லது எவர்சில்வர் குடம் அல்லது ராக்கெட் ..இந்த மாதிரி சின்னங்கள் இருந்தால் தான் ஒரே குத்து...:))))

ஆன்ட்டி(தலையில் அடித்து கொண்டு) : அடி பாவி...பாவி...ஜனநாயக துரோகி...

நான்: இட் ஸ் மீ?? ஓகே...தேங்க்ஸ் ஆன்ட்டி...:)))



(டிஸ்கி : சிறிது நேரம் முன்னர்  எங்கள் ஊரின் பிரபலமான ரவுடி அவர்கள்,  ('அட்டாக்'
என்று முதலில் தொடங்கும் அவர் பெயர்(முழு பேரை சொல்லிட்டு வீட்டுக்கு ஆட்டோ வரவா என்ன ..அஸ்க்கு புஸ்க்கு ..:)) ) சுயேட்சையாக போட்டி இடுவதால்...மீண்டும் யாருக்கு வோட்டு என்ற விஷயத்தில் எனக்கு  குழப்பம் ஏற்பட்டு...குழப்பத்தோடு முடிக்கிறேன்...:))))))



March 14, 2011

A Short Commercial Break...:))


(முஸ்கி :என்னை தேடும் அன்பு உள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு...:) தேடாத அன்பு உள்ளங்கள் படிக்க வேண்டாம்...:))

அன்பு மக்காஸ்....:))

ஒரே அன்பு மகன் முழு ஆண்டு தேர்வு ஆயத்தம் ஆவதற்கு ,கூடஇருந்து
உதவி புரிதல் னு:) கடந்த சில நாட்களாய் நானு ஒரே ஒலக பிஸி..:)) இடையில் சிறிது சிறிது இணையம் எட்டி பார்த்தாலும் அதுக்கும் ஆப்பு...நேற்று விருந்தினர்கள் ஆஜர் ...:) ஸோ, அடுப்படி...மற்றும் மகனுடன் நானும் சேர்ந்து படிப்பு( ஹீ...ஹீ...அதானே இந்த கால பெற்றோர் நிலைமை...) ன்னு சுனாமி வேக பிஸி இல் இருக்கிறேன்...(நூலத்தில் அருமையான புத்தங்கள் வாங்கி இன்னும் தொட்டு பார்க்க கூட நேரம் கிடைக்கலை...மாலை நேர மொட்டை மாடி காற்றினை மிஸ் பண்றேன் கொஞ்ச நாளாய் :) ஸோ  ரொம்ப பிடிச்ச விஷயங்களை கொஞ்ச நாளா கோட்டை விடுறேன்..:(( )

அவனுக்கு படிப்பில் உதவி புரிகிறேனோ இல்லையோ..ஆனால் அவன் தேர்வுக்கு படிக்கும்போது நான் கணினியில் கவனத்தை செலுத்த வேணாம்னு பார்க்கிறேன்...:)

so....

மக்காஸ்...என் கடமைகளை:)) சரிவர முடிச்சுட்டு இணையம் பக்கம் விரைவில் வருகிறேன்...

இந்த அறிவிப்பு கூட போடுவதற்கு முன் கண்ணா பின்னான்னு :)) யோசிச்சேன்..ஆனால் போன பதிவுக்கு முன்னாடி பதிவர் ரமணி அண்ணா "ஏன்மா ..புது பதிவு எதுவும் போடலை" னு அன்பாய் கேட்டு இருந்தாங்க..." அட நம்மையும் தேட கூட உடன்பிறப்புகள் இருக்காங்களேன்னு கொஞ்சம் சந்தோஷம்...ஸோ...என்னை தேடும் அன்புள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு...:))


மக்காஸ்...விரைவில்
சந்திப்போம்...

Takecare and Njoy..:)))


அன்புடன் ..

ஆனந்தி...:)

March 7, 2011

(சில) ஆண்களே! (சீக்கிரம்) திருந்துங்கப்பா!! :))



சில நேரம்....சில எரிச்சல்...சில பெண்கள்... இந்த பதிவிலேயே , சில ஆண்களின் மேலயும்  கடும் எரிச்சல் இருக்குனு குறிப்பிட்டு இருந்தேன். ஓகே..அதுக்கான சுபமுஹூர்த்தநாள் டுடே ஒன்லி..:-)


ஆண் உரிமை பாதுகாப்பு (?):) காவலர்கள் யாராவது இருந்தால்...:) நோ...நோ...அருவாளை கீழே போடுங்க...கூல்..கூல்...!! :))


சிறப்பு குணாதிசியங்களை கொண்ட கடுப்படிக்கும் (சில)ஆண்கள் பற்றிய புல்லரிக்கும்:) சம்பவங்களே இந்த பதிவு...:))


கடுப்பு :1
(இந்த வகை ஆண்கள், தன் துணை மேல் அதீத பிரியம்/அவ நம்பிக்கையில் எல்லா வேலைகளையும் தன் தலையில் ஏற்றி கொள்ளும் பக்கா  perfectionist :)) )


என் திருமணத்திற்கு முன் நடந்த சம்பவம் இது..
எங்கம்மா வீட்டருகில் இருந்த ஒரு மாமியை விடிகாலையில் கோலம் போடும்போது மட்டுமே பார்க்க முடியும். அதுக்குபிறகு அவங்க வீட்டுக்குள்ளே போயிட்டால், வெளியே வரவே மாட்டாங்க..அவங்க கணவர் அந்த மாமா கிட்டே கேட்டால்.."மாமி அசடு, ஒண்ணுமே தெரியாதுன்னு " சொல்வார். காய்கறி வாங்குவது முதல் இஸ்திரி போட்டு வாங்கிட்டு வருவது வரை எல்லாமே "ஆல் இன் ஆல் அழகு ராஜா " நம்ம மாம்ஸ் தான்...வங்கி பணியாளரான மாமாக்கு திடீர் என்று ப்ரோமோஷன் கிடைக்க திருவனந்தபுரத்திற்கு  மாற்றலாகி  கிளம்பி விட, அவர்கள் குழந்தைகளின் கல்வி சிக்கல்களுக்காக மாமி மட்டும் மதுரையில்.


அதற்கு பிறகு தான் ட்விஸ்ட். வாசல்படி தாண்டி பழகாத மாமிக்கு காய்கறி வாங்குவது முதல் வங்கி கணக்குகள், வெளி இடங்களுக்கு சென்று சில அவசிய விஷயங்களை செய்தல்,EB யில் பில் கட்டி வருதல்...இப்படி அன்றாட அத்யாவாசிய விஷயங்கள் எதுவும் செய்ய அவ்வளவு சிரமப்பட்டு மூச்சு திணறித்தான் போனாங்க..காரணம் மாமா,மாமியை  அப்பாவியாகவே ஒரு ஓரத்தில் உட்கார வச்சது தான்..


இப்படிப்பட்ட க்வாலிடி உடைய ஆண்கள், ஏதோ ஒரு கட்டத்தில் பயங்கரமாய் அவங்க துணை கஷ்டபடுவாங்கனு யோசிக்க மறந்துடுறாங்க....(எனக்கு இன்னும் அந்த மாம்ஸ் மேலே எரிச்சல் இருக்கு...)


கடுப்பு-2
(இந்த வகை ஆண்கள், ஆளை விட்டால் போதும் சாமி என எந்த வீட்டு பொறுப்புகளையும் தட்டி கழிக்கும் எந்த சிறு  வேலையையும்,சிறிதும் தன் தலையில் ஏத்திக்காத செம அசால்ட் ஜாலி பேர்வழிகள் :) )


ஒருமுறை, என் பையனுக்கு கடுமையான ஜலதோஷம். மருத்துவர் ரத்த,மல பரிசோதனை செய்ய சொன்னவுடன், பரிசோதனைக்கு கொடுத்து விட்டு ,நாங்கள் லேப் பில் வெயிட்டிங் .அப்போ ஒரு பொண்ணு ரெண்டு சின்ன குழந்தைகளை கூட்டிகிட்டு தன் கணவரோட வந்தாங்க. அதுக்கு பிறகு அவங்களுக்குள் நடந்த உரையாடல் பின்வருமாறு..


பெண்ணின் கணவர்: "கிளம்புறேண்டி. நீ டெஸ்ட் பார்த்து முடிச்சுட்டு போன் பண்ணு. பிக் அப் பண்ண வரேன்.."


 பெண் : "கொஞ்சநேரம் தான் இருங்களேன். பெரியவன் பாடா படுத்துவாங்க "


பெ.கணவர்: "அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது...அது உன் வேல ...எனக்கு ஏகப்பட்ட வேல இருக்கு நான் கெளம்புறேன்..."


பெண் : "ம்ம்...சரிங்க...வீட்டுக்கு போயி எதுவும் தூங்கிராதிங்க...அப்புறம் போன் பண்ணினால் முழிக்க மாட்டிங்க "


பெ.கணவர்: "இல்ல..இல்ல...! போயி டிவி தான் பார்க்க போறேன்..."


அப்புறம் கிளம்பிட்டார் அந்த தியாக வள்ளல்..அதுக்கு பிறகு அந்த குட்டீஸை சமாளிக்க முடியாமல் அந்த பொண்ணு பட்ட பாடு இருக்கே...அவங்களோட பெரிய வாண்டு @ இன்டர்நேஷனல் வாலு , இரத்த பரிசோதனை எடுத்த நர்ஸ் கையை கோவத்தில் நல்லா கடிச்சு வைக்க :) அந்த பொண்ணு கையில் வச்சிருக்கும் குட்டி பாப்பாவும் பசிக்கு அழுக ...ஐயோ..பரிதாபமாய் இருந்தது...அந்த இடமே ரணகளமாய் இருந்தது கொஞ்சநேரம்...அவங்க பையனை யாராலும் சமாளிக்க முடியலை.


அவங்க கணவர் கூட இருந்து உதவி செஞ்சு இருந்தால் எவ்வளவு நல்லா இருந்து இருக்கும் அந்த பெண்ணுக்கு...அந்த பெண்ணின் கணவரை நினைச்சாலே செம எரிச்சலா இருந்தது அப்போ ...




கடுப்பு-3
(இந்த வகை ஆண்கள், தன் துணையிடம் நல்லது/கெட்டது எதையுமே பகிர்ந்து கொள்வதோ, உரையாடுவதோ பெரிய பாவம்னு யோசிக்கும் ஈகோ மக்காஸ்...)


இதை எரிச்சல் னு சொல்வதா,வருத்தம்னு சொல்லவான்னு தெரியலை...


தற்போது, என் தந்தை ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்.அவர் பணியில் இருந்தபோது நடந்த ஒரு வருத்தமான விஷயம் இது..


அப்பாவுடன் வேலை பார்த்த ஒரு ஆசிரியர்,  இலட்சக்கணக்கில் பட்டுவாடா செய்யும் "ஏலச்சீட்டு " தொழிலையும் சைடு பிசினெஸாக செய்து வந்தார்.புல்லட் வண்டியில் சட சட்னு வரும் துறு துறு ஆசிரியர், ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைய...அதற்கு பிறகு தான் பெரிய பிரச்சனைகள்.


அவர் தன் தொழில் சார்ந்த எந்த விஷயங்களையும், தன் மனைவியிடம் சின்ன அளவில் கூட சொன்னதில்லை போலே. பாவம்! அந்த அம்மாவிடம் ,சீட்டு போட்ட மக்கள் டிமாண்ட் பண்ண, அடுத்து யாரு, யாருக்கு பண பட்டுவாடா பண்ணனும், வாங்கணும் னு எதுவும் தெரியாமல் அந்த அம்மா நிலை குழைஞ்சு போக...


அப்புறம் அப்பாவோடு,  சில ஆசிரியைகள், சில ஆசிரியர்கள்  சேர்ந்து,காப்பீடு பத்திரங்கள் எல்லாம் வீட்டில் தேடி(அதுவும் அந்தம்மாக்கு தெரியலை ) பணம் பெற்று தந்து சுமாராய் பிரச்சனைகளை முடிச்சாங்க....


ஒரு பக்கம் அந்த ஆசிரியர் மறைவு பெரிய வருத்தம் என்றாலும்...அவர் இப்படி அவர் மனைவியை பற்றி யோசிக்காமல் இருந்த (ஆசிரியராய் இருந்தும் கூட) க்வாலிட்டி கொஞ்சம் வருத்தத்தை மீறி எரிச்சலும் எட்டி பார்த்தது எனக்கு என்பது உண்மை...


அந்த அனுபவம் எங்கள் அனைவருக்கும் பெரிய பாடமாவே தான் நினைச்சுகிட்டோம்...சாவு என்னைக்கு வந்து நமக்கு கை காட்டும்னு தெரியாது...ஆனால் நம் இறுதி பயணத்திற்கு  பின்பு நம்மை மட்டுமே நம்பி இருந்த உறவுகளை திக்கு தெரியாமல் அலைய விடுவது துயரத்திலும் துயரம்...கஷ்டமோ/நஷ்டமோ, துக்கமோ/மகிழ்ச்சியோ துணையிடம் ஷேர் பண்ணினால் என்ன குறைஞ்சுட போகுது???


என் அப்பா, என் அம்மாவிடம் அவர் காலத்திற்கு பின்பு அம்மாவுக்கு கிடைக்கும் பாதுகாப்பு தகவல்களை (பென்ஷன் விவரம் உள்பட) மிகவும் ப்ராக்டிக்களாய் விளக்கியும்,அறிவிருத்தியும் இருக்கிறார்( பிள்ளைகள் நாங்கள் இருந்தும் கூட) கொஞ்சம் நாங்கள் சென்டிமென்டலாய் பீல் பண்ணினாலும், எங்கள் தந்தை சொன்னது..."இதெல்லாம் சுடும் நிஜங்கள் தான்" !!


ஓகே...மக்காஸ்...நீங்க யாராவ்து இருக்கிங்களா அந்த கடுப்படிக்கும் க்வாலிட்டியில் ??:)))

February 22, 2011

இவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...??!!!


அவ்வை ஷண்முகி படத்தில் மார்க்கெட் காட்சியில் மணிவண்ணன் டீம் டெல்லி கணேஷ் ஐ "தெளிய வச்சு தெளிய வச்சு "அடிப்பாங்க...அது காமடி க்கு தான் என்றாலும்...காட்சியமைப்பில் சொல்ல வருவது சம்பந்தப்பட்ட ஆளு அந்த "வலியை" தெளிவா உணரனும்னு...


நேத்து எனக்கு வந்த ஒரு நியூஸ் எஸ்.எம்.எஸ்..."kasab smiled as court upheld death sentence"

உண்மைய சொல்ல போனால் இந்த பதிவு போடுவதே இந்த எஸ் எம் எஸ் படிச்சு கடுப்பானத்தில் தான்...



கசாப்...
  அஜ்மல்
கசாப்...

இவன் பேரை சொன்னாலே....ஒவ்வொரு ஈவு இரக்கமுள்ள இந்தியனுக்கும் நெஞ்சு கொதிக்கும்,பதறும்..

 

நாட்டையே உலுக்கின ஒரு ஈவு இரக்கமற்ற ஒரு பயங்கரவாதி...கொஞ்சம் கூட மனுஷதனமே இல்லாமல் மும்பையில் நடந்த திடீர் தாக்குதலில் தாஜ் ஹோட்டல்...ரயில்வே ஸ்டேஷன் உள்பட பல இடங்களில் கும்பலுடன் பொதுமக்கள்,போலீசார் உள்பட 160 பேரை போட்டு தள்ளிய கும்பலில் இருந்த ஒரு கொலைகார குரூபி..



இவன் கும்பலில்,மற்றவர்கள் பரலோகம் போக..இவன் மட்டும் மாட்டினான்....மும்பை சம்பவம் முடிஞ்சு (26 /11 /2008 ) ...இன்னும் ....வருஷங்கள் ஓடிட்டு இருக்கு...




வாய்தா...மேல்முறையீடு...ன்னு வழக்கு ஒரு நீண்ட பயணம் போலே ஓடிட்டு தான் இருக்கு...நவம்பர் 2008 இல் பிடிபட்ட அவன்..இப்போ மார்ச் 2011 ....இப்ப வரை சிரிச்சுட்டே...பாதுகாப்போடு...
வாரம் ஒரு முறை சிக்கன் பிரியாணி சாப்டுட்டு வாழும்...சக மனிதனாய்(கைதியாய்(??), நடமாட விடும் அவலம் நம் நாட்டில் மட்டும் தான் நடக்குமோ...


கண்காணிப்பு காமெரா மூலம் சட்டத்திற்கு தேவையான அத்தனை ஆதாரம் சிக்கிய  பிறகும்...நம் இந்திய சட்டத்தில் உடனே தண்டனை வழங்க அப்படி என்ன விதிமுறைகள்..லொட்டு லொசுக்ஸ்..????????????!!!!!



என்கவுன்ட்டர் இல் போடுறவனை இன்னும் பொத்தி பொத்தி வச்சிட்டு இருக்கும் ஒரு எரிச்சல் தனமான விஷயம் சத்தியமா நம்ம நாட்டில் தான் நடக்கும்....


பின்ன...அரபு நாடுகளில் கொடுங்கோல் தண்டனை செய்பவர்களுக்கு எல்லாம் அவர்கள் கொடுக்கும் தண்டனை பார்த்து என்னடா இவனுங்க இப்படி பண்றாங்கன்னு கொஞ்சம் மிரண்டுருக்கேன் ...ஆனால் நேற்று என் முடிவை மாத்திகிட்டேன்...நம்ம நாட்டிலும் ஏன் இந்த தண்டனை நடைமுறை படுத்தகூடாது...???

ஒரு கொடூரமான கொலையாளி,விவரிக்கவே முடியாத ஒரு மகாபாவிக்கு.. இன்னும் பாதுகாப்பு கொடுத்து கிட்டத்தட்ட 16 கோடி ரூபா (அவன் பாதுக்காப்புக்காம்) ம்ம வரிப்பணத்தில் இருந்து செலவழிச்சு...(நேத்து கூட வீடியோ கான்பிரன்சிங் இல் தான் அவனுக்கு விசாரணை.).காரணம் பாதுகாப்பு...


இவனுக்காய் ஒரு இந்திய வக்கீலும் அவனுக்கு ஆதரவா ஆஜராகி...(வக்கீல் சங்கத்தில் சும்மா விட்டாங்களா அந்த வக்கீலை ???!!! )...நேத்து ஹை கோர்ட் மரண தண்டணைய ஊர்ஜிதம் பண்ணுச்சாம்...ஆனால் இன்னும் கூட அவனுக்கு சான்ஸ் கொடுத்திருக்காம்...நீ மேல் முறையீடு செஞ்சாலும் செய்யலாம் பா கண்ணு ...னு....(அடுத்து ஜனாதிபதி கருணை மனு னு ஒரு பிட் ட்டு இருக்கு...)


அதான் சொல்றேன்..லூசு தனமான சட்டங்கள் நம்ம நாட்டில் இன்னும் ஏன் வச்சிட்டு இருக்காங்க...அரபு நாட்டில் இப்படி ஒருவன் செஞ்சால் இவ்வளவு நாள் அவனை ஓவியமா வச்சிட்டு இருப்பாங்களா என்ன???


பக்கத்து நாடுகளின் தாக்குதல் தொடர்ந்து நம்ம நாட்டுக்கு அச்சுறுத்தல் வந்துட்டே இருந்தாலும்...எல்லா விஷயத்திலும் "சத்திய மேவ ஜெயதே" னு கடை பிடிச்சால் ...இது மாதிரி இளிச்ச வாயனுங்களா ஆகி  ..நமக்கு  ஓராயிரம் பாதிப்பு வருவது நிச்சயம்..உறுதி...



கசாபை  எல்லாம் நடுரோட்டில் வச்சு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட்டு கல் எரிஞ்சே கொல்ல பட வேண்டிய ஆள்..இவனுக்கு என்கவுன்ட்டர் இல் கூட  சீக்கிரமா அந்த மரணம் முடிய கூடாது....


நான் முதலில் சொன்னது போலே..தெளிய வச்சு..தெளிய வச்சு மரணம் உணர பட வேண்டும்...அப்போ சிரிக்க மாட்டான் கசாப்...எத்தனை குடும்பங்கள் இவனால் நாசமாய் போயிருக்கும்...


தீர்ப்பு ஹை கோர்ட் இல் வாசிச்சு முடிச்சதும்..கசாபால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மனைவி கதறி அழுதுட்டே சொல்லிருக்காங்க.."சீக்கிரம் இவனை இந்த வாட்டியாவது தூக்கில் போட்ருங்கன்னு"


போட்ருவாங்காலா ...??? ம்ம்...அதையும் பார்க்க தானே போறோம்....

February 18, 2011

சிலநேரம்..சில எரிச்சல்..சில பெண்கள்..:))



இந்த பதிவை படிச்சிட்டு பெண்ணுரிமை(?!) கழகங்கள் யாரும் சண்டைக்கு வராமல் இருந்தாலே "யாம் பெற்ற பேறு" :))

(இங்கே "சில பெண்களை" பற்றி மட்டுமே சொல்ல போறேன் ..."சில ஆண்கள்" பற்றி மற்றொரு பதிவில் சொன்னால் போச்சு...:)) )

சில சமயங்களில், சில பெண்களின்,சில செயல்களை பார்த்தால்.. சில எரிச்சல்கள், சில கோவங்கள், சில வருத்தங்கள் உங்களுக்கு  வரலாம்..(ஹேய்...எத்தினி  'சில" ):)


எனக்கும் அப்படி வந்திருக்கு...:(

ஒருநாள்....

(என் தோழியிடமிருந்து போன்...
)

தோழி: ஆனந்தி..பாப்பாக்கு ஸ்கூல்ல ப்ராஜெக்ட் கொடுத்து இருக்காங்க..எனக்கு ஒண்ணும சரியா தெரில..நீ ஹெல்ப் பண்றியா..??

நான்: "சொல்லு என்னனு"...

தோழி: *மதுரை கலெக்டர் பெயர்?
                *இந்தியாவில் சமீபத்தில் பிரித்த புது மாநிலங்கள்...?
                * நம் துணை  ஜனாதிபதி பெயர்?
                * MLA - விரிவாக்கம் ?
                *பட்ஜெட் எதற்கு??

இந்த அரிய(?) கேள்விகளுக்கு பதில் தெரியாத தோழியை நினைத்து ஆச்சர்யபட்டு,அவளின் பாப்பாக்கு பதில் சொல்லி விட்டு தோழியிடம் பொதுஅறிவை வளர்த்து கொள்ளுமாறு அறிவுரை கூறினேன். இடைமறித்த அவள் "அஜீத்துக்கு அதுக்குள்ளே இப்படி நரைச்சிடுச்சேனு" வருத்தப்பட்டாள் :))..சரி..யக்காவ்...நீ சீரியல் பாரு..அதுக்கு தான் நீ சரியான ஆள்..னு சொல்லிட்டு போன் ஐ வச்சுட்டேன்...இத்தனைக்கும் தோழி B.com. & P.G.D.C.A  படித்தவள் ..

ம்ம்..என்னவோ நம்மில் பலருக்கு சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் காட்டும் ஆர்வம் மற்ற பொது விஷயங்களை தெரிஞ்சுப்பதில் ஆர்வம் கம்மியாய்டுது தான் இல்லையா??


இன்னொரு எரிச்சல்...

ஒரு நடுத்தர வயது அம்மா பாதி நாள் கோவில் சர்வீஸ்(??!!) பண்றதிலே தான் கழிப்பாங்க...இல்லாட்டி அந்த அம்மா கோவிலில் "ஒரு கும்பல் ஆப் பெண்களிடம் "பொறணி ஸ்பீகிங் இல் இருப்பாங்க...


அன்னைக்கு பிரதோஷம்...அதிசியமாய் நானும் கோவிலுக்கு ஆஜர்..ஒரு 7 அல்லது 8 வயசு பாப்பா முடியை விரிச்சு போட்டுட்டு(நீண்ட முடி) ரிப்பன்,சீப்பு எல்லாம் கையில் வச்சுட்டு அந்த அம்மாவை இப்படி கெஞ்சிட்டு இருந்தது.."அம்மா ஸ்கூல் ல இருந்து அப்பவே வந்துட்டேன்...காப்பி போட்டு தாம்மா..ப்ளீஸ்..டியூஷன் போவனும் மா..நேரம் ஆகுதும்மா...ப்ளீஸ் தலையாவது பின்னி விடும்மா...வீட்டுக்கு வந்துட்டு போம்மா..ப்ளீஸ் ம்மா..." அந்த அம்மா என்னவோ திட்டி அந்த குட்டியை விரட்டி விட்ருச்சு...

விரட்டி விட்ட பிறகு அந்த அம்மா கூட இருந்த பொறணீஸ் கும்பல்ஸ் கிட்டே சொல்றாங்க இப்படி "நமக்குன்னு ஒரு சுதந்திரம் இல்லை...ஒரு கோவில்ல கூட நிம்மதியா சாமி கும்பிட (?) முடியல..எப்ப பார்த்தாலும் புள்ள..புருஷன்னு பாக்க வேண்டிருக்கு..ஆணாதிக்க உலகம்..."ன்னு இன்னும் என்ன என்னவோ சொல்லுச்சு...


என்னவோ அந்த அம்மா குறிப்பிட்ட "அந்த ஆதங்கம்" என்னாலே ஏத்துக்க முடியலே..உரிமை வேற...கடமை வேற.....அந்த அம்மா ரெண்டுக்கும் கொழப்புதுன்னு மட்டும் தோணிச்சு...


கடைசி எரிச்சல் ...

சில வீடுகளில் வயசான கணவனை/மனைவியை தனியா விட்டுட்டு பக்தி,விரதம் அப்டிங்கிற பெயரால் கோவில் குளம் டேரா அடிக்கும் பெண்கள்/ஆண்கள் மேலே எப்பவும் எனக்கு வருத்தம் உண்டு...

எங்கள் வீட்டுக்கருகில் இப்படி சஷ்டி விரதத்துக்காக அந்த ஆன்ட்டி திருசெந்தூர் போயி மித மிஞ்சிய பக்தியில் அங்கேயே இருந்து விட, தனியாய் இருந்த அவங்க வயதான கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு எங்கள் ஏரியா வாசிகள் மருத்துவமனையில் சேர்ப்பித்தாங்க..


விரதம் எல்லாம் முடிஞ்சு நிதானமா வந்த அந்த அம்மா கிட்டே விஷயத்தை நாங்கள் பதட்டமாய் சொல்ல..கொஞ்சமும் சலனப்படாமல் அந்த அம்மா இப்படி சொன்னாங்க.." நான் எங்கே போனாலும்,எம்பெருமான் முருகன் பார்த்துகிட்டான் தானே ...." என்னவோ இதை கேட்டு..பக்தியை மீறி எரிச்சல் தான் வந்தது எனக்கு..

ம்ம்..சில நேரங்களில் ...சில எரிச்சல்கள் ...அதில் சில பெண்களும்...!!!!!



 

February 11, 2011

கள்ளக்காதல் சில!! நொறுங்கும் இதயம் பல.!!

"காதலில் ஏது நல்ல காதல்..கள்ளக் காதல்?"
அட ...அதானே..என்ன ஒரு அற்புதமான தத்துவம்...:))
 நம்ம புர(ச்சீ ..) இயக்குனர் சாமி சொன்னது தான் இது :))

காதலை உண்மையில் தரம் பிரிக்க தான் முடியுமா? வடிவேலு காமடி ஒன்றில் தற்கொலைக்கு முயலும் 'அல்வா வாசு" சொல்லும் வசனம் "காதல்னு வந்துட்டா..இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தா என்ன, &%$@*!#@*&^ இருந்தா என்ன "? :))


கிழபோல்டு சல்மான் ருஷ்டிக்கு இளசுகள் மேலே வரும் காதலும்(?!),அமரத்துவம் வாய்ந்த அமராவதி,அம்பிகாவதி காதலும் ஒரே அலைவரிசையில் தான் பொருத்தி பார்த்து காதல்னு (?!) முடிவு பண்ணனுமா?


மதுரை லாட்ஜுகளில் மட்டும் கடந்த ரெண்டு மாதங்களில் மூணு பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்காங்க.நகைக்காகவோ ,பணத்துக்காகவோ....ன்னால் அது தான் இல்லை. தன் புருஷன்,குழந்தைகளை விட்டுட்டு கள்ளகாதலனுடன் ஓடி வந்த அபலை(?!)கள்!!  இருப்பதை விட்டுட்டு,பறப்பதற்கு  ஆசைப்பட்டு வந்த இந்த காதல் தேவதைகள்
,அதே கள்ள உறவாலேயே கொல்லப்படுவதும் இன்னொரு வேதனை...

நல்லக்காதல் ....ன்னால் ...ன்னால்...னால் ...ல்.....

அட! அது பற்றி தான்  ஷேக்ஸ்பியர் ல இருந்து கவிஞர் தாமரை வரை புட்டு புட்டு வச்சுட்டாங்களே! நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை...

ஆனால் கள்ளக்காதல் பற்றி ,பத்தி பத்தியா சொல்ல சில விஷயங்கள் இருக்கு...

என் சித்தப்பா வீட்டின் எதிர்வீட்டில் எப்போ பார்த்தாலும் அந்த வீட்டம்மாக்கும்,அவங்க கணவருக்கும் சண்டை நடந்துட்டே இருக்கும். அவங்களுக்கு ஒரே பையன். அவனும் காதல் திருமணம் முடிச்சிட்டு வந்து அவன் புது மனைவியை அடிச்சு,தொவச்சிட்டு இருப்பான். அந்த குடும்பமே பல நேரங்களில் அப்நார்மலாவே என் கண்ணுக்கு தெரியும். சித்தி தான் ஒரு முறை சொன்னாங்க.. அந்த வீட்டம்மா தன் வயசுக்கு வந்த ரெண்டு பொண்ணுங்களையும்,கணவனையும் விட்டுட்டு இந்த ஆளு கூட ஓடி வந்து,இந்த பையனை பெத்துகிட்டதாக. 


அவங்க வீட்டில் எல்லாருமே இன்னும் ஏதோ ஒரு உறுத்தலோடவும்,அந்த பையன் ஏதோ ஒரு விதத்தில் தன் ஆத்திரத்தை தன் மனைவி மேலே காமிக்கிரதாகவும், ஒருவருக்கொருவர் ஒட்டாமலே வாழ்ராங்கலன்னு கூட பலமுறை எனக்கு தோணிருக்கு. எதுக்கு இந்த செயற்கையான பந்தம்...இந்த வாழ்க்கைக்கு தான் அந்த அம்மா ஆசைபட்டங்கலானு தெரியல..அந்த அம்மா மன அமைதிக்கு மதம் மாறி, சதா ஜெபத்தில் இப்போ எல்லாம்...!
 
(ம்ம்...கடவுள் மன்னிப்பது இருக்கட்டும். அவங்களோட ரெண்டு பொண்ணுங்களும்,கணவரும் மன்னிப்பாங்கலா னு தெரியல..)

மற்றொரு விஷயம்...

கிட்டத்தட்ட ஆறு ,ஏழு மாசம் முன்னாடி தென் தமிழகத்தில் ஒரு ஊரில் தாலுக்கா ஆபிஸ் முன்னாடி மூணு குழந்தைங்க நிக்கிறாங்க. 7 வயசு பையன் கையில் கடிதம்,அவன் அருகில் 5 வயசு தங்கச்சி பாப்பா, அவள் இடுப்பில் 1.5 வயசு இன்னொரு தங்கச்சி பாப்பா..

எதுக்கு வந்திருக்காங்க??? என்ன கடுதாசி??

கொஞ்சம் நாமும் அந்த கடிதத்தை படிக்கலாம்..

மதிப்பிற்குரிய ஐயா ,
                                     

                                         என் பெயர் அருண்குமார்(7 ),எனக்கு 2 தங்கச்சிங்க இருக்காங்க. அப்பா கூலி வேலை பார்க்கிறாங்க. ஒரு வாரமா நாங்க சரியா சாப்பிடலை. .சரியா தூங்கலை.. தங்கச்சி பாப்பா சதா அழுதுட்டே இருக்கா..அப்பாவும் அழுதுட்டே கஞ்சி காச்சி கொடுக்கிறார். அப்பா வேலைக்கு போனபிறகு நான் தான் பாப்பாவை பார்த்துக்குறேன்...பள்ளியில் நல்லா படிப்பேன்..ஆனால் இப்ப போவல...அம்மாவை ஒரு வாரமா காணோம் வீட்டில்..அம்மா பக்கத்து வீட்டு மாமா கூட போய்ட்டாங்கன்னு  அம்மாச்சி சொல்லி அழுதுச்சு.. எங்க அம்மா எங்களுக்கு வேணும்...எப்பிடியாவது அம்மாவை கண்டுபிடிச்சு கொடுங்க ஐயா "

வணக்கத்துடன்,
அருண்குமார்..

இந்த கடிதம் உடனே பரிசீலனை பண்ணப்பட்டு, தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்பார்வையில் ,மேற்கொண்டு விசாரிக்க சிறுவன் அருண்குமார் வீட்டிற்கு சென்றது...அங்கே..அங்கே..அங்கே.............................................

"பிணக்கோலத்தில்  மூன்று குழந்தைகளும், அவர்கள் தந்தையும்..."

குழந்தையின் தைரியம் தந்தையிடம் இல்லைன்னு ஊரே அழுதிருக்கு (அந்த புகைப்படம் விகடனில் வந்து இருந்தது...என்னடா மனுஷ உணர்ச்சி இது னு ரொம்ப விரக்தியா இருந்தது எனக்கு...)

என் அழகு அம்மா!!
என்னுயிர்  அம்மா!!

அப்பாக்கு தோள் சாய -
நீ அருகில் இல்லை!!

என் கன்னம் தட்டி
மிருதுவாய் கொஞ்ச-
நீ அருகில் இல்லை!!

பெரிய தங்கைக்கு
கதை சொல்லி உணவூட்ட-
நீ அருகில் இல்லை!!

சின்ன தங்கைக்கு
தாய்பால் புகட்ட-
நீ அருகில் இல்லை!!
 

என் அழகு அம்மா!
என்னுயிர் அம்மா..!!!

மகிழ்ச்சியாய்  இனியாவது இரு !!
நாங்களும் இவ்வுலகில் இல்லை.!!!!


February 1, 2011

இளையராஜா- சில சுவாரஸ்யங்கள்..!!!


என்னை பொறுத்தவரை, மொழியே தேவைப்படாத அழகான ரெண்டே விஷயங்கள்....காதலும்,இசையும் தான்..:)))
இந்த மாசம் காதல் மாசம்:) அத்தோடு இசையும் சேர்ந்தால் பொருத்தமாக தான் இருக்கும் இல்லையா?

இளையராஜா எவ்வளவு எனக்கு பிடிக்கும்னு ஏற்கனவே இதில் சொல்லிட்டேன்...:))


இசை ஞானியின் இசையில் நான் ரசித்த சில சின்ன சின்ன சுவாரஸ்யங்கள்.................


1.இசைமேதை பீத்தோவனின்  "fur elise " ட்யூன் கேட்ருக்கீங்களா?? கேட்காட்டி இப்ப கேளுங்க..time 1.13 to 1.27 இல் பியானோ கட்டைகள் வேகம் எடுத்து புகுந்து விளையாடி 1.42 இல் அப்படியே டெம்போ குறைந்து முடியும் ஆர்ப்பரிப்பு இருக்கே....இந்த ட்யூனின் ஹார்மனியில் என் ஓராயிரம் மன அலைகள் அப்படியே அடங்கி விடும் சுகானுபவத்தில் பலமுறை லயிச்சிருக்கேன்...


அப்டியே இளையராஜா இசைக்கு வருவோம்...ஏற்கனவே நான் இளையராஜா சார் இன் இசையில் மந்திரிச்சு விட்ட பொண்ணு :) அதுவும் மௌனராகம் தீம் மியூசிக் எல்லாம்............சான்ஸ் ஏ இல்ல..வயலினின் அதி அற்புத ரீங்காரம் அப்படியே இசையை தெறிச்சு நம் இமை ஓரமாய் வந்து விழும் மேஜிக் தருணம் அது.... கேட்க ஆயிரம் காதுகள் இருந்தாலும் பத்தாது....


பீத்தோவனின் "fur elise " & இளையராஜாவின்  மௌனராகம் "தீம் மியூசிக்" -ஐயும் சேர்த்து fusion போலே பரிமளிக்கும் இந்த இசை கோப்பை கேளுங்க..... யாரு ட்யூன் பெஸ்ட்...?????????? :))







2.இசைஞானியின் அதி தீவிர ரசிகர்களால் (என்னை மாதிரி :) ) இந்த பாட்டு தான் ரொம்பவே அதிகமாய் விரும்பப்பட்டு இருக்கும் னு நினைக்கிறேன்..." தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது ??!! "  (ஆட்டோ ராஜா) ."

இது கன்னடம்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி னு பலமொழிகளில் மட்டும் அதே ட்யூன் மாறாமல் வந்தாலும்..கேட்க என்னைக்குமே திகட்டாத அக்மார்க் இசை தேன்...

எந்த மொழியும்,வரிகளும் தேவைப்படாத,ஜஸ்ட் இந்த பாடலின் ட்யூன் மட்டும் இதோ...எனக்கு ரொம்ப ப ப பிடிச்ச flute டில் நிகழும் இசை சுவாரஸ்யத்தை கேளுங்களேன்...முக்கியமாய் அந்த interlude ..ம்ம்...வார்த்தைகளே இல்லை ராஜா சார்...








3.அப்புறம் ராஜா சார் பாடி தமிழ் இல் கேட்டு இருப்போம் நிறைய..வேறு மொழியில் ராஜா சார் இன் குரலில் கேட்கும்போது தன்னிச்சையா ஒரு சுவாரஸ்யம் வந்திருது...

இந்த "கன்னடா" பாட்டில் ராஜாவின் குரலை கேட்டு பலமுறை அசந்திருக்கேன். சமஸ்கிருதத்தில் தெள்ள தெளிவாய் அப்படிங்கிறதை  " ஸ்பஷ்டமாய் " னு சொல்லுவாங்க..ராஜா சார் இன் ஸ்பஷ்டமான கன்னடா சாங் இதோ..அவரின் ட்ரேட் மார்க் "ந..நா.."ஹம்மிங்கோடு ..:))


January 24, 2011

நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ??!!




நாகரிகம்..!!ம்ம்..நான் சொல்வது உடை சம்பந்தப்பட்டது இல்லை..உணர்வு சம்பந்தப்பட்டது..!! நாகரிகமற்ற,லஜ்ஜையில்லாத சில மொழி அசைவுகள் ஏனோ எனக்கு பிடிப்பதில்லை...


பள்ளி முடிந்து காரில் ஏறும் ஒரு 10 வயசு பொடியன்,வயதான கார் டிரைவர் ஐ பார்த்து அதட்டும், " ஏய்..தொரசாமி! காரை எடு.."



தன் வயிற்று பிழைப்புக்காய் வீட்டு வேலை செய்யும் ,நன்றாய் வாழ்ந்து கெட்ட வயதான அம்மாவை பார்த்து அதட்டும் சிறு வயது எஜமானியின்  "ஏண்டி...!ஒனக்கு அறிவில்ல "



இது மாதிரி கூனி குறுகி போகும் தோட்டகார அந்தோணி தாத்தா,கழிவுகளை அகற்றும் பள்ளிகூட மரகதம் அம்மா,கார் துடைக்கும் வேலு அண்ணன்.....இப்படி நிறையவே நம்மை சுற்றி....!!




நம்ம ஊரில்  உயர் நிலை,தாழ் நிலை ன்னு தகுதி வாரியாய் தரப்படும் மதிப்பு,நாகரிகம்(?) எல்லாம் இன்னும் நம்மை "குரங்கு" மனிதர்களாகவே தொடரச் செய்யுதான்னு தெரியல...



அழகான சில விஷயங்கள் பார்க்கும்போது, மொழி எதுவும் தேவைபடாமல் அதை உணரும்போது நாகரிகம் இன்னும் கொஞ்சம் உயிரோட இருக்குனு நினைச்சிருக்கேன்...பார்த்த பல  சம்பவங்களில் வெளிநாட்டு காரர்களாய் இருப்பது என் துரதிர்ஷ்டம்..:(

ஒரு முறை..

ஆட்டோக்கள் பெருகி விட்ட இந்த காலத்தில் என்னவோ
இப்போ எல்லாம் சைக்கிள் ரிக்ஷாக்களை அவ்வளவாய் பார்ப்பதே இல்லை...அரிதாய் அன்று மதுரை தெற்கு மாசி வீதியில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் செம வேர்வையோடு ஒரு 50 வயசு மதிக்க தக்க நம்ம ஊருக்காரர் ரிக்ஸா மிதிக்க மூணு வெளிநாட்டு காரர்கள் உட்கார்ந்து போய்கிட்டு இருந்தாங்க...கொஞ்ச நேரத்தில் சரியான வெயில். பழச்சாறு குடிக்க ஒரு கடையில் காத்திருந்தோம்..மீண்டும் அதே ரிக்ஸா..இந்த முறை ரிக்ஸா மிதித்தது அந்த மூணு பேரில் உள்ள  ஒரு வெள்ளைக்காரர்..மீதி ரெண்டு வெளிநாட்டு காரர்கள் நம்ம ஊரு மனிதர் மேலே தோளில் கைபோட்டு வர கொஞ்சம் நெர்வசாய் நடுவில்  உட்கார்ந்து இருந்தார் நம்ம ஊரு காரர்..


பார்த்தவுடனே சட்டுன்னு சந்தோஷமாய்..பரவசமாய்   இருந்தது.



"ரிக்ஸா மிதித்து மிதித்து

காச்சு போன -அம்மனிதன் 
கரும்பாதம்
அன்று  ஒரு நாள் மட்டும்
மென்மையானது -
அந்த வெள்ளைக்காரன்
மனசுப்போலே...!! "

நம்மில் எத்தனை பேரு ஒரு ரிக்ஸா ஊழியருக்கு இந்த அளவுக்கு பரிவு காட்டி இருப்போம்னு தெரியலை..???




இன்னொரு சம்பவம்....


ஓசூர் நோக்கிய எங்கள் அதிகாலை பயணத்தில்,சரியான பசியில் சேலம் பை பாஸில்,ஒரு ஹோட்டல் லில் காலை உணவுக்காக எங்களுடன்,சில ஐயப்ப சாமி, முருக பக்தர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு காரரும் வெயிட்டிங்..அதிகாலையில் குறைவான ஊழியர்களே அங்கே இருந்ததால் ஆர்டர் பண்ணிய ஐட்டங்கள் ஒவ்வென்றும் வர தாமதம்..எங்கள் முகச்சுழிப்புகளை மிக அழகாய், தன் புன்சிரிப்பாலும், மன்னிப்பாலும் எங்களை சரி செய்த அந்த ஹோட்டல் சர்வர் பார்த்து ஒரு புறம் எனக்கு ஆச்சர்யம் என்றால், என்னை போலவே கவனித்து...சாப்பிட்டு விட்டு கிளம்ப தயாரான போது, தான் அன்பாய் கொடுத்த பணத்தை மறுத்த அந்த புன் சிரிப்பு சர்வருக்கு  கை கொடுத்து,லேசாய் கட்டி பிடித்து பாராட்டிய வெளிநாட்டு காரரின் செய்கை பார்த்து எனக்கு பல மடங்கு ஆச்சர்யம்...

"அந்த  சின்ன புன்முறுவலில் -என்

சினம் யாவும் போயாச்சு!!"
 
நம்மில் பலர் பல நேரத்தில் புன்சிரிப்பு,நாகரிக உரையாடல், பாராட்டுதலை மறந்து விடுகிறோம்...ஆமாம் தான் இல்லையா?:))   

நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ??!!!!

January 19, 2011

திரும்பி பார்ப்பதில் ஏனோ பெரிய விருப்பம் இல்லை..:))


பெரும்பாலும் பல நேரங்களில் திரும்பி பார்ப்பதை என்னவோ விரும்புவதில்லை..அனுபவித்த கசப்பான விஷயங்களை ரீவைண்ட் பண்ணி பார்ப்பதிலும் ஏனோ பெரிய விருப்பமும் இல்லை...ஒரு வேளை அது மேலும் என்னை சோர்வாக்கும் பயமான்னு தெரியல..:)) 


சந்தோஷ விஷயங்களை லேசாக புரட்டி பார்த்துட்டு தீவிரமா யோசிக்கவும் கொஞ்சம் பயம்...அட போன வருஷம் அப்டி..இந்த வருஷம் உருப்படலையே னு ஒரு ஒப்பீடு லேசா கூட மனதின் ஓரத்தில் வரும்போது அதுவும் சில நேரங்களில் சோர்வாக்கும் அபாயமும் ஏற்படுது எனக்கு...:)))


சுவாரஸ்யம் அடிபட்டு போகும் சில தொடர்பதிவுகளில் எழுத எனக்கு அதிக யோசனை தான். எனக்கு பிடித்த பத்து பாட்டுக்கள் விரவி போயி பத்து பேருக்கு எப்படியும் பிடிக்குது. இதில் நானும் என் பங்குக்கு எழுதி அரைத்த மாவை அரைக்க இஷ்டமில்லாமல் விலகியே இருந்தும் இருக்கிறேன்..:))



"uniqueness" அடிபட்டு போகும் ஒரே மாதிரி கிளிஷே தொடர் பதிவுகளில் படிப்பதற்கு பெரிய சுவாரஸ்யங்களும் இருக்க போவதில்லை என்பது என் எண்ணம்...


"திரும்பி பார்க்கிறேன் " தொடர் பதிவில் இல் நிச்சயமாக அவரவர் தனி பிம்பங்கள்..உணர்வுகள் மட்டுமே இருக்கும் உள்ளடக்கம் னு யோசிச்சு ஒரு வழியாக என் அருமை இணைய சகோதரர்கள் கணேஷ் மற்றும் பாலாஜி சரவணன் அழைப்பினை ஏற்று இந்த பதிவு :)


என் காலடி தடம் பதிந்த  சில கடந்து வந்த பாதைகள்...


வலையுலகை தவிர்த்து என் ஒரே செல்ல மகனுக்கு கற்று கொடுக்க ரோபோடிக்ஸ் முதல் அல்காரிதம் வரை மீண்டும் தெரிந்து கொண்டு என் மூளையை  புதிப்பித்து கொண்ட தருணங்கள் ...



என் பையன் அவனுக்கு கிடைத்த பாராட்டுகள் மூலமாய் எனக்கு தேடி தந்த பெருமை மிகுந்த தாய்மை உணர்ந்த நிமிடங்கள் ...



சில அற்புத சுயதேடல் நூல்கள் தேடி படித்த தருணங்கள் ..பரிச்சயம் இல்லாத மனிதர்களின் ஒரு நொடி புன்னகைகள்...



சில வெளியூர் பயணங்கள்...பிரயாணங்களில் சந்தித்த சில குட்டி குட்டி சுவாரஸ்யங்கள்...முறுக்கி கொண்டு இருந்த சில உறவுகளின் நெகிழ்வான பாச தருணங்கள்..



போலித்தனமான சில உறவுகளை அடையாளம் கண்டுவிட்ட நிம்மதி தருணங்கள்...



இதை தவிர்த்து எல்லாமே வழக்கம்போல...வழக்கம் போல...:))



இணையம் எனக்கு புதுசு இல்லைனாலும் நாலு வருஷமாய் இணையத்தை சுத்தமாய் விட்டு விலகி இருந்த என்னை மீண்டும் இழுத்துட்டு வந்தது என் நண்பன்/வழிகாட்டி ரமேஷ்@ராசுகுட்டி..



ஆகஸ்டில் விளையாட்டாய் ப்லாக் தொடங்கி,விளையாட்டாய்(!) போய்கிட்டு இருக்கு ..எந்த இலக்கும் இல்லாமல் மனசுக்கு தோணிய மாதிரி பதிவுங்கிற(?) பெயரில் கிறுக்கிட்டு இருக்கேன்...:))


கற்று கொண்ட..உணர்ந்து கொண்ட பல விஷயங்கள் இணையத்தில் இருந்தாலும் சில சமயங்களில் இணையம் என் அரிய,பொக்கிஷ நேரங்களை "கொல்லும்"போது மீண்டும் வணக்கம் சொல்லிட்டு போயிரலாமான்னு தோணிகிட்டே இருக்கு...ஆனால் சில நெகிழ்வான,ஆத்மார்த்தமான பின்னூட்டங்களிலும்,சில அற்புதமான,பாசமான,கனிவான இணைய நட்புக்களாலும் ..



தற்காலிகமாய் 
மனம் மாறி
விடுகிறேன்.................... .....:)

January 13, 2011

இதுக்கு பேரு பக்தியா....??!!!



என்னை அதிகமாய் குழப்பிய,யோசிக்க வைத்த,சில நேரம் வாதம் பண்ண.பல நேரம் விதண்டாவாதம் பண்ண,விளங்கி கொள்ள,புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயம் "பக்தி"..

பக்தி ங்கிற பெயரில் கோவிலில் மற்றும் பொது இடங்களில் கூத்தடிக்கும் பக்தியாளர்கள்(?!) பார்த்தாலே....ம்ம்...என்னத்தை சொல்ல...


யார் வீட்டு பூக்களையோ அவசரமாய் திருடிட்டு  போயி கடவுளுக்கு படைக்கும்  சில படித்த மேதாவிகள்...நான்  அதிகமாய் எரிச்சலைடையும் பக்தி(?) சார்ந்த விஷயத்தில் இதுவும் ஒன்று...


எப்போ இருந்து பக்திக்கான  அவஸ்தையான/குழப்பமான விடை கண்டுபிடிக்கும்(?!) எண்ணம் வந்துச்சுன்னு சரியா தெரியல..ஆனால் என் வாழ்வில் நான் கடந்து போகும் சம்பவங்களில் கூட சில மைக்ரோ கணங்களில் அது தான் பக்தி னு உணர்ந்திருக்கேன்...


அந்த சில கணங்கள்.....


கோவில் போகும்போதெல்லாம் கிட்டத்தட்ட அல்லது கட்டாயமாய் அந்த கூன் தாத்தாவை பார்த்திடுவேன்..அங்கெங்கே கிழிந்த பழைய சுத்தமான கதர்வேட்டி..தோளில் சுத்திய குற்றால துண்டு,உடம்பெல்லாம் விபூதியுடன் ,தன் நடுங்கி போன கைகளுடன் தினமும் கோவிலுக்கு ஆஜர்.அவர் கொடுக்கும் சொற்ப சில்லறைக்கு தகுந்த, மிகவும் சொற்ப உதிரிப்பூக்களை கோவில் பூக்காரம்மா கொடுப்பதை வாங்கிட்டு கடவுளுக்கு அதை படைச்சுட்டு கொஞ்சநேரம் நின்னுட்டு தன் செருப்பில்லாத கால்களுடன் மெதுவாய் போயிருவார்..


இரக்கப்பட்டு யாராவது உதவவோ ,பூ வாங்கியோ  தந்தால்கூட நாசுக்காய் மறுத்து அந்த சொற்ப பூக்களோடு கடவுளை சந்திக்க சென்ற அந்த கணத்தில்....


நீ படைத்த

சொற்ப பூக்களில்
தினம் தினம்
சொர்க்கம் கண்டாய்!
என் அழகு கூன் தாத்தா..!
கண்டேன் பக்தியை...
உன் தன்மான உருவிலும்...!!!!

அப்புறம்...


குடும்பத்தோடு மீனாக்ஷி அம்மன் கோவில் போயிட்டு பூஜைகள் முடிஞ்சு வெளியே வந்தோம்..."மூணு பத்து ரூவா" னு கூவிகிட்டே கைக்குட்டைகள் கைமுழுவதும் அடுக்கி விற்பனை செய்த வாலிபன் எங்களை பின்தொடர.. கையில் வச்சிருந்த பிரசாதங்களில்  கொஞ்சம் எடுத்து என் பாட்டியம்மா அந்த பையன்கிட்டே கொடுத்தாங்க ..அவன் ஒரு நொடி தயங்கிட்டு,செருப்பை ஓரமா கழட்டி போட்டுட்டு..பயபக்தியா வாங்கிட்டான்..அப்போ தான் அவனை கவனிச்ச பாட்டிம்மா "தம்பி நீ முஸ்லிம் ஆ பா...மன்னிச்சுக்கோ ப்பா" னு பதற...அவன் சிரிச்சிட்டே "ஆமாம் பாட்டி..எதுக்கு மன்னிப்பு எல்லாம்...பாசமா நீங்க கொடுத்திங்க..இதுல எதுக்கு சாமி எல்லாம் பார்க்கணும்...னு" சொல்லிட்டே போன அந்த கணத்தில்....


நீ  விற்கும்

கைக்குட்டையை விட
உன் மனம்..
உன் குணம்..
உலகளவு பெருசு..
அற்புத மனிதனே...
கண்டேன் பக்தியை..
மதத்தை விட
மனதை மதித்த
உன் உருவிலும்....!!!!

அப்புறம்...


பாட்டியின் தீவிர கடவுள் நம்பிக்கையின் படி பூஜை,புனஷ்காரங்கள் ஒரு புறம் நடந்தாலும், மறந்தும் கோவில் பக்கம் போகாத,கடவுள் எதிர்ப்பு கொள்கையில் தீவிரமான,சுயமரியாதை விரும்பி என் தாத்தா..என் ஏழாவது வயதில்,உடம்பில் ஒரு இன்ச் விடாமல்(நாக்கு உள்பட) கொப்புளங்களுடன் கடுமையான அம்மை நோய் பிடியில் சிக்கிட்டேன்..இயற்கை உபாதை கழிக்க கூட உயிர்போகும் அளவு கத்துவேன்(அந்த இடங்களிலும்  கொப்புளங்கள் )தனியார் மருத்துவமனை ஜீ ஹெச் கொண்டு போங்கனு சொன்ன தருணத்தில்..வீடே கண்ணீரோடு..


அப்போ தாத்தா செஞ்சது நான் சாகும் என் கடைசி நொடி வரை என்னாலே மறக்க முடியாத ஒரு செயல்...கிட்டத்தட்ட எலும்பும்,தோலும்..தோலை முழுவதும் போர்த்திய கொப்புளங்களுமாய் இருந்த என்னை மெல்லிய வேஷ்டியில் சுற்றி,அப்படியே தூக்கிட்டு சாமி அறையின் வாசலில் கிடத்தினார்..உள்ளே இருக்கும் சாமி சிலைகளை பார்த்து சத்தமாய் "இந்த பிஞ்சு பிள்ளைக்கு ஏதாவது ஆச்சு...." ன்னு கத்திட்டே என்னை அவர் நெஞ்சில் போட்டுகிட்டு அழுத அந்த கணத்தில்......


இன்னும்...

என்னில்
மிச்சமிருக்கும்
அந்த ஒன்றிரண்டு
அம்மை தழும்புகளை
தினம்தோறும்
ஆசையாய் 

தொட்டு பார்க்கிறேன்!!!
மண்ணில் மறைந்து விட்ட
என் செல்ல  தாத்தாவின்
நேசத்தை அனுபவித்த
"பக்தி" யோடு...!!!!

January 8, 2011

மக்கு,டுபுக்கு ஆடிட்டர்கள் அரசுக்கு உடனடி தேவை..:))



நம்ம மத்திய அமைச்சர் கபில் சிபல் ஜீ இன்னைக்கு டக்கரு விஷயத்தை சொல்லிருக்கார்...


"2G ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் 1.25 லட்சம் கோடி அரசுக்கு இழப்பே இல்லை..அது முழுக்க முழுக்க வருமான அறிக்கை கணக்கீட்டாளர்களின் கவன குறைவே காரணம் "

 

இதை கேட்ட நம்ம பொது ஜனத்துக்கு செம டவுட்டு...ஸோ, சில கேள்விகள் சிபல்ஜி யிடம் ...



அப்பாவி பொதுஜனம்: சிபல் ஜீ ! அப்போ என்ன தான் சொல்ல வரிங்க?



சிபல் ஜீ:  ஜனம் ஜீ! ஸ்பெக்ட்ரம் கணக்கு ஆடிட் பண்ணிய
பசங்க ஜீ யை டோடல் ஆ செக் பண்ணிட்டோம் ஜீ! அவங்க  எட்டாப்பு பெயில் ஜீ, ஒண்ணா நம்பர் பிராடு ஜீ! அவங்க போலி சர்டிபிகேட்ஸ் விவகாரம் சி பி ஐ கிட்டே கொடுத்துருக்கோம் ஜீ...


அ.பொ: அப்போ நீரா?



சிபல் ஜீ: மீரா ஜீ?? அழகான நடிகை ஜீ! கருணாநிதி ஜீ படத்துல வருவாங்க ஜீ...



அ.பொ : ஐயோ..நீரா ராடியா? அந்த கேசட் ??



சிபல் ஜீ: ஓ! நீரா ஜீ பாவம் ஜீ! ஆக்சுவலா ஜீ..நீரா ஜீ ஒரு சிங்கர் ஜீ..."பெண் சிங்கம்" பாட்டுகளை பாடி பார்த்துட்டு இருந்ததை ஒருத்தன் கேசெட் போட்டு வெளிய விட்டுட்டான் ஜீ...நீங்க அதை தானே கேட்கிறிங்க ஜீ??



அ.பொ: இல்ல..உளவு துறையின் டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம்????



சிபல் ஜீ: ஓ! அதையேன் கேட்கிறிங்க ஜீ...உளவு துறையிலும் சம் பீப்பில் பிராடு ஜீ...சம் மிமிக்க்ரி ஆர்டிஸ்ட் போலி சான்றிதல் கொடுத்துட்டு அங்கயும் வேலைக்கு வந்துட்டாங்க ஜீ...வீ  வில் இன்பார்ம் டு சி பி ஐ...



அ.பொ : அப்போ ராஜா?



சிபல் ஜீ: இருங்க...கருணாநிதி ஜீ சொல்லுவார்...



கருணாநிதி: கழக கண்மணிகளே! அன்பின் உடன் பிறப்புகளே...! விடிவெள்ளி மீண்டும் பூத்தது...களங்கம் தீர்ந்தது...நிதி குடும்பத்தின் நீதி உலகுக்கு தெரிந்தது
...வரும் தேர்தலில் எள்ளியவர்களை ஓரம் கட்டி...உதய சூரியன் சின்னத்தில் .....


அ.பொ: (இடை மறித்து) மொதல்வர் ஐயா! ஸ்பெக்ட்ரம் ராஜா??



கருணாநிதி: குற்றமற்ற என் கழக கண்மணி என் செல்லம் ராஜாவை ஆறுதல் படுத்த கனிமொழி தலைமையில்
கழக மகளிர் அணி குழு விரைகிறது...:))


அ.பொ: சுடுகாட்டு கூரை ஊழலில் உங்க கட்சியில் சேர்ந்த மாஜி மந்திரி விடுதலையாமே?



கருணாநிதி: ஆமாங்க கண்மணி! அவருக்கு எதிராய் கேசில் வாதாடிய வக்கீல் போலி வக்கீல் என்றும்,ரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்து போலி சான்றிதல் பெற்று........................
......
(கண்மணி எங்க ஓடுறிங்க....????? )


பொதுஜனம் தெறித்து வெளியே ஓடி வந்து கீழ்பாக்கம் வண்டியை பிடிக்கிறார்...:)))

January 4, 2011

ஆண்களே! இது உங்களுக்கான பதிவு..:)))



என்னடா..ஆண்களுக்கான பதிவுன்னால் "குண்டக்க..மண்டக்க"(?!?!%#%) இருக்குமோனு என்னை மாதிரியே யோசிக்காமல்..பெண்களே தைரியமா நீங்களும் படிக்கலாம்:)))


சரி விஷயத்துக்கு வரேன்..



"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடி ஒரு பெண் இருப்பாள் " அப்படின்னு நம்ம எள்ளு தாத்தாவோட கொள்ளு தாத்தா வரைக்கும் எல்லாரும் சொன்ன  விஷயம்...இன்னும் சொல்ற  விஷயம்..! ஸோ,அதை பேசினால் மாமூல்..இப்ப கொஞ்சம் உல்ட்டாவான விஷயம் சொல்ல போறேன்  :))



"ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆண் இருப்பான்" ன்னு அவ்வளவு உறுதியாக..பரவலாக..நிச்சயமாக..

சத்தியமாக :)))) எல்லாரும் சொல்றாங்களா?? :)) நோ தானே...:))


ஆனால் அப்படி கொஞ்சூண்டு :)) உறுதியாய் சொல்றமாதிரி சில சம்பவங்களும் அங்க இங்கனு நடக்குது...


ஏன் இவ்வளவு பில்டப் ன்னால் இப்போ லேட்டஸ்ட் ஆ ஒரு அழகான செய்தி படிச்சேன்...அதான் இந்த பதிவையே எழுத தூண்டுச்சு...


அம்பிகா,10 ம் வகுப்பில்,திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடம்,ஆனால் குடும்பத்தில் வறுமையும் முதலிடம். படிக்க வழியில்லாமல் உறவு பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க..அவள் கணவர் மனைவியின்
திறமை தெரிஞ்சு படிக்க வச்சிருக்கார்...இப்போ அந்த பொண்ணு ,
அம்பிகா I.P.S.,
 w/o திருப்பதி சாமி (போலீஸ் கான்ஸ்டபிள்)



அப்புறம் சில பயோக்ராபிஸ் படிக்கும்போது நான் வியந்த, மேலும் சில நிஜங்கள் இதோ...

முதலில் குழந்தைகளை பார்த்துக்கிற கேர் டேக்கர் வேலை பார்த்துட்டு இருந்த புத்திசாலி போலந்து பொண்ணு தான் மரியா ..தன் கூடவே ஆராய்ச்சி செய்ய வச்சு அருமையா ஊக்கபடுத்தியது அவங்க கணவர் தான். மரியா  கதிரியக்கங்களை பற்றி ஆராய்ச்சி பண்ணி..நோபல் பரிசு எல்லாம் கூட வாங்கினாங்க..ரெண்டு வாட்டி..! வெறும் மரியா னால் புரியாது உங்களுக்கு. .இப்ப தெரியுதான்னு பாருங்க..
Dr. மேரி க்யுரி ,
w/o Dr. பியரி க்யூரி (வேதியல் நிபுணர்) 


பஞ்சாப் ல படிச்ச கல்பனா  ங்கிற பொண்ணு எக்கச்சக்க கனவோட விண்வெளி இயல் எல்லாம் படிக்க அமெரிக்கா வந்துச்சு.அந்த பொண்ணை ஊக்கபடுத்தி விமான பயிற்சி சொல்லி கொடுத்தது கூட கல்பனாவின் கணவர் தான்..இந்த பயிற்சி எல்லாம் கல்பனாவுக்கு பின்னாளில் NASA வில் ரொம்ப உபயோகமா இருந்தது...இது யாருன்னு புரிஞ்சிருப்பிங்க...
கல்பனா சாவ்லா,
w/o ஹாரிசன் (விமான பயிற்சியாளர்)

 

கேட்டது...படிச்சது தானே சொல்ற...கண்ணால ஏதாவது பார்த்திருக்கியானு மாற்று கருத்து:)) கேட்க போறிங்களா?..ம்ம்..இதையும் தொடர்ந்து படிங்க...




வலிப்பு நோயின் காரணமாய் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மையில் மனத்தால் இறுகிபோய் வீட்டை விட்டே வெளியே வராத ஒரு பெண்ணை அவள் கணவர்,அவள் போடும் அழகு கோலங்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, அவள் திறமையை முதலில் அவளுக்கு உணர்த்தினார். இன்னைக்கு அந்த பெண் எம்பிராய்டரி, ஹன்டி கிராப்ட்ஸ் சொல்லி கொடுக்கும் பிஸி ஆசிரியை...அவங்க,

தேவகி அக்கா,
w/o செழியன் அண்ணா (பழைய பேப்பர் வியாபாரி) 


என் உதாரணங்கள் கூட அங்க இங்கனு கூட்டி கழிச்சு விரல் வச்சே எண்ணி விடுகிற நிலைமை தான் இல்லையா? இந்த எண்ணிக்கைகள் எண்ணவே முடியாத infinitive  ஆ போக கூடிய நிலைமைக்கு வரணுங்கிறது தான் என் பிக் பிக்.. வெரி வெறி ஆசை..:))


ஒரு பக்குவபட்ட ஆண் நினைத்தால் அவன் மனைவியை சிற்பமாய் செதுக்க முடியும். மாமூலான விஷயங்கள் தவிர்த்து ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதோ ஒரு சிறப்பு டேலேன்ட் உறுதியாய் இருக்கும். அதை கொஞ்சம் தூசி தட்டி விட்டாலே போதும்...அவள் பிரகாசிப்பாள்..ஜொலி ஜொலிப்பாள்..



ஸோ...

கல்யாணம் ஆன ஆண்களே...தீர்மானிங்க! :))
கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! :))



டிஸ்கி.."போம்மா..நீ வேற..எங்க வீட்டம்மா கிட்ட தெனமும் கும்மாங்குத்து:)) வாங்கி..வாங்கி இப்ப பேச முடியாம வாய் கூட வீங்கி கெடக்கு " ன்னு புலம்பும் பச்ச புள்ள ஆண்களுக்கான டிப்ஸ் : " ஏன் நீங்க அவங்களை ஊக்க படுத்தி ஒரு கராத்தே மாஸ்டர் ஆகவோ..ஒரு குங்-பூ வீராங்கனையாவோ ஆக்க கூடாது."..:)))ஆண்களே இதையும் கொஞ்சம் யோசிங்க...:))))))